திருவனந்தபுரம், டிச. 9- 28 ஆவது கேரள சர்வதேச திரைப் பட விழா திருவனந்தபுரத்தில் கோலா கலமாக தொடங்கியது. இந்த விழாவை ஆன்லைனில் தொடங்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகை யில், இந்த ஆண்டு திரைப்பட விழா வில் திரையிடப்படும் ஒருமைப்பாட்டு திரைப்படங்கள், போராடும் பாலஸ்தீன மக்களுடனான கேரளத்தின் ஒருமைப் பாட்டை உலகிற்கு தெரிவிக்கும் என்றார். நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக நானா படேகர் கலந்து கொண்டார். முதல்வர் மேலும் தனது உரையில், திரையிடப்படும் திரைப் படங்களின் அரசியல் உள்ளடக் கத்தைப் பொறுத்தவரை ஐஎப்எப்கே (IFFK) உலகின் எந்த திரைப்பட விழாவிற்கும் இணையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை என குறிப்பிட்டார். அரிதான கண்காட்சிகள் மட்டுமே இத்தகைய அம்சத்தை கோர முடியும். இந்த ஆண்டுக்கான ஸ்பிரிட் ஆஃப் சினிமா விருது கென்யாவைச் சேர்ந்த இயக்குநர் வானூரி கஹியுவு க்கு வழங்கப்படுகிறது.
வானூரி கஹியு கென்ய சூழலில் காலனித்துவத்தின் எச்சங்கள் இன்னும் இருக்கும் சூழலில் தடைகள் மற்றும் தணிக்கைக்கு எதி ராகப் போராடும் கலைஞர். இந்த கலை ஞரை கவுரவிப்பதன் மூலம் இந்த திரைப்பட விழாவும் நம் நாடும் யாருடன் நிற்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துகிறது என்றார் முதல்வர். விழாவிற்கு கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் ஆன்லை னில் தலைமை தாங்கினார். விழாவில் வானூரி கஹியுவுக்கு ஸ்பிரிட் ஆஃப் சினிமா விருதை மேயர் ஆர்யா ராஜேந்திரன் வழங்கினார். விழா அட்ட வணையை வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ., கலாச்சார செயல்பாட்டாளர் கள் நல வாரிய தலைவர் மதுபாலி டம் வழங்கினார். ஐஎப்எப்கே வெளி யீட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.சுரேஷ்குமார் பண்பாட்டுத் துறை இயக்குநர் என்.மாயாவிடம் வழங்கினார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியின் அகாடமி ஜர்னல் பிலிம் ரிவியூவின் விழாப் பதிப்பினை திரைப்பட அகாடமி துணைத் தலைவர் பிரேம்குமார் வெளியிட்டார்.
வெவ்வேறு மொழிகள் பேசினாலும் உணர்வு ஒன்று: நானா படேகர்
வெவ்வேறு மொழிகளைப் பேசி னாலும் நமக்கு ஒரே உணர்வுதான் உள்ளது என்று நடிகர் நானா படேகர் கூறினார். மகாராஷ்டிராவிலிருந்து கேரளாவுக்கு வந்து இங்கு பேசும் மொழி வேறு என்றாலும், உணர்வில் வேறுபாடு இல்லை என்று நானா படேகர் கூறினார். சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இதுவரை தன்னை யாரும் மலையாள சினிமாவுக்கு அழைக்கவில்லை என்றும், விரை வில் அந்த நம்பிக்கை நிறைவேறும் என நினைப்பதாகவும் நானா படேகர் மேலும் கூறினார்.
முதல் நாள் போட்டியில் 7 திரைப்படங்கள்
சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் படங்களின் திரையிடல் சனியன்று தொடங்கியது. உயிர், காதல், த்ரில்லர் போன்ற சமகால நிகழ்வுகளை கருப்பொருள்களாக கொண்ட ஏழு படங்கள் முதல் நாளான சனியன்று போட்டியில் பங்கேற்றன. அவை சதர்ன் ஸ்டோம், பவர் அலி, தி ஸ்னோ ஸ்டோம், ஆல் தி சைலன்ஸ், ஆக்ரா, தடவு, பேமிலி ஆகியவை ஆகும். பாசில் ரசாக் எழுதி இயக்கிய தடவ், டோன் பாலத்தர இயக்கிய பேமிலி ஆகியவை சனியன்று நடந்த போட்டியில் பங்கேற்றன. ஐம்பது வயது அங்கன்வாடி ஆசிரியை கீதாவின் வாழ்க்கைதான் தடவ்-ன் கரு. எட்கார்டோ டில்லெக் மற்றும் டேனியல் கசாபே இயக்கிய துப்பறியும் நபரின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம் சதர்ன் ஸ்டோம். பவர் அலி என்பது லைலா ஹாலாவின் போர்ச்சுகீசியத் திரைப்படமாகும், இது வாலிபால் நட்சத்திரப் பெண்ணின் மறுவாழ்வைச் சுற்றி வருகிறது. பனிப்புயலில் சிக்கிய கசாக் இளைஞனின் நிகழ்வு நிறைந்த கதை யைப் பகிர்ந்து கொள்கிறது தி ஸ்னோ டோம். டியாகோ டெல் ரியோவின் ஆல் தி சைலன்ஸ். காதலையும் பாலுற வையும் விவாதிக்கும் இந்தி திரைப்பட மான ஆக்ரா ஆகியவை போட்டியில் உள்ள மற்ற படங்கள்.