பாஜகவும் மோடி அரசாங்க மும் பற்ற வைத்த மதவெறித் தீ அவர்களையே பதம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. அவர்கள் படிப்படியாக மேற்கொண்டுவரும் முஸ்லீம்க ளுக்கு எதிரான மதவெறித் தீ, தற்போது முஸ்லீம் நாடுகளிடமிருந்து தூதரக அளவில் திருப்பித் தாக்கக்கூடிய அளவிற்கு சென்றிருக்கிறது. குறிப் பாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவூதி அரேபியா, ஈரான், இராக், இந்தோனேசியா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. பாஜக-வின் இரு செய்தித் தொடர்பாளர் கள், தேசிய அளவில் நுபுர் ஷர்மாவும், தில்லி பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால் என்பவ ரும், நபிகள் நாயகத்தை தேசியத் தொலைக் காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் இழிவு படுத்திப் பேசியிருந்தார்கள். நுபுர் ஷர்மாவின் இழிவான பேச்சு மே 27 அன்று ஒளிபரப்பானது. அதற்கு நாடு முழுதும் முஸ்லீம்கள் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு களை மேற்கொண்டன. எனினும் பாஜக அவற்றை உதாசீனம் செய்தது. கான்பூரில் நடைபெற்ற எதிர்ப்புகளை ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கினர். எண்ணற்ற முஸ்லீம்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். ஆனால், ஜூன் 5 அன்று, கத்தார் அர சாங்கம் இந்தியத் தூதருக்கு அழைப் பாணை அனுப்பி, இத்தகைய இழிவான கருத்துக்களுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பி னைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. இதன் பின்னர்தான் பாஜக அவ்வாறு இழிவாகப் பேசிய நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாகவும், நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்து வெளியேற்றி இருப்பதாகவும் பதில் அளித்துள்ளது.
பாஜக அரசாங்கமானது, கத்தாரில் உள்ள இந்தியத் தூதர் மூலமாக, நபிகள் நாயகம் குறித்து இழிவாகப் பேசிய நபர்கள் “உதிரிப் பேர்வழிகள்” (“fringe elements”) என்றும் அவை அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அறிவித்திருக்கி றது. இந்த அறிக்கையின் பாசாங்குத்தனம் அப்பட்டமாகவே தெரிகிறது. ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்க ளையே “உதிரிப் பேர்வழிகள்” என்று கூறி யிருப்பதன்மூலம், பாஜக தன்னைத்தானே கண்டித்துக் கொண்டுள்ளது. இத்தகைய “உதிரிப் பேர்வழிகள்”தான் கட்சியில் பிரதான மானவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டி ருக்கிறது. எதார்த்தத்தில், ‘முஸ்லீம்களுக்கு எதிரான எதிர்ப்பு சிந்தனை’ (‘Islamo phobia’) என்பது பாஜக-வின் இந்துத்துவா சித்தாந்தத்தின் உள்ளார்ந்த சிந்தனை யோட்டமேயாகும். முஸ்லீம்களுக்கு எதிரான பேச்சு என்பது பாஜக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டின் ஒரு பகுதியேயாகும். நுபுர் ஷர்மாவின் வெறுப்பு வாசகங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட அதே சமயத்தில், மற்றொரு பாஜக தலைவர், நாடாளுமன்ற உறுப்பினரா கவும், பாஜக-வின் இளைஞர் பிரிவின் தலை வராகவும் இருக்கின்ற, தேஜஸ்வி சூர்யா என்பவர், ஆஸ்திரேலியாவில், இந்தியாவை முஸ்லீம்கள் கைப்பற்றியது உலக வரலாற் றில் ரத்தம் தோய்ந்த அத்தியாயம் என்றும், இஸ்லாமின் வரலாறு ரத்தக் கறைகளும் வன்முறையும் நிறைந்தவை என்றும் கூறி யிருக்கிறார். அங்கேயிருந்த முஸ்லீம் மாண வர் அமைப்புகளும் குடியுரிமைகள் குழுவி னரும் எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்க ளை மேற்கொண்டதன் விளைவாக அவர் பங் கேற்பதாக இருந்த “ஆஸ்திரேலிய-இந்திய இளைஞர் உரையாடல்” (“Australia-India Youth Dialogue”) என்னும் அதிகாரப்பூர்வ நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப் பின் செயலகத்தின் அறிக்கையை கடுமை யாக மறுத்திருக்கிறார். மேற்படி அறிக்கையா னது வகுப்புவாத அடிப்படையிலானது என்று அவர் பதிவு செய்திருக்கிறார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கையில் இந்தியாவில் முஸ்லீம்களைத் தாக்கும் சம்ப வங்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டிருந்த தால்தான், அயல்துறை அமைச்சகம் அவ்வாறு கூர்மையாகப் பதில் அளித்திருக்கிறது. அந்த அறிக்கையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளரின் கருத்துக் கள் இஸ்லாமுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதும், அவமதிப்பதும் அதிகரித்துக் கொண்டிருப்பதன் ஒரு பகுதியே என்றும், இந்திய முஸ்லீம்களுக்கு எதிராகத் திட்ட மிட்டமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டு வருகின்றன என்றும், குறிப்பாக இந்தி யாவில் சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்க ளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதித்தது, முஸ்லீம்களின் சொத்துக் கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது, அவர்களுக்கு எதிராக வன்முறை வெறி யாட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது என அனைத்தும் அந்த அறிக்கையில் குறிப்பி டப்பட்டிருக்கிறது. இவ்வாறு உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருப்ப தால்தான் மோடி அரசாங்கம் இவ்வாறு ஆத்தி ரத்துடன் பதிலளித்திருக்கிறது.
