‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பதை அமல்படுத்த முனைவதன் நோக்கம், அதிகாரங்களை ஒன்றிய அரசாங்கத்துடன் குவித்து, சாராம்சத்தில் மாநிலங்களின் அதிகாரங்களை, கூட்டாட்சித் தத்துவத்தை, ஒழித்துக் கட்டுவதேயாகும்.
மோடி அரசாங்கம், நாடாளுமன்ற ஜன நாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய இரண்டின் மீதும் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்‘ (‘One Nation, One Election’ (ONOE)) என்ற முழக்கத்தை அமல்படுத்து வதன் மூலம் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இதற்காக அரசாங்கம், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு உறுப்பினர் கள் கொண்ட குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது. மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைக ளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவது எப்படி, அதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பவை குறித்து பரிந்துரைப்பதே இந்தக் குழுவின் ஆய்வெல்லை (terms of reference)யில் தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இணைக்கப்பட்டிருப்பதிலிருந்தும் இந்தக் குழுவில் பொறுக்கி எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ள இதர நபர்களைப் பார்ப்பதிலிருந்தும் இந்தக்குழு அரசாங்கம் எதை விரும்புகிறதோ அதைச் செய்யும் என்று எதிர்பார்த்திட முடியும்.
2014 முதலே...
2014இல் பாஜக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்ததிலி ருந்தே, நரேந்திர மோடி குறிப்பிட்ட கால இடைவெளி களில் தொடர்ந்து ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ப தன் தேவையை அறிவித்துக் கொண்டிருந்தார். 2020இல் “இது ஒன்றும் விவாதத்திற்குரிய ஒன்று அல்ல” என்றும், “இது இந்தியாவிற்கான தேவை” என்றும் அவர் பிரகடனம் செய்திருந்தார்.
ஏற்கெனவே மூன்று குழுக்கள்...
மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக ஆராய்ந்திட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2015 இல், பணியாளர், பொதுக் குறைகள், சட்டம்-நீதி ஆகியவற்றின் நாடாளுமன்ற நிலைக்குழு (Parliamen tary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice) இது தொடர்பாக ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. 2017இல் நிதி ஆயோக், ‘ஒரே சமயத்தில் தேர்தல் குறித்து ஆய்வு’ (`Analysis of Simultaneous Election’) என்பதன் மீது ஒருசில முன்மொழிவுகளை அளித்திருந்தது. 2018 ஆகஸ்டில் சட்ட ஆணையம் ஒரே சமயத்தில் தேர்தல்கள் குறித்து வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவை அனைத்தும் சில மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக் காலத்தைக் குறைத்து, அல்லது, சிலவற்றின் ஆட்சிக் காலத்தை நீட்டித்து, முன்மொழிந்திருந்தன. ஏனெ னில் அப்போதுதான் மக்களவைக்கான தேர்தல்களை அவற்றுடன் இணைத்து நடத்திட முடியும். சிலர் இந்தத் தேர்தல்களை ஐந்தாண்டுக் காலத்தில் இரு பகுதிக ளாக நடத்திடப் பரிந்துரைத்தனர். அதாவது, ஒரு பகுதி, மக்களவைத் தேர்தல்களுடன் நாட்டிலுள்ள மாநில சட்டமன்றங்களில் பாதி அளவிற்குத் தேர்தல் களை நடத்துவது. அடுத்த பகுதியில் இதர சட்டமன்றங் கள் அனைத்திற்கும் தேர்தல்கள் நடத்துவது.
ஜனநாயக அடிப்படைக்கு எதிரானது
மக்களவைத் தேர்தல்களுடன் மாநில சட்டமன்றங் களுக்கும் தேர்தல்களை நடத்துவதற்கான முன்மொழி வுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத் தும் ஜனநாயக விரோதமானவை மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆணி வேரையே வெட்டி வீழ்த்திடும் நடவ டிக்கைகளாகும், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறிப் பிட்ட கால அளவிற்கு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பையும் அடித்துவீழ்த்திடும். நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள், அல்லது அர சாங்கத்தின், ஆயுட்காலத்தை வெட்டிக் குறைப்பதோ அல்லது நீட்டிப்பதோ, கட்சி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரா னதாகும் மற்றும் ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற/சட்ட மன்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை மீறுவதாகும். மேலும், ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவ தென்பது, அரசாங்கம் நாடாளுமன்றம்/சட்டமன்றங்க ளுக்குப் பதில்சொல்ல வேண்டும் என்கிற அரசமைப்புச் சட்டத்தின் விதிகளைக் குளறுபடி செய்வது அல்லது மீறுவதாகும். அரசமைப்புச்சட்டத்தின்கீழ், ஓர் அரசாங்கமானது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, கவிழ்ந்தாலோ, அல்லது, நிதிச் சட்ட முன்வடிவின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் தோல்வியுற்றாலோ, அது ராஜினாமா செய்ய வேண்டிய தாகும். (it is bound to resign). அதனைத்தொடர்ந்து ஒரு மாற்று அரசாங்கம் அமைக்கப்பட முடியவில்லை என்றால், அவை கலைக்கப்பட்டு, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மக்களவைக்கோ, அல்லது, சட்டமன்றங்களுக்கோ பதவிக் காலம் நிர்ணயம் (fixity of tenure) செய்யப் படவில்லை.
