சென்னை:
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சார்பில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் மூட்டை விலையை 190 ரூபாயில் இருந்து 216 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் வகையில், அரசு சிமெண்ட் கழகம் சார்பில் அம்மா சிமெண்ட் விற்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளாக சிமெண்ட் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மூலப் பொருட்களின் விலை, டீசல் விலை, ஊழியர்களின் ஊதியம் ஆகியவை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அம்மா சிமெண்ட் மூட்டை விலையை 190 ரூபாயில் இருந்து 216 ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.இருப்பினும் அம்மா சிமெண்ட் வாங்க முன்பே பதிவு செய்தோருக்குப் பழைய விலையிலேயே வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.