நவீன இந்தியாவைப் பாதுகாத்திடும் போராட்டத்தை உறுதியோடும், வர்க்கக்கண்ணோட்டத்துடனும் முன்னெடுக்கிறோம். அகில இந்திய மாநாடு கொடுக்கவுள்ள வெளிச்சத்தில், நமது போராட்டம் தமிழகத்தில் மேலும் வீரியமடையும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23-ஆவது மாநாடு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி நிறைவடைந்தது. மதுரை, தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்ற மாநகரம். சங்க காலம் தொடங்கி, விடுதலை இயக்கத்தின் முத்தாய்ப்பாக காந்தியடிகள் அரையாடை தரித்த நிகழ்வு வரையிலும் மதுரையை மையம் கொண்ட முக்கிய நிகழ்வுகள் ஏராளம். மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் மது ரைக்கு என்று தனிச் சிறப்பான இடம் உண்டு. சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா வின் தலைமையில் மாணவர் இயக்கம் எழுச்சியடைந் தது முதல், ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் கம்பம் பள்ளத் தாக்கு விவசாயிகள் எழுச்சி முதல் மதுரை, திண்டுக்கல், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்கள் வரை வீறுகொண்ட தொழிலாளி வர்க்க இயக்கங்கள் எனத் தனி வரலாறே உண்டு. இந்தக் களத்திலிருந்துதான் தோழர்கள் பி.ராமமூர்த்தி, கே.பி.ஜானகியம்மாள், ஐ. மாயாண்டி பாரதி, மாரி மணவாளன், தூக்குமேடை தியாகி பாலு, கு.லீலாவதி உள்ளிட்ட ஒப்பற்ற தலைவர்க ளும், தியாகிகளும்; ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் கட்சியின் மகத்தான தலைவர்களாக என்.வரதராஜன், ஏ.அப்துல் வஹாப், ஆர்.ராமராஜ். வி.ஏ.கருப்புசாமி, வி.கார்மேகம், எம்.முனியாண்டி, பொ.மோகன், என்.நன்மாறன், இரா.ஜோதிராம் போன்றவர்களும் உருவானார்கள்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கட்சி போட்டியிட்டு களம் கண்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 28, 29 மாபெரும் அகில இந்திய வேலைநிறுத்தம் நடை பெற்றுள்ளது. அகில இந்திய வேலைநிறுத்தம் இந்த பெரும் பணிகள் முடிந்தவுடனே கட்சியின் மாநில மாநாட்டையும் நடத்தினோம். கால இடைவெளி மிகவும் குறைவு என்றாலும்,வெகு சிறப்பாக மாநாட்டினை நடத்திட முடியும் என்று சாதித்துக் காட்டிவிட்டார்கள் வர வேற்புக்குழு தோழர்கள். வரவேற்புக் குழு தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக் கானோர் கொண்ட தொண்டர் படை சுழன்று சுழன்று பணியாற்றியது. மாநாட்டிற்கு முதல் நாள் திறக்கப்பட்ட புத்தகக் கண்காட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுக் கண்காட்சியும் ஆயிரக்கணக்கான மக்களால் பார் வையிடப்பட்டன. மாநாட்டின் முதல் நாள் மாலை நடை பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்க ணக்கான செந்தொண்டர்கள் அணிவகுத்தார்கள். இப்பொதுக்கூட்டத்தில் கலை நிகழ்வுகளை துவக்கி வைத்து திரைக் கலைஞர் ரோகிணி பேசினார். அவர் உள்ளிட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆளுமைகளும் மாநாட்டிற்கு வந்திருந்தது சிறப்பு ஆகும். இவையெல்லாம் ஒரு நாளில் சாதிக் கப்பட்டவை அல்ல. பண மதிப்பினால் அளவிடத் தகுந்த பணிகளும் அல்ல. அர்ப்பணிப்பு மிக்க தோழர்க ளின் கடும் உழைப்பின் விளைச்சல். மாநகர் முழுவ துமே கோலாகலமாக அலங்கரித்த விழாக்கோலத்தை மதுரை மக்கள் கண்ணுற்றார்கள். இன்னொரு பக்கம், தீவிரமான அரசியல் விவாதங்களை மேற்கொள்ளும் உலைக்களமாக அமைந்தது பிரதிநிதிகள் மாநாடு.
