cinema

img

பிரகாஷ் ராஜ் ‘நகர்ப்புற நக்சலாம்’: காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் ஆத்திரம்

அண்மையில் திருவனந்தபுரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ‘காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்தைப் பார்த்து விட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினார்கள். இந்த லட்சணத்தில் ‘காஷ்மீர்  பைல்ஸ்’ படத்தின் இயக்குநர், ‘எனது படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்க வில்லை?’ என்று கேட்கிறார். ‘ஆஸ்கர்’ இல்லை ‘பாஸ்கர்’ விருது கூட, அவருக்குக் கிடைக்காது” என்று கிண்டலடித்திருந்தார். இந்நிலையில், “ஒரு சிறிய, மக்கள் படம் #காஷ்மீர்  ஃபைல்ஸ் நகர்ப்புற நக்சல் களுக்கு தூக்கமில்லாத இரவு களைக் கொடுத்துள்ளது” என டுவிட்டரில் பதிலளித்துள் ளார். “ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு எதிராக  நிற்கும் இவர்கள் யார்? இவர்கள்தான் மோப்லாக்கள் மற் றும் காஷ்மீரின் உண்மைகளை வெளியே வர அனுமதிக்கா தவர்கள்” என்றும் ஆத்திரம் அடைந்துள்ளார்.