முஸ்லீம் எதிர்ப்பு நிகழ்ச்சிநிரல் நாட்டின் ஒற்றுமை மீது கடும் விளைவுகளை ஏற் படுத்திக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்களு க்கு எதிராக அனைத்து விதமான வன் முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை ஜம்மு-காஷ்மீரில் மிகவும் கேடு விளைவிக்கும் வடி வங்களில் பார்க்க முடிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தும் அதன் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் அடிப் படை உரிமைகள் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் அங்கே வாழ்ந்துவரும் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் சிலரைத் தெரிவுசெய்து கொல்வதற்கு இட்டுச் சென்றுள்ளது. இவற்றின் விளைவாக மோடி அரசாங்கத்தின் ஜம்மு-காஷ்மீர் கொள்கை சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராக பாஜக மோடி அர சாங்கம் மேற்கொண்ட வெறுப்பு விதைகள் வளர்ந்து இப்போது அறுவடை செய்யும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.
நுபுர்ஷர்மாவுக்கு பாதுகாப்பளிக்கும் பாஜக அரசு
சமூக ஊடகங்களில் மத உணர்வுக ளுக்கு ஊறு விளைவித்தார்கள் என்றோ அல்லது மத நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவித்தார்கள் என்றோ கூறி பல முஸ்லீம் கள் முன்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதேபோன்று எவ்விதமான நடவ டிக்கையும் நுபுர் ஷர்மாவிற்கு எதிராகவோ அல்லது நவீன் ஜிண்டாலுக்கு எதிராகவோ எடுக்கப்படவில்லை. மாறாக, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தில்லிக் காவல்துறையினர் நுபுர் ஷர்மாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனக் கருதி, அவருக்குப் போலீஸ் பாது காப்பு அளித்திருக்கிறது. நுபுர் ஷர்மா கட்சி உறுப்பினர் பொறுப்பி லிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ஏற்க வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வெளிநாடுகள் அளித்த நிர்ப்பந்தத்தின் விளைவாக பாஜக தலைமையால் நடவ டிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், பாஜக தலைமையால் வெளியிடப்பட்ட அறிக்கையா னது அவருடைய கருத்துக்களைக் கறாராகக் கண்டிக்கவோ மறுத்திடவோ முன்வரவில்லை.
மோடி அரசாங்கம், இந்தியாவில் அனை த்து மதங்களும் மதிக்கப்படுவதாகக் கூறுவது மட்டும் போதுமானதல்ல. அது, முஸ்லீம்கள் அனைத்து விதங்களிலும் சமத்துவத்துட னான குடிமக்களாகக் கருதப்படுவார்கள் என்றும், முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி ஒடுக்கப்படும் என்றும் நாட்டுக்கும் உலகத்திற்கும் உறுதி அளித்திட வேண்டும். இவ்வாறெல்லாம் மோடி அரசாங்கம் கூறாததன் பொருள், பாஜக-வும் மோடி அரசாங்கமும் முஸ்லீம் நாடுகளிலிருந்து வந்துள்ள ஆவேச அலைகள் சற்றே அடங்கட்டும் என்றுதான் பார்க்கிறதேயொ ழிய, நிச்சயமாக அது முஸ்லீம்களுக்கு எதி ரான நடவடிக்கைகளை கைவிட்டுவிடாது. ஆனாலும், நுபுர் ஷர்மா நிகழ்வு, மோடி அரசாங்கமும் பாஜக-வும் பின்பற்றிவரும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல், தற்போது சர்வதேச அளவில் நுண்ணாய்வுக்கு உட் படுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கி றது என்பதையே காட்டுகிறது. “விஷ்வகுரு” இப்போது உலகத்தால் அருவருக்கத்தக்க விதத்தில் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜூன் 9, 2022.
தமிழில்: ச.வீரமணி