cinema

img

சினிமா ராணியைத் தெரியுமா?

அவரது இயற்பெயர் திருவையாறு பஞ்சாபகேச ராஜ லட்சுமி எனும் டி.பி. ராஜலட்சுமி. ஆனால், அந் நாளைய தமிழ் சினிமா ரசிகர்கள் அன்போடு அவரை  எப்படி அழைத்தார்கள் தெரியுமா? சினிமா ராணி.  தமிழ் சினிமா பேசத்தொடங்கியபோது வெளிவந்த முதல்  படம் காளிதாஸ் (1931). அதன் நாயகி டி.பி.ராஜ லட்சுமி. அதாவது, தமிழ்  சினிமாவின் முதல் கதா நாயகி அவர். அதுமட்டுமா? திரைத்துறையின் அந்  நாளில் அவர் எடுத்த அவ தாரங்கள் அநேகம். அவர் செய்த சாதனைகள் பல.  1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம் மிஸ் கமலா.  அதன் நாயகி டி.பி.ராஜலட்சுமிதான். அதுமட்டுமல்ல... மிஸ் கமலா படத்தின் கதை கமலவல்லி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கமலவல்லி நாவலை  எழுதியது அதே டி.பி.ராஜலட்சுமி. மிஸ் கமலா படத்தின் திரைக்கதையை எழுதியது வேறு யாருமல்ல... டி.பி.  ராஜலட்சுமியேதான். இன்னொரு சுவாரசியத் தகவல் வேண்டுமா? அந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அவரும் அதே சாட்சாத் டி.பி.ராஜ லட்சுமி.  மிஸ் கமலா படத்தைப் பற்றிய வியப்புத் தகவல் இத்தோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. அதன்  பாடல்களையும் அவரே எழுதி, படத்தின் இசையமைப்பை யும் அவரே மேற்கொண்டார். படத் தொகுப்புப் பணி - எடிட்டிங்கும் அவரே செய்தார். இத்தனைக்குப் பிறகு  அந்தப் படத்தின் இயக்குநர் யாரென்று கேட்பீர்களே யானால் அதற்கான விடையாகவும் இருப்பது டி.பி.ராஜ லட்சுமிதான். ஆமாம், மிஸ் கமலாவுக்கு இத்தனை பெருமைகள். ஒரு  நடிகை என்று அறியப்பட்ட பெண் கலைஞர் ஒருவர் அந்தப்  படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு,  இயக்கம் என்று அத்தனையையும் தன் தலைமேல் போட்டுக்  கொண்டு அந்த நாளிலேயே அப்படியானதொரு துணிச்ச லான சவாலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்.  இயக்குநர் என்ற முறையில் தமிழில் மட்டுமல்ல... டி.பி. ராஜலட்சுமி தென்னிந்தியாவிலேயே முதல் பெண் இயக்கு நர் என்ற பெருமைக்குரியவரானார். இந்தியாவில் அவர் இரண்டாமவர். (முதலாமவர், புல்புல் இ பரிஸ்தான் என்கிற  பேசாப் படத்தை 1926 லேயே இயக்கிய ஃபாத்திமா பேகம்  என்பவர் ஆவார்.)