articles

அடுத்த இலக்கு ஞானவாபி மசூதி

உத்தரப்பிரதேச மாநில முதல மைச்சர் ஆதித்யநாத், கோவில்-மசூதி பிரச்சனையில் புதிதாக ஒன்றைப் பிரகடனம் செய்திருக்கிறார். இந்த  முறை அது, வாரணாசியில் உள்ள ஞானவாபி  மசூதி - விஸ்வநாதர் ஆலயம் சம்பந்தப்பட்ட தாகும். ஆதித்யநாத் நேர்காணல் ஒன்றில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளா கம், ஏற்கனவே கோவிலாக இருந்தது என்ப தற்கான “ஒரிஜினல் அந்தஸ்தை” மெய்ப்  பிக்கும் விதத்தில் போதுமான ஆதாரங்கள்  கிடைத்திருக்கின்றன என்றும், முஸ்லீம்கள் தான் தாமாகவே முன்வந்து “கடந்த காலத்தில்  வரலாற்று ரீதியாக தவறிழைக்கப்பட்டுள்ளது.  அதனைச் சரி செய்திட வேண்டும்” என்று ஒப்புக்  கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில்  குவிக்கப்பட்ட மனுக்கள்

ஞானவாபி மசூதி வளாகம் இந்து கோயி லாக இருந்தது என்பதை சட்டப்படி மெய்ப் பிப்பதற்கான வேலைகளில் ஆதித்யநாத் இப்போது இறங்கியிருக்கிறார். ஆகஸ்ட் 3 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞான வாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்திட  இந்தியத் தொல்லியல் துறையினருக்கு  (ASI- Archaeological Survey of India) அனுமதி அளித்த, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மசூதிக் குழு தாக்கல் செய்திட்ட மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.  2019இல் அயோத்தி தாவா தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதிலிருந்தே, மசூதியின் வளாகத்தில் உள்ள சிவ லிங்  கத்தைப் பிரார்த்திப்பதற்கு இந்துக்களுக் குள்ள உரிமையை நிலைநாட்டிட வேண்டும்  என்று கோரி வாரணாசியில் உள்ள நீதிமன்றங்  களில் அடுக்கடுக்காக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மசூதியின் வளாகத்தில் உள்ள குளத்தில் இருப்பது செயற்கை நீரூற்று  என்றும், அது சிவலிங்கம் அல்ல என்றும் மசூதி  தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

1991-ஆம் ஆண்டுச் சட்டம்

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள்  (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தில் கூறப்பட்டி ருப்பவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இருந்து வருகின்றன. இந்தச் சட்ட மானது, பல்வேறு மதத்தினரும் வழிபடும் தலங்களின் கோவில்கள், மசூதிகள் மற்றும்  தேவாலயங்கள் குறித்து 1947 ஆகஸ்ட் 15  அன்று அவை எந்த நிலையில் இருந்தனவோ அந்த நிலையில் மாற்றம் வருவதைத் தடை செய்யும் நோக்கத்துடன் இந்தச் சட்டமானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள், இந்தச் சட்டமானது, சுதந்தி ரம் பெற்ற பின்னர் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக முன்பிருந்த நிலையே தொடர  வேண்டும் என்பதற்குச் சட்ட அங்கீகாரம் அளித்தது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த  பின்னர் மத மாற்றம் சம்பந்தமாக, நீதிமன்றங்க ளில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருப்  பின் அவை அனைத்தும் அற்றுப் போகின்றன. ராம ஜென்ம பூமி இயக்கம் போன்று நாட்டில்  மிகப் பெரிய அளவில் வன்முறை வெறியாட்  டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னணி யில், வழிபடும் இடங்களில் கிளர்ச்சிகளோ  மதவெறி நடவடிக்கைகளோ நடைபெறுவ தைத் தடை செய்வதை உத்தரவாதப்படுத்து வதற்காக இந்தச் சட்டமானது நரசிம்மராவ் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

கீழமை நீதிமன்றங்களின்  செயல் சரியா?

உச்சநீதிமன்றம், அயோத்தி தாவா தொடர்  பாக தீர்ப்பு வழங்கும்போது, 1991ஆம் ஆண்டு  சட்டத்தை, “ஒரு மதச்சார்பற்ற அரசின் கட மைகளுடன் உள்ளார்ந்த தொடர்புடையது” எனக் கூறி அதனை உயர்த்திப்பிடித்தது. மேலும், உச்சநீதிமன்றமானது, வரலாற்றை யும் அதன் தவறுகளையும் தற்போதும் எதிர்காலத்திலும் ஒடுக்குவதற்கான கருவி களாகப் பயன்படுத்தக்கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறியிருக்கிறது. உச்சநீதிமன்றம் இவ்வாறு 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு கள்) சட்டத்தைத் தெளிவாகக் கூறியுள்ள போதிலும், இதன் அடிப்படையில் கீழமை நீதி மன்றங்கள் நடவடிக்கைகள் எடுத்து, ஞான வாபி மசூதி வளாகம் தொடர்பாக எழுந்துள்ள  தாவாவிற்கு முற்றுப்புள்ளி வைத்திட தீர்மான கரமான முறையில் தலையிடவில்லை என்பது, புரியாத புதிராக இருக்கிறது.

