ம ுதலாம் உலகப் போரில் தோல்வி யடைந்ததால், ஜெர்மன் மன்னரின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் ராணு வம், அப்போது தேசத்தின் எல்லையை பாது காப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் நிலவிய உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசி யால் வாடிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மை யான மக்கள் போரை விரும்பவில்லை.
1918 நவ.4 அன்று ஜெர்மனியின் துறைமுக நகரமான கீல் பதற்றமாக இருந்தது. சுமார் 5 ஆயிரம் பேர் செங்கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கீல் நகரை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும் ஜெர்மன் கடற்படையும் போரிட்டுக் கொண்டிருந்தன. இதில் ஜெர்மனிக்கு தோல்வி உறுதி என தெரிந்த தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்து மாறு ஜெர்மன் தளபதிகள் மாலுமிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு மறுத்ததால், மாலுமிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.
மாலுமிகளை விடுவிக்கக் கோரி சோசலிச அரசியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தப் புரட்சியில் தோழர்கள் பலர் வீரமர ணம் அடைந்தனர். இதில் பங்கேற்ற மாலுமிகள், கீல் நகரில் இருந்த ராணுவ ஆயுதங்களை கைப்பற்றினர். பின்பு ஒருசில மணி நேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப் பாட்டிற்கு வந்த நிலையில், கடற்படை முகாம் அதிகாரி கைது செய்த மாலுமிகளைவிடுவித்தார்.
இச்சமயத்தில் சமூக ஜனநாயகக் கட்சி ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைக் கொண்டிருந்தது. பின், சில நாட்களில் மற்ற நகரங்களிலும் புரட்சி தொடங்கி விட்டது. 1918 நவ.5 அன்று ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரங்கள், தொழிலாளர் களின் (சோவியத்) கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஹம்பேர்க் நகர பத்திரிகையின் பெயர் ‘செங் கொடி’ என மாற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் பல வட-மத்திய ஜெர்மன் நகரங்களில் அரசாங்க கட்டிடங்களும், தொழிற்சாலைகளும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டன. இங்கு சோவியத் தொழிலாளர் மன்றங்கள் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின.
9.11.1918 அன்று ஜெர்மன் புரட்சிக்கு தலை மை வகித்தவரை காண்பதற்காக பெர்லின் நகரில் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவரான கார்ல் லீப்னெக்ட் ‘புதிய ஜெர்மனி உரு வாகி விட்டது’ என முழங்கினார். மன்னராட்சி முடிவுக்கு வந்த இந்நாளில், ‘ஜெர்மன் சோசலிசக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது’ என பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்தார் கார்ல் லீப்னெக்ட்.
இன்று ஜெர்மன் நவம்பர் புரட்சி தினம்