ம ிகச் சமீபத்தில்தான் அறிமுகமானார் கவிஞர் ஸ்ரீதர் பாரதி. இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறு கதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். 5 ஆவதாக மதுரை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களால் அப்பாவின் குதிரை எனும் இக்கவிதை நூல் வெளியிடப்பட்டது. நல்ல கவிதை ஞான மும் சொற்களை லாவகமாக பயன்படுத்தும் திறமைமிக்கவராக மிளிர்கிறார்.‘அப்பாவின் குதிரை’ தலைப்பே வசீகர மாய் இருந்தது. இன்றைய தலைமுறை களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் நடுத்தர மான வீடுகளில் மரக்குதிரை இருக்கும். அதில் ஏறித்தான் குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டிருக்கும். ஏழை எளிய வீடுகளில் அதற்கும் வாய்ப்பில்லை. தாத்தா ஏறி, அப்பா விளையாடி, மகன் ஒட்டி, இப்போது பேரனும் ஆடிக்கொண்டிருக்கும் காலத்தின் சங்கிலித் தொடர்ச்சியை மிக அழகாக கவியாக்கம் செய்திருக்கிறார்.
‘‘பின்னொரு நாள்
அப்பாவின் பேத்தி
ராணி மங்கம்மாளாகி
மதுரை மாநகரை
அதிவேகமாய் வலம் வந்தபோது
முன்னங்கால்கள் முறிப்பட்டு
மூச்சுத்திணறி மயங்கி சரிந்து
நலம்பெற்று மீண்டு வந்தது’’
நான்காம் தலைமுறையின் நகர் வலத்தை மிக அழகாய் காட்சிப்படுத்தி யுள்ளார். அட்டைப்படமே குதிரையிலேறிய சிறுவனின் பால்ய படமாக அழகாக அச்சிட்டுள்ளார். ஒரு வேளை கவிஞரின் இளவயது படமாக இருக்கலாம்.
ஒரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும் போது, கிராமங்கள் முற்றாக அழித்தொழிக் கப்படுகிறது. சனங்களே சாகும் போது சாமிகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? முதலாளித்துவம் சொகுசு வண்டி களில் பயணிக்கும் பொருட்டு, ஏழைகளின் வீடு, நிலங்களை மட்டும் இழப்பதில்லை. தங்கள் நம்பிக்கைக்குரிய சாமிகளும் நிலை குலைந்துபோய்விடுகின்றார்கள். என்பதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறார் இக்கவிதையில்.
‘‘எட்டு வழிச்சாலைக்காய்
இடம்விட்டு இடம்பெயர்ந்ததில்
கையொடிந்தான் காவல்காரன்
காலொடிந்தது வெண்புரவி
கழுத்தொடிந்தது வேட்டைநாய்
மனசொடிந்து சுக்குச் சுக்காய்
நொறுங்கிப் போனார்
அய்யனார்’’
குளங்களும் கண்மாய்களும் அருகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில். கிராமத்து சிறுவர்களுக்கே இம்மாதிரியான அனு பவங்கள் வாய்க்குமா என்று தெரிய வில்லை. மீன் தொட்டிகளில் வாசனையற்ற வண்ண மீன்கள் வளர்க்கும் நகரத்து சிறு வர்களுக்கு தூண்டிலும், அதில் வந்து சிக்கும் மீன்களும் நிச்சயம் புதுமையான அனு பவமாகவே இருக்கும். பொதுவாக மீன்களை நாற்றமடிக்கும் என்று தான் கூறு வார்கள். ஆனால் கவிஞரோ கமகமக் கிறது என்கிறார். இவரின் கிராமத்து சொல்லா ட்சியே மண் மணத்துக் கிடக்கிறது. அதை யும் வாசியுங்கள்.
‘‘தூண்டிலோடு
கண்மாய்க்கு சென்ற சிறுவர்கள்
ஓலைப்பெட்டி நிறைய
ஜலபுஷ்பம்
பறித்து வந்தார்கள்
வழியெங்கும்
கமகமக்க’’
நல்வாக்கு நாயகர்கள். மனிதக் கூட்டம் எவரிடமிருந்தாவது நற்சொல் கேட்டுவிட மாட்டோமா என்று தவதாயப்பட்டுக் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் நாய்களின் குரைப்பொலிகளுக்கு நடுவில் காதைக் கூர்தீட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஏழை களின் நம்பிக்கைச் சொல்லர்கள். அவர் களுக்கான நல்லதொரு சொல்லை காரி ருளில் கிராமத்து வீதிகளில் தேடிக்கொண்டி ருப்பதை வேதனையோடு சொல்லிச் செல் கிறார் கவிஞர் இப்படி.
‘‘முன்னிரவில்
தேரடித்தெரு
பின்னிரவில்
கோடாங்கி தோப்புத் தெரு
அதிகாலையில்
படப் படித்தெரு
தெருத்தெருவாய்
தேடியலைகிறான்
குடுகுடுப்பைக்காரன்
தனக்கொரு
நல்ல காலத்தை’’
இப்படி தொகுப்பு முழுவதும் மக்கள் யதார்த்தத்தை கவிதைகளால் காட்சிப்படுத்தியுள்ளார். குறைகளும் இல்லாமல் இல்லை. அதிகம் பேசப்பட்ட பாடுபொருள்களை மீண்டும் புதிய வரிகளில் பாடியுள்ளார். கவிஞர் பழநிபாரதி அணிந்துரை எழுதியுள்ளார். அப்பாவின் குதிரையேறி உலகெங்கும் வலம்வரட்டும் கவிஞர் ஸ்ரீதர் பாரதியின் கவிதைகள்.
நூல் : அப்பாவின் குதிரை
ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீதர் பாரதி
பக்கம் : 100 / விலை : 100
வெளியீடு : நியூஸ்மேன் பப்ளிகேஷன்