articles

img

மதச்சார்பின்மை - தேசத்தின் அஸ்திவாரம் - மதச்சார்பின்மை - தேசத்தின் அஸ்திவாரம்

மதச்சார்பின்மைதான் இந்தியா எனும் தேசத்திற்கு அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரமும் அதுதான். அரசியல் நிர்ணயசபையின் விவாதங்களில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டது போல் மதச்சார்பின்மை இல்லாவிட்டால் அரசியல் அமைப்புச் சட்டம் முன் வைக்கிற மற்ற எல்லா சிறப்பு அம்சங்களும் பொருளற்ற தாகப் போகும். மதச்சார்பின்மை என்பது அந்த அள வுக்கு ஆழமாக நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இரத்த சம்பந்தமுள்ளதாக இருக்கிறது - உயிருள்ள உடலின் சுவாசக் காற்று போல! அரசியல் அமைப்புச் சட்டம் இந்துத்துவாவாதி களுக்கு கண்ணில் தூசியாக உறுத்துகிறது. வேறு காரணம் ஏதும் இல்லை. மதச்சார்பின்மைச் சிந்தனை யை ஒழிப்பதற்குக் கடந்த எழுபது ஆண்டுகளாக அவர்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கடு மையாக முயற்சி செய்துவருகிறார்கள். மதச்சார் பின்மை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியமான அம்சம் அல்ல என்று வாதிப்பதற்கு இந்துத்துவா மதவாதிகள் காலங்காலமாக எழுப்பி வருகிற ஒரு வாதம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக வுரையில் ஆரம்பத்தில் மதச்சார்பின்மை என்ற சொல் இருக்கவில்லை என்பதாகும். 1975-இல் 42-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திராகாந்தி தான் அதை முகவுரையில் சேர்த்தார் என்றும், அது மேற்கத்திய சிந்தனை என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையின் சாராம்சத்திற்குள் செல்வ தற்கு உதவுகிற  இரண்டு விஷயங்கள் நம் முன் உள்ளன. அவற்றில் முதலாவது 1973-இல் கேசவானந்த பாரதி வழக்காகும். 1975-இல் செய்யப்பட்ட திருத்தத்திற்கு முன்புதான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு  வழங்கியது. நாடாளுமன்றத்தில் இருக்கிற பெரும் பான்மையின் பேரால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் திடமான தீர்ப்பு வழங்கியது. இந்த அடிப்படை அம்சத்தின் ஒரு பகுதிதான் மதச்சார்பின்மை என்று உச்சநீதிமன்றம் உறுதியாகச் சொல்லவும் செய்தது. பாபர் மசூதியைத் தகர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாகச் செயல் பட்ட மாநில அரசுகளைக் கலைத்தது சரிதான் என்று நீதிமன்றம் சொன்னதும் இதன் அடிப்படையில்தான்.  

சுதந்திர தேசத்தின் மதச்சார்பின்மை 

அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களில் சுதந்திர இந்தியாவின் மதச்சார்பின்மையின் தன்மை குறித்து விரிவான அளவில் விவாதங்கள் நடைபெற்றன என்பது உண்மை. 565 குறுநில மன்னர்களின் பிரதேசங்களும், 13 பிரிட்டிஷ் மாகாணங்களும், எட்டு மதங்களும், எண் ணற்ற சாதிகளும், மொழிகளும், இனக்குழுச் சமூகங்க ளும் உள்ள இந்தியாவில் அரசாங்கம் மதவிஷயங்க ளில் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை என்ற நிலை வந்தால் அது சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமை களையே இல்லாமற் செய்துவிடும். எல்லா மதப்பிரிவு களைச் சேர்ந்தவர்களுக்கும், மதநம்பிக்கை இல்லாத வர்களுக்கும் சமஉரிமை அதிகாரங்கள் உள்ள தேச மாக இந்தியா நிலைப்பெற்றிருக்க வேண்டுமென்றால் வெறும் மதச்சார்பின்மைக்குப் பதிலாக ஆக்கப்பூர்வ மான மதச்சார்பின்மை எனும் தீர்மானத்தை தேசம் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருந்தது. 

1920கள் வரை நடைமுறையில் இருந்ததும், பால கங்காதர திலகர் போன்றவர்கள் தலைமை வகித்தது மாகிய மதஆத்மிக தேசிய சிந்தனையைப் புறந்தள்ளிக் கொண்டு காந்திஜியின் தலைமையில் உருவாகிவந்த மதச்சார்பற்ற தேசிய சிந்தனைதான் இந்தியாவைச் சுதந்திரத்தை நோக்கி இட்டுச்சென்றது. அதன் சிறப்பு அம்சங்கள்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக வுரையில் பிரகாசிக்கிறது. “நாம் இந்திய மக்கள்” என்கிற பிரசித்திப் பெற்ற  ஆரம்ப வாக்கியத்திற்குப் பதில் தெய்வத்தின் பெயரால் அரசியல் அமைப்புச் சட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்திற்கு வாக் கெடுப்பு நடத்தி அதைத் தோல்வியுறச் செய்துவிட்டுத் தான் முகவுரைக்கு இறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டது என்கிற விஷயமும் கவனிக்கத் தக்கதாகும். தெய்வத்தி னுடையதோ, மதத்தினுடையதோ அல்ல. மாறாக எல்லா பிரிவுகளையும் சேர்ந்த மக்களுடையதுதான் இந்த தேசம் என்று அரசியல் அமைப்புச் சட்டம் ஆரம்ப வாக்கியத்தி லேயே அறிவிக்கிறது என்பதே இதன் அர்த்தம். 

