இரா.முத்தரசன் - மாநிலச் செயலாளர், சிபிஐ
மணிப்பூர் பற்றி எரிகிறது. நாடாளு மன்றத்திற்கு வந்து விவாதத் தில் பங்கேற்க மோடி மறுக்கிறார். மறு புறத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று திருக்குறளைப் புகழ்கிறார். தமிழ் தொன்மையான மொழி என்கிறார். ஆனால், 2017-முதல் 2020-ஆம் ஆண்டு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ரூ.22 கோடியே 31 லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளது. சமஸ்கிரு தத்திற்கு ரூ.643 கோடியே 84 லட்சம் ஒதுக்கி யுள்ளது. ஆனால், தமிழ், தமிழ் என்று வார்த்தை ஜாலம் காட்டுகிறார் மோடி. இந்திய உணவுக் கழகத்தில் 2020-ஆம் ஆண்டில் 38 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. ஒன்றிய அரசு தமது திட்டத்தில் இரண்டு கிலோ அரிசியை ரூ.3-க்குக் கொடுக் கிறது. ஆனால், தமிழகம் வாங்கும் அரிசிக்கு கிலோ ரூ.34 என விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த அரிசியையும் கூட கர்நாடகத் தேர்தலுக்குப் பின் தமிழ கத்திற்கு வழங்குவதை நிறுத்திவிட்டது. இந்தியாவைப் புதைகுழியில் தள்ளியது மோடியின் “நியூ இந்தியா”. அந்த “நியூ இந்தியா”-வை தோற்கடிக்க “இந்தியா” அணி உருவாகியுள்ளது. இந்த அணி தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாசிச பாஜகவை 2024 தேர்தலில் தோற்கடிக்கும்.
- சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், முன்னாள் எம்பி., மதிமுக
யெச்சூரியும், செங்கொடியை உயர்த்திப் பிடித்துள்ள ஒவ்வொரு தோழனும் ஒரே மாதிரி சிந்திப்பவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டின் கருப்பொருள். மதிமுக நேசிக்கும் தலைப்பு, மதிமுகவின் நெஞ்சுக்கு நெருக்கமானது. மதம் பிடித்த யானையின் துதிக்கையில் சிக்கிய பாகனைப் போல மாநில சுயாட்சியும், உரிமைகளும் மோடி அரசு என்ற மதயானையின் கையில் சிக்கியுள்ளது. பாஜக-வை தமிழகத்தில் தோற்கடிக்கும் வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக (Wanted) விரும்பிச் செய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் “இந்தியா அணி” வெற்றி பெறும்.