cinema

img

சின்னத்திரை நடிகை சித்ரா திடீர் மரணம்...

சென்னை
பிரபல நடிகை சித்ரா (28) தமிழக சீரியல்களில் பிரபலமானவர். ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் நடிகையாக உதயமாகி மாற்றம் கண்டவர். இவர் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி) சீரியல் பிரபலமானது. தனது அசத்திய நடிப்பின் காரணமாக இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.  

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல தனியார் விடுதியில் சித்ரா தங்கி இருந்தார். அவருடன் வருங்கால கணவராக கூறப்படும் ஹேம்நாத் என்ற நபரும் இருந்தார். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நேற்று படப்பிடிப்பு இரவு 2 மணிக்கு முடிந்தது. அதன் பின் குளிக்க சென்ற சித்ரா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விவரகரம் அறிந்த நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடனடியாக சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு முன் உடலில் காயங்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஹேம்நாத் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே விசாரணை அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

உடலில் காயங்கள் இருப்பதால் சித்ரா மரணம் தற்கொலையா? இல்லை கொலையா? என்பது  சந்தேகம் வலுத்துள்ளது. 

;