மதச்சார்பின்மை குறித்த வெவ்வேறு கண்ணோட் டங்களை மதிப்பீடு செய்துதான் ஆக்கப்பூர்வமான மதச் சார்பின்மை என்ற முடிவுக்கு அரசியல் நிர்ணயசபை வந்தது. அரசியல் நிர்ணயசபையின் விவாதங்களில் இது சம்பந்தமாக மூன்று கண்ணோட்டங்களாவது பிரதி பலித்திருக்கும். மதச்சார்பின்மை என்கிற கருத்தை முன் வைத்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் அதற்கு வழங்கிய ‘மதச்சார்பற்ற அறநெறி’ என்கிற கருத்து தான் முதலாவது. மேற்கத்திய பாணியிலான மதச்சார் பின்மை சிந்தனைக்கு அஸ்திவாரம் போட்ட கருத்தா கும் அது. இதன் மறுபக்கம் கலாச்சார தேசியம் என்ற கருத்தின் மறைவில் மததேசியவாதம் உயர்த்திய இந்துத்துவ மதவாத நிலைபாடும் அரசியல் நிர்ணய சபையில் பிரதிபலித்தது. இத்துடன் ‘காந்திஜி சர்வ தர்ம சமபாவன’ என்று சொல்லப்பட்ட, ‘எந்த மதத்தோடும் வெறுப்பு இல்லாமல் இருங்கள்’ என்ற கண்ணோட்ட மும் உருவானது. மூன்றாவது கண்ணோட்டத்தைத் தான் அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது. அரசி யல் அமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள மதச்சார் பின்மையின் அடிப்படை வேறல்ல.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மை மதச்சார்பின்மையில் உறுதியாக வேரூன்றியுள் ளது என்கிற உண்மையை அரசியல் சட்டத்தில் சேர்க்கப் பட்ட பல பிரிவுகளும் தெளிவுபடுத்தியிருக்கின்றன. சட்டத்தின்முன் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று அறிவிக்கிற 14-ஆவது பிரிவும், சாதி, மதத்தின் பேரால் பாகுபாடு கூடாது என்று அறிவிக்கிற 15-ஆவது பிரிவும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின் மைக்கு வலுவான அஸ்திவாரத்தைக் கட்டமைத்துள் ளது. அதுபோல்தான், மதநம்பிக்கையாளர் அனைவருக் கும் அவரவர் நம்பிக்கையை அறிவிப்பதற்கும், பின் பற்றுவதற்கும் 25-ஆவது பிரிவு உரிமை வழங்குகிறது. இதற்கடுத்த 26-ஆவது பிரிவு வெவ்வேறு மதப்பிரிவி னர்க்கு மதநிறுவனங்கள் நடத்துவதற்கும், அதற்கு சொத்து சேகரிப்பதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் உரிமை வழங்குகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் அர சியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக நிர்ண யிக்கப்பட்ட ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற தன்மையை உறுதிபடக் கூறுகிறவை என்று 1962-லேயே உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அரசியல் நிர்ணய சபையின் வரலாறு 

