இளையராஜாவுடன் பத்ரகாளி படத்தில் இணைந்தவர் புல்லாங்குழல் கலைஞர் சுதாகர். அதற்கு முன்னர் இளையராஜாவின் குருவான ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றினார் சுதாகர். இளையராஜாவின் ஹெள டு நேம் இட் இசை ஆல்பத்திலும் சுதாகரின் சிறப்பான குழலிசையை ரசிக்கலாம். சின்னக் கண்ணன் அழைக்கிறான், இளைய நிலா பொழிகிறதே, அழகிய கண்ணே, புத்தம்புது காலை, பனிவிழும் மலர்வனம் உள்ளிட்ட பல பாடல்களில் சுதாகரின் தேமதுரக் குழலிசை விளையாடியிருக்கிறது. அந்தக் குழலிசை அமைதியுற்றது. சுதாகர் என்ற அந்தக் குழலோசைக் கண்ணன் மறைந்த செய்தி இசை உலகினரைக் கலங்கச் செய்துவிட்டது. ரசிகர்களையும்தான்!