business

img

இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த அமெரிக்கா!

ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்கிய இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடை காரணமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடந்த 2019-ல் இந்தியா நிறுத்திவிட்டது. இந்நிலையில், திபால்ஜி பெட்ரோகெமிக்கல் பிரைவேட் லிமிடெட் எனும் இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்கியதாக அமெரிக்க கருவூலத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்கியதாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;