உண்மையில் வரலாற்றின் பல கட்டங்களுக்குப் பின்னர்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ற சிந்தனை அரசியல் நிர்ணய சபையில் வந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்க முயற்சியின் வர லாறு அதன் நீண்ட பயணத்தை நன்றாக வெளிப்படுத்து கிறது. 1895-இல் ஸ்வராஜ் (சொந்த தேசம்) மசோதா, 1925-இல் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோஸியேஷன் தயாரித்த அரசியல் அமைப்புச் சட்ட நகல், 1927-இல் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பின்போது தயாரிக்கப்பட்ட நேரு ரிப்போர்ட், 1935-இல் இந்திய அரசுச் சட்டம், 1944-இல் எம்.என்.ராய் தயாரித்த நகல், 1946-இல் நாராயண் அகர்வால் தயாரித்த காந்தியன் அரசியல் அமைப்புச் சட்டம் என இவ்வாறு எத்தனையோ முந்தைய கால முயற்சிகள் அரசியல் நிர்ணயசபைக்கு உண்டு. புதிய தேசத்தின் பெயரைச் சொல்லி அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களிலேயே தேசிய சிந்தனையை மதச்சார்பற்றதாக உறுதி செய்வ தன் அடையாளங்கள் உண்டு. பாரதம், இந்துஸ்தான், பாரதவர்ஷம் என்றவாறு பல பெயர்களும் அன்று ஆலோ சிக்கப்பட்டன. ஆனால், அம்பேத்கர் முன்வைத்த ‘இந்தியா அல்லது பாரதம்’ என்ற பெயரைத்தான் அரசி யல் நிர்ணய சபை அங்கீகரித்தது. மத அடையாளம் மற்றும் புராணத் தன்மையுள்ள பெயர்களுக்குப் பதில் நிலவியல் அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததும், வரலாற்றுப் பரிணாமங்கள் மூலம் உறுதிசெய்யப் பட்டதுமாகிய ‘இந்தியா’ என்ற பெயர்தான் தேசத்தின் பெயராக அங்கீகரிக்கப்பட்டது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் வடிவமைப்பிலேயே உள்ளார்ந்த மதச்சார்பின்மை யின் முத்திரையைக் காணமுடியும். காலிக்ராஃ பிஸ்டாகிய பிரேம்பெஹாரி நாராயண் ரெய்ஸாதா வின் கையெழுத்தில் எழுதித் தயாரிக்கப்பட்டதுதான் இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ள மூலநூல். 1,17,369 சொற்கள் உள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகம் உலகிலேயே மிகப் பெரிய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகங்களில் ஒன்றாகும். தேசிய இயக்கத்தில் பங்காளியாகவும், ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்காக  போஸ்டர்கள் வரை யவும் செய்த நந்தலால் போஸின் தலைமையில்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பக்கங்கள் சித்திர வேலைப்பாடுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கோட்டுச் சித்திரங்கள் வரைந்து சேர்க்கவும்பட்டது. 

அசோகத் தூண் சிற்பத்தின், தர்மசக்கரத்தின் சித்தி ரத்துடன்தான் அது ஆரம்பமாகிறது. அடுத்து, அரசி யல் அமைப்புச் சட்டத்தின் புகழ்பெற்ற முகவுரை அமைந் துள்ளது. ஒன்றாம் பாகத்தில் ஹரப்பா சின்னங்களில் ஒன்று கோட்டுச் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இந்தி யக் கலாச்சாரத்தின் மிகப் பழமையான சின்னத்திலி ருந்து அரசியல் அமைப்புச் சட்டம் ஆரம்பமாகிறது. அடுத்துவரும் பாகங்களில் வேதகாலத்தின் மகாபார தம், இராமாயணக் கதைச் சித்திரங்கள் சேர்க்கப்பட்டுள் ளன. ஐந்தாம் பாகத்தின் ஆரம்பத்தில் புத்தர் சித்திரத் தையும், பதினான்காம் பாகத்தின் ஆரம்பத்தில் அக்பர் சபையின் கோட்டுச் சித்திரத்தையும் பார்க்கலாம். பதி னாறாம் பாகத்தின் ஆரம்பத்திலுள்ள சித்திரங்களில் ஒன்று திப்புசுல்தான் சித்திரமாகும். மற்றொன்று ஜான்ஸிராணி சித்திரம். இதற்குப் பின்னால் நந்த லாஸ் போஸ் வரைந்த காந்திஜியின் பிரசித்திப் பெற்ற கோட்டுச் சித்திரம் வருகிறது. பதினேழாம் பாகத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு இந்தியாவின் கலாச்சார வர லாற்றின் வளர்ச்சிப் போக்கும் அதன் பன்முகமும் மதப் பன்மையும் ஒன்றுபடுத்தப்பட்ட நிலையில்தான் அரசி யல் அமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி வடிவமைக்கப் பட்டுள்ளது.

1946 டிசம்பர் 11 அன்று பகல் 1 மணிக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தை ஆச்சார்ய கிரு பாளனியும் மௌலானா அப்துல்கலாம் ஆஜாதும் சேர்ந்து தலைவர் பதவிக்கு அழைத்து வந்தனர். அரசி யல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர்: “இன்குலாப் ஜிந்தாபாத்! ஜெய்ஹிந்த்!” 1921-இல் அகமதாபாத் மாநாட்டில் முழு சுதந்தி ரத்திற்கான தீர்மானத்தை முதன்முறையாக முன்வைத்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி உருவாக்கிய இன் குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கமும், சுபாஷ்சந்திர போஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சைனுல் அப்தீன் ஹஸன் உருவாக்கிய ‘ஜெய்ஹிந்த்!’ என்கிற முழக்கமும் எழுப்பப்பட்ட சூழலில் அரசியல்  நிர்ணய சபையின் தலை வராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். இந்திய தேசத்தின் இயல்பான அடையாளமாகவும் இருந்தது அந்தப் பதவியேற்பு நிகழ்வு. அது இந்திய மதச்சார் பின்மையின் அடையாளமாகவும் திகழ்ந்தது.

தேசாபிமானி நாளிதழ் (26.1.2022),  தமிழில்: தி.வரதராசன்