அரங்கத்தின் உள்ளே...
மார்ச் 30 அன்று பொது மாநாடு பேரெழுச்சியுடன் அமைந்தது. தனது சிம்மக் குரலால் மொத்தக் கட்சியை யும் உணர்ச்சிப் பெருக்கிலும் உத்வேகத்திலும் ஆழ்த் தினார் நூற்றாண்டு நாயகர்- முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா. காணொலி வாயிலாக அவரது வாழ்த்தொலி எதிரொலிக்க பெரும் உற்சாகத்துடன் தொ டங்கியது பிரதிநிதிகள் மாநாடு. மாநிலம் முழுவதும் இருந்து 503 பிரதிநிதிகளும், 44 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். இவர்களின் 18% பேர் பெண்கள். 21 வயதே ஆன தோழர்கள் சமயன் மற்றும் பிருந்தா ஆகியோரும், 80 வயதை எட்டிய தோழர் டி.கே.ரங்க ராஜன், 78 வயது நிறைவு செய்த தோழர் எஸ்.ஏ.பெரு மாள் ஆகியோர் மாநாட்டில் முழுமையாக பங்கெடுத் தார்கள். இவர்களில் டி.கே.ரங்கராஜன், மிக அதிக எண்ணிக்கையில் (15) கட்சியின் மாநில மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்; எஸ்.ஏ.பெருமாள் 23 மாதங்கள் தலை மறைவு வாழ்க்கை அனுபவித்துள்ளார். அதே போல 2 ஆண்டுகள் சிறைவாழ்க்கையை அனுபவித்த தோழர் என்.செல்லத்துரையும் (பெரம்பலூர்) பிரதிநிதியாக பங்கேற்றிருந்தார். மாநாட்டின் 3 நாட்களும் உட்கட்சி ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த நிகழ்முறையாக அமைந்தன. 216 பக்கங்கள் கொண்ட மாநில மாநாட்டு அறிக்கையை நுணுக்கமாகவும், விரிவாகவும் வாசித்த பிரதிநிதிகள், குழுவிவாதம் மேற்கொண்டார்கள். பிரதிநிதிகள் குழுக்களின் சார்பில் 18 பெண்கள் உட்பட 83 பேர் விவாதத்தில் பங்கேற்று பல ஆக்கப்பூர்வமான கருத்துக் களையும், விமர்சனம் மற்றும் சுய விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். இந்த விவாதங்களில் இருந்து மாநாடு பல முக்கியமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
மாநாட்டின் நிறைவில் 80 பேர் கொண்ட புதிய மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலக் குழு வின் அதிகபட்ச வயது 72 என தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாக மிக நீண்ட அனுபவம் கொண்ட தலை வர்களான டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், அ. சவுந்தரராசன், ஏ.லாசர், சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் மாநிலக் குழுவில் இருந்து விடுவிக்கப் பட்டனர். மகத்தான மக்கள் பணியாற்றிய இந்தத் தலை வர்களை கவுரவித்த போது மாநாடே உணர்ச்சிமய மாக காட்சியளித்தது. வயது வரம்பு காரணமாக குறிப்பிட்ட பொறுப்புகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் இறுதி மூச்சு வரை செங்கொடி இயக்கத்தின் தளகர்த்தர் களாகவே அவர்கள் விளங்குவார்கள் என்பதை பிரதிநிதிகளின் வாழ்த்து முழக்கம் வெளிப்படுத்தியது.
4 ஆண்டுகளில் ...
