ப ிரெஞ்சுப் புரட்சியாளரும் கவிஞரு மான யூஜின் எடின் பாட்டியர் 1816 அக்டோபர் 4 அன்று பாரீசில் பிறந்தார்.
முதலாளித்துவத்தை எதிர்த்த மாபெரும் போராளியான இவர், தனது வாழ்நாள் முழுவதும் ஏழ்மையை மட்டுமே சந்தித்தார். 1840-களில் பிரான்சில் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் தனது போர்குணமிக்க பாடல்கள் மூலம் பதிலளித்தார். பின்பு, பிற்படுத்தப்பட்டவர்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழிலாளர்களை ஒன்றி ணைக்கும் பணியில் ஈடுபட்டார். 1871 இல் தி கிரேட் பாரீஸ் கம்யூ னின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாட்டியர். இதற்கான தேர்தலில் மொத்தம் 3600 வாக்குகளில், பாட்டியர் 3352 வாக்குகளைப் பெற்றார். முதல் பாட்டாளி வர்க்க அரசான கம்யூனின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.
கம்யூனின் வீழ்ச்சி இவரை இங்கிலாந்திற்கும், அமெரிக்கா விற்கும் தப்பி ஓடச் செய்தது. அதன்பின், 1871 ஜூன் மாதம் பாட்டாளி வர்க்கம் குறித்து கூறும் ‘இன்டர்நேஷனல்’ என்ற பாடலை எழுதினார். கம்யூன் நசுக்கப்பட்டாலும், பாட்டியரின் இப்பாடல் அதன் கருத்துக்களை உலகம் முழுவதும் பரவச் செய்தது. 1876 இல் பாட்டியர் எழுதிய கவிதை ஒன்று, முத லாளித்துவத்திடம் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் வறுமை, உழைப்புச் சுரண்டல் ஆகிய வற்றை விவரித்தன. 9 ஆண்டுகளுக்குப் பின் பிரான்சுக்குத் திரும்பிய பாட்டியர், தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். இச்சமயத்தில் அவரது வசனப்பகுதிகள், புரட்சிகரப் பாடல்கள் சில வெளிவந்தன. பல பாடல்கள் இவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டன. பாட்டியர் தனது முதல் பாடலை இயற்றிய போது, தொழிலாளர் சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை 10 ஆயிர மாக உயர்ந்தது. யூஜின் பாட்டியரின் புரட்சிகரப் பாடல்கள் கோடிக்கணக்கான பாட்டாளிகளைச் சென்றடைந்தது. பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு எதிராக போராடிய யூஜின் எடின் பாட்டியர் 1887 நவம்பர் 6 அன்று காலமானார்.
இன்று தோழர் யூஜின் எடின் பாட்டியர் நினைவு தினம்