பெரிய பின்னணிகள் ஏதுமின்றித் திரைத்துறையில் கால்பதித்து 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் பிரபல நடிகை சமந்தா. இன்றளவிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் அவர் கோபத்தோடு சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது உடை குறித்து வந்த மோசமான பதிவுக்கு எதிர்வினையாகவே இப்படி அவர் கருத்திட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில், “முன்முடிவோடு ஒருவரை அணுகுவதனால் ஏற்படும் வலியை ஒரு பெண்ணாக நான் உணர்ந்திருக்கிறேன். பெண்கள் அணியும் உடை, அவர்கள் பிறந்த இனம், கற்ற கல்வி, அவர்களின் சமூக அந்தஸ்து, அவர்களின் தோற்றம், தோலின் நிறம் போன்றவற்றைக் கொண்டே அவர்களை மதிப்பீடு செய்யும் வழக்கம் இன்னமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அணிந்துள்ள ஆடையைக் கொண்டே ஒருவரைப் பற்றித் தீர்மானித்துவிடுவது மிகவும் எளிதான செயலாக மாறியுள்ளது. ஆனாலும் என்ன, நாம் 2022 ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம்!” பெண் கலைஞர்களின் கோபத்தையும் எதிர்வினைகளையும் வரவேற்போம்!