தூத்துக்குடியில், 22 ஆவது மாநில மாநாடு நடந்த போது தமிழ் நாட்டின் அரசியல் சூழல் வேறாக இருந்தது. அதற்குப் பிறகான 4 ஆண்டுகளில் மாநிலத்தில் நடை பெற்றுவந்த அதிமுக ஆட்சியை, பாஜக தனது பொம்ம லாட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. மாநில உரிமைகள் காவுவாங்கப்பட்டன. மக்கள் போராட்டங் கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள், லாக்கப் கொலைகள், பாலியல் குற்றவாளிகளுக்கு பாது காப்பு, துப்பாக்கிச் சூடு என அடக்குமுறைத் தாண்ட வம் அன்றாடச் செய்திகளாக இருந்தது. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதும், தமிழ்நாட்டுக்காக முன்நிற்கும் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதும் மிக மிக அவசியம் என்றானது. கடந்த 4 ஆண்டுகளில் நாம் களத்தில் ஏராளமான போராட்டங்களை முன்னணியில் நின்று நடத்தியுள் ளோம். கொரோனா பெருந்தொற்றில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு நிவாரணங்கள் கிடைத்திடவும், தடுப்பூசி, மருத்துவ சேவை உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்திடவும் நமது தோழர்கள் உயிரையும் பணயம் வைத்து செயலாற்றினார்கள். அடுக்கடுக்கான வழக்கு களுக்கு அஞ்சாமல் போராட்டக் களங்களிலும் முன்நின் றார்கள். நமது கடும் போராட்டத்தின் பலனாகவும், அர சியல் உத்தியின் விளைவாகவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்; சுகாதார ஏற்பாடுகளை பரவலாக்கிட வேண் டும்; நிலக் குவியல் தொடர்வதும், நிலமில்லாத மக்கள் அதிகரிப்பதும் தலையீடு செய்ய வேண்டிய பிரச்சனை களாக உள்ளன. சிறு/குறுந் தொழில்கள் நெருக்கடியை சந்திக்கின்றன. சாதிய ஆதிக்கமும், ஆணவக் கொலைக ளும் முற்போக்குப் பாரம்பரியத்திற்கு சவாலாக உள்ளன. ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கும் வறுமை, இளைஞர்களிடையே அதிகரிக்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிலவுகின்றன. இவற்றின் மீது நாம் தலையீடு செலுத்த வேண்டிய அவசியத்தை மாநாடு விவாதித்தது.
பாசிசத் தன்மையும், சுரண்டலும்
மறுபக்கம், நாடு முழுவதும் பெருமுதலாளித்துவ - நிலவுடைமைச் சுரண்டல் மிகக் கடுமையாக அதி கரித்துக்கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாசிசத்தன்மை கொண்ட விஷக் கருத்துக்கள் சமூ கத்தில் பரப்பப்படுகின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தனது தொடக்க உரையில், அதிகரித்துவரும் ஆபத்தை சுட்டிக்காட்டினார், “பாஜக ஆட்சி, கடந்த நான்காண்டு காலத்தில், பாசிச இந்துத்துவா ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்சின் சீர்குலைவு தத்து வார்த்த நிலையுடன் கூடிய நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட முறையில் வெறித்தனமாகச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை யை பயன்படுத்தி நமது பொருளாதாரத்தைக் கொள் ளையடிப்பது, பொதுத்துறையை தனியார்மயப் படுத்துவது, மிக மோசமான கூட்டுக் களவாணி முத லாளித்துவத்தை வளர்ப்பது, நாட்டைக் கொள்ளைய டித்து கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாதக் கூட்டை வளர்ப்பது ஆகியவற்றுடன் மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசை ஒழிக்கும் நோக்கத்தில் அடிப்படை யான ஜனநாயக, குடிமை உரிமைகளைப் பறிக்கும் எதேச்சதிகார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படு கின்றன” என்றார்.
பாஜகவை ஓரங்கட்டுவோம்!
