articles

img

ஒரு வைரப் பெண்மணியின் வாழ்க்கை வரலாறு

வ ாசித்து முடித்த மாத்திரத்தில் கையிலிருக்கும் புத்தகத்தை அணைத்து முத்தமிட்டது இதற்கு முன்பு எப்போது என்று நினைவில்லை. ஆனால் Mohana – Story of an Iron Lady நூலை வாசித்து முடித்ததும் அருகில் மோகனா இல்லாத குறையை அப்படித் தான் தீர்த்துக் கொண்டேன். 

இந்நூலுக்கு “மோகனாவின் வைர வாழ்க்கை” என்று பெயரிட்டிருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். இரும்பு கூட அடிக்கும் போது உருமாறலாம். ஆனால் எத்தனை சோதனைகள், அழுத்தங்கள், கடி னமான உரசல்களைச் சந்தித்த போதும் அத்த னையையும் தன்னை மெருகேற்ற மட்டுமே அனுமதியளித்து வைரம் போல் ஜொலிக்கும் ஆளுமை மோகனா. 

அவரது போர்க்குணம் வெகு சிறு வயதிலேயே வெளிப்பட்டிருக்கிறது. புத்தகம்  தொடக்கம் முதல் இறுதி வரை நம் கவ னத்தை ஈர்த்துக் கட்டுக்குள்ளேயே வைத்திருக் கிறது. சொல்ல வருவதை ரத்தினச் சுருக்க மாகச் சொல்லி விட்டு, நாம அதிசயித்து வாய் பிளக்கும் முன் அடுத்த அத்தியாயத்துக்குப் போய்க் கொண்டே இருக்கிறார். வாழ்க்கைச் சிக்கல்களை அநாயாசமாய்க் கையாண்ட யுக்தியை நூலாசிரியராகவும் பயன்படுத்தி இருக்கிறார் போலும். 

காவிரி ஆற்றைத் தாண்டி புதிய பள்ளி க்குச் செல்லப் போகிறோம் என்றுணர்ந்த குட்டி மோகனாவின் பரவசம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. புத்தகக் காதலி  வாசித்துக் கொண்டே மாடுகள் மேய்த்த போது அவை தொலைந்து விட்டதும் அத னால் அடி வாங்கியதும் மறுநாளே அவை திரும்பி வந்ததும் சுவாரசியமான நினைவுகள். 

புதிய பள்ளியின் முதல் நாளில் அப்பா வந்து அழைத்துச் சென்று ஜியோமெட்ரி பாக்ஸும் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்த பசுமையான நினைவுகளை மீட்டெடுத்திருப் பது அவரது குழந்தை உள்ளத்துக்குக் கட்டி யம் கூறுகின்றது. 

ஆனால் அப்படி வாசிப்பையும் எழுத்தை யும் சுகமாக நுகர்ந்து கொண்டு இருக்கும்படி வாழ்க்கை அவரை விடவில்லை. கல்வி கற்பதற்காக ஒவ்வொரு அடியிலும் அவர் கடும் சோதனைகளைக் கடந்திருக்கிறார். வறுமை மட்டுமல்லாது வீட்டின் கெடுபிடி, வேண்டாத திருமண வரன்கள், குடும் பத்தினரின் அவநம்பிக்கைகள், அவரைக் கொல்லவே துணிந்த கொடூரம் இவற்றை  எல்லாம் வாசிக்கும் போது அறியாமை யிலும் பெண் வெறுப்பிலும் மூழ்கிக் கிடக்கும் நம் சமூகம் எத்தனை எத்தனை மோகனாக் களின் கனவுகளிலும் ஆளுமைகளிலும் வேரிலேயே அமிலத்தை ஊற்றி அழித் திருக்கும் என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. ஆதிக்க சக்திகளுக்கு அடங்க மறுத்து, அக்கிர மங்களை எதிர்த்து அத்து மீறி ஆயிரத்தில் ஒருத்தியாய் ஒரு மோகனா வீறு கொண்டு எழுந்திருக்கிறார்.

எந்தக் கட்டத்திலும் துவண்டு விடாமல், சுய மரியாதையை மட்டுமின்றி சக மனிதர்கள் மீதான அன்பையும் நம்பிக்கையையும் விட்டு விடாமல் இருந்திருக்கிறார் மோகனா. தனது கணவர் வீட்டாரின் அன்பையும் அபி மானத்தையும் மொத்தமாகச் சம்பாதித்து இருப்பதே அதற்கு சாட்சி. தங்கள் மகனால் அவதிக்குள்ளான மோகனாவுக்கு ஈடு செய்யும் விதமாய்ச் சொத்தை அவருக்கும் மகனுக்கும் எழுதிக் கொடுத்தாலும், மோகனா அதனைப் பெருந்தன்மையுடன் திருப்பிக் கொடுத்திருக்கிறார். தனது மக னைத் தன் உழைப்பில் அருமையாக வாழ வைக்க முடியும் என்று தலைநிமிர்ந்து அதை  நிரூபித்தும் காட்டி இருக்கிறார். ஒரு மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று தாய்மார் கள் அவசியம் இவரிடம் பாடம் கற்க வேண்டும். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆசிரி யர்கள் சங்கம், மற்றும் அறிவொளி இயக்கங் களில் இவர் ஆற்றிய பங்கும், 1987 இல் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்ற அனுபவமும் விறுவிறுப்பான பக்கங்களாக நகர்கின்றன. 

எழுத்தாளர் தீபலெட்சுமி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைமை அணியில் முதல் பெண் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மோகனாவின் துணிவும் போர்க்குணமும் சொந்த வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அல்லலு றும் ஏராளமான பெண்களைக் கைதூக்கி விடவும், ஆதிக்க மனோபாவ உள்ளவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கவும் பயன் பட்டிருக்கின்றன. கும்பல் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண்ணைத் தன் சொந்த மக ளாகப் பராமரித்து வாழ்வில் மறுமலர்ச்சி அடையச் செய்ததையும் நீதிபதியே ஆனா லும் பெண் என்று இழிவாகப் பேசியவரை நீதி மன்றத்திலேயே அதிரடியாக எதிர்த்ததையும் சுருக்கமாகத் தன்னடக்கத்துடன் எழுதி யிருப்பது அசர வைத்தது. 

குழந்தைப் பருவம் முதல் அறிவின் மீது  தீராத தாகம், அசைக்க முடியாத சுயமரி யாதை, சுதந்திர வேட்கை, மானுட நேயம் இவற்றை எந்தத் தருணத்திலும் தக்க வைத்துக் கொள்ளும் ஓர் ஆளுமையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு சாட்சி தான் மோகனா எனும் வைரப் பெண்மணி. 

ஆங்கிலத்தில் வாசித்தோம் என்கிற உணர்வே ஏற்படாதவாறு புத்தகத்தின் ஜீவ னை அப்படியே தனது மொழிபெயர்ப்பில் கட த்தி இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கும் இதனைப் பதிப்பித்த அருமைத் தோழர்கள் ஹெர் ஸ்டோரீஸ் வள்ளிதாசன், நிவேதிதா லூயிஸ், சுஜாதா ஆகியோருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

நூல் :
Mohana – Story of an Iron Lady

நூலாசிரியர் :
Mohana Somasundaram

வெளியீடு : Her Stories

விலை: ரூ.200/-