articles

img

மன்னியுங்கள், ராணி கமலாபதி...-அமர்த்தியா,கு

தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயரை ராணி கமலாபதி ரயில் நிலையம் என்று மாற்றியுள்ளார்கள் என்ற செய்தியைப் படித்தபோது, ஒருவேளை தேர்வில் கேட்டால் ஒன்றரை மார்க் என்பதுதான் மனதில் ஓடியது. வெளியே கிளம்பி, தோழிக்காகக் காத்திருக்கும்போது ஏதாவது யூடியூபில் கமலாபதியைப் பற்றி வந்திருக்கிறதா என்று தேடினேன். தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை. சரி, ஆங்கிலத்தில் இருக்கிறதா என்று பார்த்தால், நீங்கள் கம்லாபதியைக் கேட்கிறீர்களா என்றது. அட, இது என்ன. அப்போ அவரது பெயர் என்ன ஆர்வம் அதிகரித்தது. வெளியில் சென்றுவிட்டு அறைக்கு வந்தவுடன் லேப்டாப்பை எடுத்து உட்கார்ந்தேன். 

ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை ஏன் வைத்தார்கள் என்று பார்க்க லாம்... 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெயரை வைத்துள்ளனர். 300 வருஷம் ஆயிற்று. அவர் இறந்த ஆண்டு 1723. அவ ரைப் பற்றிப் படிக்கப் படிக்க பிரமிப்பாக இருந்தது. குதிரையில் கம்பீரமாக வலம் வந்திருக்கிறார். அவருடைய சிலையைப் பார்த்தாலே “செம கெத்து” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவர். மல்யுத்தத்தில் கலக்கியிருக்கிறார். தந்தையோடு சேர்ந்து போர்க்களங்களுக்குப் போயிருக்கிறார். அதில் அதிகாரியாக செயல்பட்டார். 

அடுத்த வரிகள், அதிர்ச்சியைத் தந்தன.  கோண்டு பகுதியை ஆட்சி செய்து வந்த  நிஜாம் ஷாவிற்கு ஏழாவது துணைவி யாராகத் திருமணம் செய்து வைக்கப்படு கிறார். இவ்வளவு பெரிய வீராங்கனை,  இதற்கு எப்படி ஒப்புக் கொண்டிருப்பார்  என்ற கேள்வியைத் தவிர்க்க முடிய வில்லை. பெரும் அழகி போலிருக்கிறது. திருமணம் ஆனபின்பும் ஆலம்ஷா என்ப வர் இவர் மீது விருப்பம் கொண்டிருக்கிறார். எப்படியாவது கம்லாவை அடைந்து விட வேண்டும் என்பதற்காக அரசர் நிஜாம் ஷாவுக்கு விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டார். 

ஆலம்ஷாவின் தொல்லை தாங்க முடியவில்லை. வித்தியாசமான பெண் தான். முதலில் மகனுடன் போய் ஒளிந்து  பார்த்தவர், பின்னர் ஒரு முடிவு எடுக்கிறார்.  அந்த ஆலம்ஷாவைப் போட்டுத் தள்ளிர வேண்டியதுதான் என்பதுதான் அந்த முடிவு. அப்போது அந்தப் பகுதியில் பலரை யும் வாட்டி வதைத்த ஒரு கூலிப்படைத் தலைவரான தோஸ்த் முகமது கானைத் தொடர்பு கொள்கிறார். அவரோ, ஒரு லட்சம் மொஹர் கேட்கிறார். கொடுத்துத் தொலைக்கலாம் என்று நினைத்து சரி என்கிறார்.

சொன்ன மாதிரியே ஆலம் ஷாவை அவர் கொன்று விடுகிறார். இவரால் ஒரு லட்சம் தர முடியவில்லை. மதம் மாறி, என்னைத் திருமணம் செய்து கொள் என்கி றார். இது கேட்ட கம்லாபதியின் மகன் சண்டைக்குச் செல்கிறான். அவனைக் கொன்ற முகமது கான் கோண்டு அரண் மனையை நோக்கி வருகிறார் என்ற செய்தி  கேட்ட ராணி கம்லாபதி, தனது நகைகளை  எடுத்து குளத்துக்குள் வீசி எறிகிறார். தானும்  அதில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்.

அவரது இந்தச் செயல், இந்தியப் பண்  பாட்டை நிலை நிறுத்தியதாகச் சொல்லப் படுகிறது. அதாவது, வேறொரு ஆடவ ரால் தனது கற்புக்குப் பாதகம் வந்து விடும் என்று அவர் தனது உயிரை மாய்த்துக்  கொண்டார் என்று புகழாரம் சூட்டு கிறார்கள். அவரைப் பற்றிப் படிக்கும் போது முதலில் இருந்த பிரமிப்பு கொஞ்சம்  விலகியது. இவர் எப்படி ஏழாவது மனைவி யாக சம்மதித்தார்..? இது இந்தியப் பண்பாடா..? இவரை ஏழாவதாகத் திரு மணம் செய்து கொண்ட நிஜாம் ஷாவின் கற்பு பறிபோகவில்லையா? 

ராணி அவர்களே!!! இவர்கள் இப்போது உங்களைத் தூக்கிப் பிடிப்ப தும் எங்களைப் போன்ற பெண்கள் இந்த “உயர்ந்த” பண்பாட்டைக் கடைப்  பிடிக்க வேண்டும் என்பதற்காகவேதான். ஆண்களுக்கு நிகரான வீரத்தைக் கொண்டிருந்த ராணி நீங்கள். ஆனால்  கடைசியில், அவர்களின் ஆதிக்க மனப் பான்மைக்கு பலியாகியிருக்கிறீர்கள். இதற்கு எதிராகப் போராடியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?? 

ஆண் ஆதிக்க சமூகம் உங்களைக் கொண்டாடலாம். உங்களை வைத்து மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள். எங்களைப் போன்ற இளம் பெண்களால் உங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்களை மன்னியுங்கள், ராணி யாரே!!