cinema

img

திரைக்கதிர் - சோழ. நாகராஜன்

ஆஸ்கர் தகுதிச் சுற்றில் மலையாளப் படம்  ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’!

உலகின் தலை சிறந்ததாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்த 96-ஆவது ஆஸ்கர் விருதுகளின் ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவில் மலையாளத்தின் ‘தி  ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ (The Face of the Faceless) படம் தகுதிச்சுற்றுப் பட்டியலில் தேர்வாகியுள்ளது என்பதைப் படக்குழு தெரிவித்துள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான ‘2018’ அதிகாரப்பூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்திருந்தது.  வின்சி அலோஷியஸ் நடிப்பில் வெளியான ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஆஸ்கர் விருதின் ‘சிறந்த அசல்  பாடல்’ பிரிவுக்கான தகுதிச் சுற்று பட்டியலில் இப்போது தேர்வாகியுள்ளனவாம். இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெஃப் இயக்கியுள்ளார். அல்ஃபோன்ஸ் ஜோசஃப் இசையமைத்துள்ளார்.  சென்ற ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புதேவனின் போட்: முழுக்க முழுக்கக் கடலில் உருவான படம்...

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அறை எண் 305- ல் கடவுள், புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,  கசடதபற போன்ற படங்களை இயக்கிய இயக்கு நர் சிம்புதேவன். அவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘போட்’. ஒரே சமயம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார்.  யோகி பாபு, கௌரி ஜி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள னர். ஜிப்ரான் இசை. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு.முழுக்க முழுக்கக் கடலில் உருவாகி யுள்ள இந்தப் படத்தின் கதை, 1940-களின் பின்னணியில் உருவாகியுள்ளதாம். சென்னை யின்மீது ஜப்பான் குண்டு வீசிய போது உயிருக்கு அஞ்சி 10 பேர் சின்னப்  படகில் தப்பிக்கிறார்கள். நடுக்கடலில் அந்தப் படகு நகர முடியாமல் நின்று விடுகிறது.  அவர்கள் அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் போட் படத்தின் கதை. இந்தப்படம் த்ரில்லர், ஆக்சன், அரசியல் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாம். அண்மையில் இதன் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தரைப்படை:  பிரம்மாண்ட விமான நிலைய செட்டில் படப்பிடிப்பு

ராம்பிரபா இயக்கத்தில் ஸ்டோனக்ஸ் நிறு வனத்திற்காக  பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ள படம் தரைப்படை. ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்களாம். இது ஒரு கேங்ஸ்டர் கதை என்கிறார்கள். அதாவது,  ரௌடி கும்பலின் கதைசொல்லும் படம். மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை ஏமாற்றி அபகரிக்கிறது. கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றி என்ன செய்கிறது என்பதுதான் கதை எனத்தெரிகிறது. தரைப்படை படத்துக்காக பிரம்மாண்டமாக ஒரு விமான நிலையத்தை  அமைத்து அதில் படப்பிடிப்பு  நடத்தப்பட்டிருக்கிறதாம். கலை இயக்குநர் ரவீந்தி ரன் இந்த அரங்கை மிகநேர்த்தியாக அமைத்துள்ள தாகக் கூறுகிறார்கள். படத்தின் முக்கியமான பல காட்சிகள் அதில் படமாக்கப்பட்டதாகப்  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசுக்கென்று சொந்தமாக ஒரு விமான நிலையம்கூட இல்லாத நாட்டில் இப்படி செட் போட்டுத்தான் சினிமாவை எடுத்தாக வேண்டும்போல என்கிறார் ஒரு சினிமா ஆர்வலர்.

