cinema

img

திரை விமர்சனம்! இடம், பொருள், ஏவல் - ஜி.ராமகிருஷ்ணன்

வழக்குகளை சந்தித்து அதில் வென்று மக்கள் மனங்களை வெல்ல வருகின்றது இயக்குநர் சீனுராமசாமியின் இடம் பொருள் ஏவல். திரையிடலுக்கு முன்பாக இப்படத்தை காணும் வாய்ப்பை பெற்றேன். பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சீனு ராமசாமி. இயக்குநரின் மற்றப் படங்களைப் போலவே இந்தப்படமும் தேர்ந்த கதை வழியாக செய்தி ஒன்றை அழுத்தமாகச் சொல்கிறது.  மூன்று தடங்களில் பயணிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ முடிவில் ஒரு புள்ளியில் சந்தித்து நம் மனங்களை கவர்கிறது.'

கூலிக்கு கொலை செய்யும் பாண்டி, அவன் சந்திக்கும் மாற்றங்கள் ஒரு தடம்- சொந்தத் தொழில் தொடங்குவதை இலக்காக கொண்டு நாயகி தமிழ்ச்செல்வியின் அன்புக்கு பாத்திரமான ஆசையின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் அடுத்த தடம்- கேடு கெட்ட சமூகத்தில் நாம் தடம் மாறி போய்விடக்கூடாது என்ற சத்தியாவேசம் கொண்டு கொடைக்கானல் மலைமக்களின் நியாயக்குரலை ஒலிக்கும் செங்கொடி மாரியப்பனின் போராட்டங்கள் மூன்றாவது தடம் என திரைப்படம் நம்மோடு பேசுகிறது. மூன்று தடங்களும் மானுடத்தின் மீதான நேசம் அறம் எனும் புள்ளியில் சங்கமிக்கிற பொழுது இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் களத்தில் நின்று போராடி வருகிற அறநீதிக்கு துணை நிற்கும் படமாக இதனைக் கொள்ளலாம். கதைக்கு ஏற்ற திரைக்கதை, பாத்திரங்களுக்கான சமூகப்பார்வையை  உணர்த்தும் உரையாடல்கள் சிறப்பானது. “நக்சலைட்னா யாருங்க” என்று தீப்பெட்டி கணேசன் கேட்பதற்கு “கையில் துப்பாக்கி வெச்சிருப்பாய்ங்க” என வனக்காவலர் பதில் சொல்கையில், காவலரின் கையில் இருக்கும் துப்பாக்கியைக் காட்டி , “இது என்ன கொழம்புக்கரண்டியா ?”  என  ஆளும்வர்க்கத்தை நக்கலடிக்கும் அந்த வசனம் ஒரு உதாரணம்.

சமூகத்தில் அறவுணர்ச்சிகள் பாதிப்படைந்து வரும் சூழலில் தம் போராட்டங்கள் வாழ்வு வழியாக அறநீதியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவராக அற்புதமாக நடித்திருக்கிறார் மறைந்த தோழர் பூ இராமு. கதாநாயகர்களாக விஜய்சேதுபதி,விஷ்ணுவிசால் நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதாஸ்வேதா சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.நம் தோழர்கள் நந்தலாலா, சோழ நாகராஜன் படத்தில் பங்களித்திருக்கிறார்கள்.பட்டிமன்ற பேச்சாளர் நண்பர் ஞானசம்பந்தன் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமி, யுவன்சங்கர்ராஜா,கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகள் இயக்குநர் சீனு ராமசாமி. இத்தகைய படங்களின் வெற்றிக்கு அறநீதிக்காக போராடுவோர் இடதுசாரிகள் சார்பான அமைப்புகள் மக்கள்திரள் உடன் நின்று உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கொந்தளிப்புடன் காணப்படும்  தரங்கம்பாடி கடல் பகுதி

மயிலாடுதுறை நவ.10-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படுவதால் சுற்றுலா பயணி களின் வருகை குறைந்து காணப்படுகிறது.  புகழ்பெற்ற வரலாற்றுச் சின்ன ங்கள் நிறைந்த  சுற்றுலாத்தலமான தரங்கம்பாடிக்கு நாள்தோறும் ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக ஓசோன் வாயு  கலந்த காற்று தரங்கம்பாடி கடல் பகுதியில் அதிகமாக வீசுவதால் அதை சுவாசிப்பதற்காகவே அதிகளவில் இங்கு கூடுவது வழக்கமாக உள்ளது.  இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால்  கடல் கொந்தளிப்பாக காணப்படு கிறது. மேலும் கடலில் இறங்கி குளிக்க வும் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வரு கின்றனர். ஆனால் அதையெல்லாம் சில சுற்றுலா பயணிகள் பொருட் படுத்தாமல் கடலில் இறங்கி குளித்து  விளையாடுவதோடு, அலைகள் மோது கின்ற பாறைசுவர் பகுதியில் நின்று கொண்டு விபரீத விளையாட்டில் ஈடு பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.