articles

img

கூட்டாட்சித் தத்துவத்திற்கு கொள்ளி வைக்கும் மோடி அரசு - பேரா. ஜெயதி கோஷ், பொருளாதார நிபுணர்

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் நரேந்திர  மோடி அரசு மிக வலுவான மையப்படுத்தும் போக்கினைத் தான் கடைப்பிடித்து வருகிறது. அது ஏதோ மாநில அரசுகளின் உரிமைகளை யும், அதிகாரங்களையும் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தின் கீழ் மாற்றிக் கொண்டதாக மட்டும் பார்க்க முடியாது; மாறாக, ஒன்றிய அரசின் அனைத்து  அமைச்சர்களின் அதிகாரங்களையும் கூட பிரதமர் மற்றும் உள்துறை அலுவலர்களின் அறைகளின் கதவுகளுக்குள் அடைத்துக் கொண்டுள்ளது. இந்த இரண்டு அலுவலகங்கள் மட்டுமே அதிகாரக் குவியல்களின் மையமாக மாற்றப்பட்டுள்ளது. திட்டக்கமிஷனுக்கு (Planning Commission) மூடுவிழா நடத்தப்பட்டது, மாநிலங்களுக்கு இடை யிலான கவுன்சில்களை திறம்பட கலைத்தது - இவை யிரண்டும் மாநில அரசுகள், தங்களை பாதிக்கும் பொரு ளாதார சிக்கல்கள் சம்பந்தமான பிரச்சனைகளை எழுப்புவதற்கு கூட இடமில்லாமல் செய்துவிட்டது.

இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மூன்றில் இரண்டு பங்கினை பொது செலவினங்களுக்காக செல விட்டுள்ளன. ஆனால், மாநில அரசுகள்பெற்ற மொத்த  நிதி வருவாய் வெறும் 37.3% மட்டுமே. ஆனால் ஒன்றிய அரசு திடீர் திடீரென அறிவிக்கும் பல பொரு ளாதாரத்தை சீர்குலைக்கும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் (உதாரணம்: பணமதிப்பிழப்பு நட வடிக்கை, முன்னறிவிப்பின்றி அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு) மாநில அரசுகளின் பொரு ளாதார நிலை மேலும் மோசமாகி விடுகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய படுமோசமான நடவடிக்கை களால், பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பும் மாநில அரசுகளின் கைகளில் திணிக்கப்பட்டதைப் பார்த்தோம். 

அடுத்த கட்ட அதிகாரக் குவியல்

கடந்த 9 ஆண்டு மோடியின் ஆட்சியில் மாநில அரசு கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பட்ஜெட் 2023 -24 வெளிப்படுத்தியுள்ள அடுத்தகட்ட அதிகாரக் குவியல் மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது நிதி கமிஷன் தந்திருக்கும் பரிந்துரையின்படி (2015 ஆம் வருடம்), நாட்டில் திரட்டப்படும் மொத்த வரி வருவாயில் 42%  மாநிலங்களுக்கு தர வேண்டும். இந்த பரிந்துரையை பாஜக அரசு ஏற்றுக் கொண்ட பின், பெரும்பாலான வரி  வருவாயை “செஸ் (cess) மற்றும் சர்சார்ஜ்”  மூலமாகவே வசூல் செய்கிறது ஒன்றிய அரசு. ஒட்டு மொத்த செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி விதிப்பினை, 20% அளவிற்கு நயவஞ்சகமாக உயர்த்தியுள்ளது. செஸ்  மற்றும் சர்சார்ஜ் வரி மூலமாக திரட்டப்படும் நிதி ஆதா ரத்தை மாநில அரசுகளுக்கு தர வேண்டியதில்லை என்பது மோடி அரசு வைத்திருக்கும் உள்குத்து. இந்த  செஸ் மற்றும் சர்சார்ஜ்வரி விதிப்பு 2011-12 ஆம் வருடம் 10% என்கிற அளவில் தான் இருந்தது என்பது தான் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது.

மாநிலங்களின் பங்கில் வெட்டு

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால், இந்திய நாட்டில் திரட்டப்படும் மொத்த வரிவருவாயில் 36.6% என்ற அளவில் மாநிலங்களுக்கான பங்கின் விகிதம்  2019-20 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இந்த விகிதம்  “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்” 2021-22 பட்ஜெட்டில் 33.2% ஆக குறைந்தது. நடப்பு ஆண்டிற்கான, 2022-23 திருத்தப்பட்ட மாநி லங்களுக்கான நிதிப் பங்கீடு 31.2% மட்டுமே!  15 வது   நிதி கமிஷன் பரிந்துரையில் மாநிலங்களுக்கு தர வேண்டிய வருவாயில் கால் பங்கு விகிதத்தை வெட்டி சுருங்கிவிட்டது மோடி அரசு. இதுபோக, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும்  நிதியையும் தொடர்ந்து குறைத்துக் கொண்டு வரு வதைப் பார்க்க முடிகிறது. 2021-22 ஆண்டு நிதி ஆண்டில் 4,60,575 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு  நடப்பு நிதியாண்டில் 3,67,204 கோடியாக வெட்டப் பட்டுள்ளது.  ஆனால் ஒன்றிய அரசு இதோடு நிற்கவில்லை; நடப்பு ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டி னை 3,07,204 கோடியாக மாற்றியுள்ளது. வரும் நிதி ஆண்டிற்கான, 2023-24, பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. நிதி கமிஷன் ‘கட்டாய ஒதுக்கீடு’ என (Mandatory)  ஒரு சில செலவினங்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகள், இயற்கை சீற்றம்) ஒதுக்கச் சொல்கிறது.  இந்த வகை செலவினங்கள் 2021-22 ஆம் ஆண்டில் 2,07,435 கோடியாக இருந்தது, 2022-23 நிதி ஆண்டில், 1,73,157 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த தொகையில் 1,65,480 கோடி மேல் செலவிடக் கூடாது என்று சொல்லியுள்ளது. இந்த இரண்டு வருடங்களில் மட்டும் 42,000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு ஒன்றிய அரசால் குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் விளங்குகிறது.