வாய்ப்பைத் தவறவிட்ட உச்சநீதிமன்றம்

2022 மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. மசூதிக் குழு சார்பில், வாரணாசி சிவில் நீதிபதியால் மசூதி வளாகத்திற்குள் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதற்குத் தடை விதித்திட வேண்டும் என்று கோரி, ஒரு மனு  தாக்கல் செய்யப்பட்டது. 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் படி, உச்சநீதிமன்றம் அதற்குத்  தடை விதித்திருக்க முடியும். உச்சநீதிமன்றம்  அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக  அது,  ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனு வின்மீது முடிவு மேற்கொள்வதற்கு ஏதுவாக  மசூதிக் குழுவின் மனுவையும் மற்றொரு மூத்த நீதிபதிக்கு மாற்றி அனுப்பி வைத்தது. மீண்டும் ஜூலை மாதத்தில் மசூதிக் குழு,  இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு சம்பந்த மாக அனைத்து நீதிமன்ற நடவடிக்கை களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்  என்று கோரி, உச்சநீதிமன்றத்தை அணுகியது.   அதன்பின்னர், இது தொடர்பாக மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஞான வாபி மசூதியையே இல்லாமல் செய்திட வேண்டும் என்பதும் அதில் ஒரு வழக்காகும். அப்போதுதான் அந்த இடத்தில் ஒரு கோவில்  கட்ட முடியும் என்பதுமாகும். இவை அனைத்  துமே நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதிமன்றங்களும் அவர்கள் கையில்!

நீதித்துறையின் உயர் மட்டத்தில் நிலவிய இத்தகைய ஊசலாட்டத்தின் காரணமாக, கீழமை நீதிமன்றங்கள் மூலமாக ஞானவாபி  மசூதி சம்பந்தமாக எண்ணற்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, “உண்மையைக் கண்டறி வதற்காக” வீடியோ மூலமும், இப்போது  இந்தியத் தொல்லியல் துறை மூலமும் நட வடிக்கைகள் எடுக்கப்பட உத்தரவிடப்பட்டி ருக்கின்றன. நடைமுறையில், மாவட்ட நீதி மன்றம் பெண்கள் அளித்திட்ட மனுக்களை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ ஆய்வு, அங்கேயிருந்த குட்டையிலிருந்தது நீரூற்று (fountain) அல்ல அது ‘சிவலிங்கம்’ தான் என்று வெளிப்படுத்தி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றமும் தன்னுடைய சமீபத்திய தீர்ப்பில், மசூதி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வையும் அனு மதித்திருக்கிறது.   இதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகள் இப்போது மதுரா நீதிமன்றங்களிலும் இத்கா-கிருஷ்ணா ஜன்மபூமி பிரச்சனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்துத்துவா சக்திகள் தங்களின் நலன் களை முன்னெடுத்துச் செல்வதற்காக இவ்  வாறு நீதிமன்றங்களையும் பயன்படுத்திக் கொள்ள இறங்கி இருக்கின்றன. கீழமை நீதி மன்றங்கள், இந்துத்துவா சக்திகளின் நட வடிக்கைகளுக்கு  உடந்தையாக இருப்பதால்  இத்தகைய நடவடிக்கைகளில் அவை இறங்கி  இருக்கின்றன. நீதிமன்றத்தின் மூலம் தங்க ளுக்குச் சாதகமாக முடிவினைப் பெற்று விட்டால் பின்னர் அதன் அடிப்படையில் இதர  வழிகளிலும் அவற்றால் எளிதாகத் தங்கள் மத வெறி நடவடிக்கைகளில் வெற்றி பெற்றுவிட முடியும். இத்தகைய இவர்களின் சூழ்ச்சித் திட்டங் களை உச்சநீதிமன்றம் முளையிலேயே கிள்ளி  எறிந்திட முன்வர வேண்டும். இதற்கு அது 1991 ஆம் ஆண்டு சட்டத்தைப் பிரயோகித்திட வேண்டும்.  

(ஆகஸ்ட் 2, 2023)
தமிழில்: ச.வீரமணி