போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒருகோடி கையெழுத்து பெறும் இயக்கத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், திரைக் கலைஞர்கள் சசிகுமார், வெற்றிமாறன்,ஏ.ஆர்.ரெஹானா, எழுத்தாளர் கரன் கார்க்கி, விசிக செய்தி தொடர்பாளர் விக்ரமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக செயற்பாட்டாளர் பேரா. சுந்தரவள்ளி, யூடியுபர் மதன்கவுரி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டடனர். வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் எ.வி.சிங்காரவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.