பாவேந்தருக்கு வ.ரா. எழுதிய கடிதம்

“அற்ப விஷயங்களையும் சில்லறைத் தகராறுகளையும் பற்றி எழுத்தில் எதிர்பார்ப்பது இலக்கியத்தைப் புண்படுத்து வதாகும்!” - என்பார் வ.ரா. என்று அன்பர்களால் விளிக்கப்பட்ட வ.ராம சாமி ஐயங்கார். வ.ரா. சிந்தனையாளர், எழுத்தாளர், மிகச்சிறந்த சீர்திருத்தக் காரர் என்பதை நாடறியும். அவர் அறிஞர் அண்ணாவால் ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று புகழப்பட்டார். எழுத்தில் மட்டுமல்லாது விமர்சனத்துறை சார்ந்தும் வ.ரா.வுக்கு சிறந்த  அணுகுமுறை இருந்தது. ‘துணிவு, கோட்பாட்டு உறுதி, மனத்தை மாற்றும் தன்மை - இவைதான் இலக்கிய விமர்சனத்துறையில் வ.ரா.வின் அணுகுமுறையாகும். அவர் சொல்வார்: “எழுத்தாளனின் குறைகளை மட்டும் எடுத்துக் காட்டி  அவனை எழுதவிடாமல் அடிக்கக்கூடாது!”  “மக்களின் முகத்தைப் பாருங்கள்! அதன் துணை கொண்டு நவீன இலக்கியத்தைப் படையுங்கள்!” என்பார் எழுத்தாளர் களைப் பார்த்து வ.ரா. திரைத்துறையிலும் கால்பதித்தவர் அவர். சமயத்துறையில் அந்நாளிலே சீர்திருத்தம் செய்த ராமானுஜர் வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் வ.ரா.  1938 ஆம் ஆண்டு ஏப்ரல்  30ஆம் நாள் வெளிவந்த ஜனசக்தி நாளிதழில் இப்படியொரு செய்தி வந்தது: “வெளிவரத் தயார். வைஷ்ணவ மத ஸ்தாபகரான ஆச்சாரியார். சம்பிரதாயங்களை மீறி தாழ்ந்த ஜாதியில் பிறந்தோனையும் சகோதரனாகப் பாவித்து ஆச்சாரப் புரட்சியை உண்டாக்கிய ஸ்ரீராமானுஜர் வாழ்க்கைச் சரிதம்!” அப்போது புதுச்சேரியின் நெட்டபாக்கத்தில் இருந்தார் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்கு வ.ரா.விடமிருந்து ஒரு கடிதம் போனது. அதில் வ.ரா. இப்படி எழுதி யிருந்தார்:  

“வாத்தியார் சுப்புரத்தினம் அவர்கட்கு  வ.ரா. வணக்கம். நான்  ராமானுஜர் பட மெடுப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதற்கு நீங்கள் பாட்டு எழுதிக் கொடுப்பீர்கள் என்று அன்பின் உரிமையைக் கொண்டு பத்திரிகையில் விளம்பரம் செய்து விட்டேன். ஆகையால், பிரசுரத்தையும், பாடல்களையும் முன்னிட்டு நீங்கள் சென்னையில் ஒரு வாரம் தங்கினால் போதும். என்னை பாக்கியசாலியாகக் கருதிக் கொள்வேன். தமிழ்நாடும் உங்களை வாழ்த்தும்!” 1938இல் வெளிவந்தது ஸ்ரீராமானுஜர். நடிகர் - நடிகைகள் வரிசையில் தேசத்தொண்டர்கள் இடம்பெற்றார் கள். பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். வசனம் வ.ரா. பாடல்கள் பாரதிதாசன். இயக்கம் ஏ. நாரயணன்.  அக்டோபர் 2, 1938 தேதியிட்ட ஆனந்த விகடனில் கர்நாடகம் எனும் புனைபெயரில்  திரைவிமர்சனம் எழுதிய கல்கி இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டார்:  “ராமானுஜர் புனிதமான சரித்திரம். தேசத்தின் தற்கால நிலைக்குப் பலவிதத்திலும் பொருத்தமானது. படத்தில் ஆபாசம் என்பது அணு அளவும் கிடையாது. சிறைபுகுந்த தேசபக்தர்கள் நடித்திருக்கிறார்கள்.” - இவ்வாறு எழுதினார். ஆனாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதற்கு வேறு சில குறைகளும் படத்தில் இல்லாமல் இல்லை.