மேற்சொன்னச் சூழலை துல்லியமாக எதிர்கொள்வ தற்கு இடதுசாரி சக்திகள் வலுப்பட வேண்டும். தமிழ் நாட்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலமாக கட்டமைப்பது அவசியம். தமிழ்நாட்டில், இடதுஜனநாயக அணியை உரு வாக்குவது நமது உடனடிக் கடமையாகும். இதற்காக நாம் இடதுஜனநாயகத் திட்டத்தினை ஏற்கனவே உரு வாக்கியுள்ளோம். அதன் அடிப்படையில், உள்ளூர் அளவில் செயல்பட்டு, மக்கள் இயக்கங்களைக் கட்ட மைக்க வேண்டும். இடதுஜனநாயக அணி என்பது தேர்தல் கால அணிச் சேர்க்கை அல்ல என்பதை அறிவோம். இடதுஜனநாயக அணியை உருவாக்க சமூகத்தில் தொடர்ச்சியான அரசியல், தத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், போராட்ட இயக்கங்களை கட்டமைக்கவும் வேண்டும். இவ்வா றான தொடர்ச்சியான செயல்திட்டம் மட்டுமே சமூகத் தில் இருந்து பாஜக/ஆர்.எஸ்.எஸ் சக்திகளின் சீர்குலை வுத் திட்டத்தை ஓரங்கட்ட உதவிடும்.
பாஜக/ஆர்.எஸ்.எஸ் சக்திகளை ஓரங்கட்டுவதும் தனிமைப்படுத்துவதும் முக்கியம். அத்துடன் நாம் அவர்களை தேர்தல் களத்திலும் வீழ்த்திட வேண்டும். 2024 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளை எப்படியா வது வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற கோவில்களின் நிர்வாகங்களை தனது கையில் கொண்டு வந்து மதவெறி மயமாக்குவது உள்ளிட்ட சூழ்ச்சிகளை அரங்கேற்ற பாஜக முயற்சி மேற் கொண்டுள்ளது.
நாம் அதனை அனுமதிக்க முடியாது. ஆர்எஸ்எஸ்- பாஜக எந்தெந்த தளத்தில் எல்லாம் ஊடு ருவ முயற்சிக்கிறதோ அங்கெல்லாம் அதனை நேரடி யாக எதிர்த்து போராட வேண்டியுள்ளது. அந்த அடிப்ப டையில் கோவில் நிர்வாகங்களில் நமது ஆதரவாளர் கள், நண்பர்களின் பங்கேற்புடன், மதவெறியர்களின் முயற்சிகளை தடுப்பது உள்பட மக்களிடையே இயல்பாக நிலவும் நல்லிணக்கத்தை காக்கவும், மாநில உரிமைக ளைப் பாதுகாப்பதற்குமான செயல்திட்டத்தை இணைந்து முன்னெடுப்பதன் வழியாக பரந்துபட்ட ஒற்றுமையை கட்டமைக்க வேண்டும். பண்பாட்டுத் துறையில் மதவெறியர் களின் ஊடுருவலை தடுக்கும் விதமாக மக்களிடையே மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாக கருத்த ரங்குகள் நடத்துவது, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பாட்டை வலியுறுத்துவது உட்பட, ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு எதிராக களப் போராட்டங் களை கட்டமைப்பது எனவும் மாநாடு தீர்மானித்துள் ளது. இந்தப் போராட்டங்களில் தமிழகத்தில் ஆளும் திமுகவும், ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறித் திட்டங்க ளை உறுதியாக எதிர்க்கிற முறையில், அவர்களையும் ஒருங்கிணைத்து, வலுவான இயக்கங்களாக கட்ட மைப்பது என்றும் தீர்மானித்துள்ளோம். மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நல்ல திட்டங்களை அமலாக்கியுள்ளது. அதே வேளை கடுமையான நிதி நெருக்கடியும் உள்ளது. சுமை களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஒன்றிய அரசு, தமிழக முதலமைச்சர் பலமுறை வலி யுறுத்தி கேட்ட பிறகும் கொடுக்க வேண்டிய நிதியை தராமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு வரவேண்டி யுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி குரல் எழுப்பும்.