திட்டங்களுக்கு நிதிவெட்டு

இவ்வாறு மோடி அரசு மாநிலங்களின் வருவாயையும் அத்தியாவசிய தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் கிஞ்சித்தும் கருணையின்றி வெட்டித் தள்ளிவருகிறது. இதன் எதிரொலி தான் பல  திட்டங்களில் நிதி குறைப்பிற்கான காரணம். உதாரண மாக, கிராமப்புற வளர்ச்சிக்காக, அந்த அமைச்சகம் 2021-22 ஆண்டிற்காக 2,88,446 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த தொகை 2023-24 ஆம்  வருடம் 2,36,545 ரூபாயாக குறைக்கப்பட்டதன் விளை வாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீட்டினை 89,000 கோடியிலிருந்து  60,000 கோடியாக குறைத்துள்ளளது. அதுவும் கிராமப்புறத்தில் வேலையின்மை விகிதம் 10.8 சதமாக உயர்ந்துள்ள நிலையில் இத்தகைய மோசமான முடிவினை எடுத்துள்ளது மோடி அரசு. 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் சொல்லும் செலவீனங்களை கூட இரக்கமில்லா மோடி அரசு வெட்டித் தள்ளியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு  பட்ஜெட்டில் 2,15,000 கோடி ரூபாய் உணவு பாது காப்பிற்காக ஒதுக்கிய போதிலும், பொருளாதார ஆய்வறிக்கையின் படி, இதில் பாதி தான் செல வழிக்கப்பட்டுள்ளது. அதாவது 1,35,000 கோடி ரூபாய்  மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில்  ரேசன் முறை மூலம் இலவசமாகப் பெறும் உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதற்கு மேலாக மானிய விலையில் வழங்கப்பட்ட 5 கிலோ  (அரிசி - 3 ரூபாய், கோதுமை - 2 ரூபாய், தானியங்கள் - 1 ரூபாய்) உணவுப் பொருட்கள் நிறுத்தப்பட்டன. இதனால், வறுமைக் கோட்டிற்கு கீழே உழலும் ஏழை  மக்கள் தங்களது குடும்ப தேவைக்கான உணவு பொருட்களை வெளிச் சந்தையில் அதிக விலை  கொடுத்து தான் வாங்கும் சூழலிற்கு தள்ளப்பட்டுள் ளார்கள்.   ஆனால் உணவு மானியம் வெட்டு என்று தைரி யமாக மக்களிடையே சொல்லத் தயங்கும் நரேந்திர மோடி அரசு, ‘புதிய உணவு கொள்கை’ என்று அறிவிக்கிறது... விளக்கமாறுக்கு பட்டு குஞ்சம்போல்!

அடிப்படை கல்விக்கும் உயர்கல்விக்கும் வரும்  ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டினை, பண வீக்கத்திற்கு இணையாக கூட மோடி அரசு உயர்த்த வில்லை. கொரோனா ஊரடங்கிற்குப் பின்பாக மாண வர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டினை கூட இந்த ஒன்றிய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்பது துயரம் நிறைந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய எந்த ஒன்றிய அரசும் இது போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதே நிலை தான் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசு கள், அந்தந்த மாநில மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவும் அனுதினமும் முயற்சித்து வருகின்றன. 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின், மாநில அரசுகள் வசூலிக்கும் வரிகளை ஒன்றிய அரசுக்கு தான் முழுமையாக செலுத்திட வேண்டும். கலால் வரி, பெட்ரோலிய எரிபொருளுக்கான வரி, சாராய விற்பனை வரி வசூல்களில் மட்டுமே மாநில அரசுக்குண்டான பங்கினை வைத்துக் கொள்ள முடியும். மாநில அரசுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. இந்த சூழலில் மாநில அரசு இயற்கை பேரிடர், மற்றும் அடிப்படை தேவைகளுக்கு வேண்டிய தொகையை போராடி, கிட்டத்தட்ட யாசகம் பெறுவதை போல் பெற வேண்டியுள்ளது. 

இந்திய நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும், முரண்பாட்டின் மொத்தக் கலவையாக நரேந்திர மோடி அரசு மாறி நிற்கிறது. அரசியல், பொருளாதாரம் மற்றும் நிதி அதிகாரத்தின் குவியல் எல்லாவற்றையும் தங்களின் கைகளில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு, மக்கள் நலன், மக்களின் சுகாதாரம், பட்டினி ஒழிப்பு, கல்வி போன்ற பொறுப்புகளை பரவலாக்கி மாநில அரசு களின் கைகளில் கொடுத்துள்ளது. மொத்தத்தில் கூட்டாட்சித் தத்துவம் மோடி அரசினால் எரியூட்டப்படு வது கண் முன்னே தெரிகிறது. 

- தமிழில்: வெ.ரமேஷ்