மக்களின் தேர்வை பொருத்தமற்றதாக்கும் ஸ்திரத்தன்மை
‘பதவிக் காலம் நிர்ணயம்’ என்பதன் பொருள், ஓர் ஆளும் கட்சி, அவையில் உறுதியான பெரும்பான்மை யுடன் இருக்கும் சமயத்தில், முன்தேதியிட்டுத் தேர்தல் கள் நடத்துவதற்காக, அவையைக் கலைத்திட பரிந் துரைக்க முடியாது. மேலும், மக்களவையில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் முன்மொழியப்பட்டால், அத்துடன் மாற்று அரசாங்கம் அமைத்திட புதிய தலைவரையும் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்துடன் இணைத்திட வேண்டும் என்று சட்ட ஆணையம் முன்மொழிந்திருக்கிறது. “நம்பிக்கையின்மையின் ஆக்கப்பூர்வமான வாக்கு” (“constructive vote of no confidence”) என்று இது கூறப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில், ஓர் அரசாங்கம் பெரும் பான்மையிழந்து தோல்வியடையுமானால், அதற்கு மாற்றாக ஏதேனும் ஓர் அரசாங்கம் இருந்திட வேண் டும், அது மக்களின் தெரிவினைப் பிரதிநிதித்துவப் படுத்தாததாகக் கூட இருந்திடலாம். பதவிக்காலத் தை நிர்ணயம் செய்வதன் மூலம் ஸ்திரத்தன்மைக்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. இங்கே மக்களின் தேர்வு பொருத்தமற்றதாகி விடுகிறது. இது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமைந்திடும்.
கூட்டாட்சியை ஒழித்துக் கட்டுவது
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பதை அமல்படுத்த முனைவதன் நோக்கம், அதிகாரங்களை ஒன்றிய அர சாங்கத்துடன் குவித்து, சாராம்சத்தில் மாநிலங்களின் அதிகாரங்களை, கூட்டாட்சித் தத்துவத்தை, ஒழித்துக் கட்டுவதேயாகும். குடியரசுத் தலைவருக்கு, அதாவது ஒன்றிய அரசாங்கத்துக்கு, மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக் காலத்தை வெட்டிக் குறைத்திடவோ அல்லது நீட்டித்திடவோ அதிகாரம் அளிப்பதென்பது, முழுமை யாக மாநிலங்களின் உரிமைகளையும், அதன் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் உரிமைகளையும் அரித்து வீழ்த்துவதேயாகும். ஒரே சமயத்தில் தேர்தல் கள் என்பதை அடைந்த பின்னர், மாநில அரசாங்கங் கள் அங்கேயுள்ள சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதும், மக்கள் தங்களுக்கான மாநில அரசாங்கங்களைப் பெறுவது என்பதற்கான விருப்பத் தேர்வும் வரையறைப்படுத்தப்படும்.
மாநில அரசாங்கங்களின் உரிமைகளையும், மாநில சட்டமன்றங்களின் உரிமைகளையும் மீறி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வருகி றார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கி றோம். ஒரே சமயத்தில் தேர்தல்கள் என்ற பெயரில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கட்டுப்பாடுகள் ஒன்றிய அரசிடம் குவிவதன் மூலம், ஆளுநர்கள் என்ப வர்கள் ஒன்றிய அரசின் வைஸ்ராய்களாக நடந்து கொள்வார்கள் என்றாகிவிடும்.
ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஜனநாயக விரோத முயற்சி
இந்தியா 28 மாநிலங்களைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக நிலைமைகளுடன் இருப்பவைகளாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஒரு சீரான நிலையைக் கொண்டுவருவதற்கான முயற்சி ஆர்எஸ் எஸ்/பாஜக வகையறாக்களின் சிந்தனையோட்டமாகும். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்கிற இவர்களின் கருத்தாக் கமும், இவர்களின் ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சா ரம்’ என்கிற முழக்கத்தைப் போன்றதேயாகும்.
நிறைய திருத்தங்கள் செய்திட வேண்டும்
நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் எனில், அதற்கு அரசமைப்புச்சட்டத்தை பெரிய அளவுக்கு மறுசீரமைப்புச் செய்தாக வேண்டும். நாடாளுமன் றத்தின் ஆயுட் காலம் அல்லது ஆட்சிக் காலம் குறித்த அரசமைப்புச்சட்டத்தின் 83ஆவது பிரிவில் திருத்தங் கள் கொண்டுவரப்பட வேண்டும். அதேபோன்றே மக்க ளவையைக் கலைப்பது தொடர்பான 85ஆவது பிரிவி லும், மாநில சட்டமன்றங்கள் தொடர்பான 172ஆவது பிரிவிலும், மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது தொடர்பான 174ஆவது பிரிவிலும், அரசமைப்புச் சட்ட எந்திரம் தோல்வி அடைந்தது என்கிற 356ஆவது பிரிவிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவை மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இதர விதிகளிலும் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
அவசர கதியில் அமல்படுத்த துடிப்பு
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை எப்படிப்பட்டதாக இருந்தபோதிலும், அவற் றை அமல்படுத்துவதற்காக அரசமைப்புச் சட்டத்தி லும், இதர சட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு கால அவகாசம் தேவை. அவற்றை வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலுக்காக, அவசரகதியில் அமல்படுத்திட முடியாது. ஆனாலும், அரசாங்கம் இதுதொடர்பாக நட வடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. வரும் செப்டம்பர் 18 முதல் 22 தேதிகளில் நடைபெறவிருக்கும் நாடாளு மன்றத்தின் சிறப்பு அமர்வின்போது, இது தொடர் பாக சில அறிவிப்புகள் வரலாம். மோடி அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை களை எதிர்கொள்ளும் விதத்தில் எதிர்க்கட்சிகள் விழிப் புடனிருந்து, தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒரே தேசம் ஒரே தேர்தல் என்னும் முழக்கம் ஜனநாயகத் திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எப்படியெல்லாம் ஆபத்தைக் கொண்டுவரும் என்று மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரச்சாரத்தை உடனடியாகச் செய்திட வேண்டும்.
செப்டம்பர் 5, 2023, தமிழில் : ச.வீரமணி