வலுவான மார்க்சிஸ்ட் கட்சி
அதே சமயத்தில், இத்தகைய நிதிச்சுமையை கார ணம் காட்டி மக்கள் மீது சுமைகளை ஏற்றக்கூடாது என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும். மாநில பிரச்சனைகளில் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி யாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்படும். மக்கள் நலனே முதன்மையானது என்ற அடிப்படையில் தமிழக அரசை வலியுறுத்தும் அதே வேளையில், மக்கள் மீது நெருக்கடியை திணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால் அதற்கு எதிராக கட்சி போராட்டக் களமும் காணும். அரசுகள், மக்கள் மீது சுமைகளை ஏற்றுவ தற்கு காரணமான - நவீன தாராளமயக் கொள்கை களின் தாக்குதலை உறுதியுடன் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தனது தொடர் போராட்ட இயக்கத்தை வலுப்படுத்தும்.
மேலும், இந்திய முதலாளித்துவ - நிலபிரபுத்துவ அமைப்பு முறையில், தொழிலாளர்கள் - விவசாயிகள் ஆகிய வர்க்கங்களின் பொருளாதார விடுதலைக்கான போராட்டங்களோடு, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்க ளையும் இணைத்து, இரண்டு போராட்டங்களையும் கூர் மைப்படுத்துவோம் என்றும் மாநாடு முடிவு செய்தது. இத்தகைய இலக்குகளை நிறைவேற்ற தமிழகத்தில் வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கிட மாநாடு உறுதியேற்றுள்ளது. மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், “வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமைப்பதுடன், மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளை ஒன்றிணைத்திடும் கடமையை புதிய மாநிலக் குழு நிறைவேற்றிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
60 தீர்மானங்கள்
‘‘ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதுடன், வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்’’ என்ற தீர்மானத்தில் தொடங்கி மொத்தம் 60 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சிறு, குறுந் தொழில்களை பாதுகாக்க வேண்டும், தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி வேலையின்மையை எதிர்கொள்ள வேண்டும், சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை ஏற்படுத்தப்பட வேண்டும், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் இந்த தீர்மானங்களில் இடம்பெற்றுள்ளன.
பல ஆண்டு காலமாக கோயில்கள் மற்றும் மடங்க ளுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்துவரும் மக்க ளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டும்; சாத்தியமில்லாத சூழலில், உரிய மாற்று இடத்தை வழங்கிட வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி எதிர்வரும் மே.6 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத் தப்படும் என்ற அறிவிப்பு மாநாட்டின் முத்தாய்ப்பாக அமைந்தது. மாநாடு முடிந்த 2 நாட்களிலேயே எரி பொருள் விலையை தொடர்ந்து உயர்த்திடும் பாஜக அரசின் போக்கினை கண்டித்து 500க்கும் அதிகமான இடங்களில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்படும் மக்களின் முன்னணி போர்ப்படையாக நமது அணிகள் தொடர்ந்து இயங்குகிறார்கள்.
23 ஆவது அகில இந்திய மாநாடு
அடுத்து, கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இன்று (ஏப்ரல் 6) துவங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அரசியல் நகல் தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து பங்கேற்பதற்கான 50 பிரதிநிதிகளை மாநில மாநாட்டில் தேர்வு செய்தோம். மேலும் 2 பார்வையாளர்களையும் முடிவு செய்தோம். இந்த மாநாட்டையொட்டி, கண்ணூரில் நடக்கவுள்ள ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ கருத்த ரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் அவர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். நவீன இந்தியாவைப் பாதுகாத்திடும் போராட்டத்தை உறுதியோடும், வர்க்கக் கண்ணோட்டத்துடனும் முன்னெ டுக்கிறோம். அகில இந்திய மாநாடு கொடுக்கவுள்ள வெளிச்சத்தில், நமது போராட்டம் தமிழகத்தில் மேலும் வீரியமடையும்.