cinema

img

ரஜினி 170: ‘‘ஓய்வற்ற’’ உழைப்பு

ஜெயிலர் படத்திற்குப்பின் ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரிலேயே  தொடங்க இருக்கிற தாம். இந்த ஆகஸ்ட் 10 அன்று வெளியான ஜெயிலர் படம் உலகமெங்கும் பெரும் வெற்றி பெற்று இதுவரையில் 500 கோடிகளை அள்ளியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் உண்மை இல்லை என்றும், இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றும் ஒரு பேச்சு நிலவத்தான் செய்கிறது.  ரஜினியின் 170ஆவது படமாக அமைய இருக்கும் அந்தப் புதுப்படத்திற்கான அரங்குகள் மிகவும் பிரம்மாண்டமாக சென்னையிலிருக்கும் ஒரு படப்பிடிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகின்றனவாம். இதுவும் ஒரு பான் இன்டியா சினிமா தானாம். அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வானந்த்  போன்றோர் நடிக்கிறார்களாம். மேலும் நடிகர் - நடிகைகளை இறுதி செய்யும்  பணிகள் நடக்கின்றனவாம்.  இந்தப் படத்திற்கும் ஜெயிலருக்கு இசையமைத்த அனிருத்தான் இசையமைக்கிறாராம். ஆக, சமுதாயத்தில் நல்ல தாக்கங்களை உண்டாக்கும் கலைப்படைப்புகளைவிட கோடிகளைக் கொட்டி, பல கோடிகளை  அள்ளும் பெரும் சூதாட்டமாகவே திரைத்துறையைப் பராமரிப்பதில்மட்டும் இவர்கள் ஓய்வின்றி உழைக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.