articles

img

‘கைப்புள்ள’ மன்னனும் ‘நானும் ரவுடி’ மந்திரியும் - நாடக ஆக்கம் : பா. ஹேமாவதி, சிபிஐ(எம்) கொளத்தூர் பகுதிச் செயலாளர்

நாட்ட பத்தி நடப்ப பத்தி சொல்லப் போறோம் நாங்க...
இது யார பத்தி... எவர பத்தி தெரிஞ்சிக் கோங்க நீங்க...
மதத்துக்குள்ள ஊடுருவி மக்களைப் பிரிக்கும் கும்பல்
இப்ப ஆட்சியில இருந்துகிட்டு அழிக்கப் பாக்குது நாட்ட
டன்டனக்கா.... டன்டனக்கா... டன்டனக்கா டன்...
டன்டனக்கா.... டன்டனக்கா... டன்டனக்கா டன்...

காட்சி-1 (தர்பார் கூட்டத்திற்கு கொன்னான் மன்னா வருகை தரும் காட்சி)

துதி பாடல்...
    பொய் பொய்யாய் புளுகி 
    ஆட்சியைப் புடிச்சவனே போற்றி
    கள்ளப் பணத்தைப் பிடிப்பதாக சொல்லி 
    பண புழக்கத்தைத் கெடுத்தவனே போற்றி
    மக்களின் பிஎஸ்என்எல் சொத்தை வாரிக் கொடுத்து 
    உம்பானி ஜியோவை வளர்த்தவனே போற்றி
    பிச்சைக்காரனிடம் ஜிஎஸ்டி பிச்சை எடுத்து 
    உதானிக்கு வாரிக்கொடுப்பவனே போற்றி 
    சின்னத் தொழில்களை எல்லாம் அழித்து
    பெரும் பணமுதலைகளை வளர்த்தவனே போற்றி...
    பெரும் பெரும் பொய்களை 
    விளம்பரம் செய்பவனே போற்றி…
    மதக் கலவரங்களை நடத்தி
    மக்களைக் கொல்பவனே போற்றி
    பிஎம் கேர்ஸ் என்ற பெயரில்
    கோடி கோடியாய் சுருட்டியவனே போற்றி...
    கொள்ளையடித்த முதலாளிகளை  
    வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தவனே போற்றி போற்றி...

கொன்னான் மன்னா வருகிறார் … மந்திரிகள் எழுந்து நிற்கும்போது...

    STOP.... STOP... என்று சொல்லி மன்னன் ஓடி வந்து மந்திரிகளை தள்ளி தூரமாக நிற்குமாறு விரட்டுகிறார்.  தன்னை மட்டும் கேமிரா நன்றாக காட்டும் என்பதை உறுதி செய்துகொண்டு .,,,, ACTION…. Start Camera…. என்கிறார். போஸ் கொடுத்துக்கொண்டே மெதுவாக தர்பாரில் நடைபோட்டு சிம்மாசனத்தில் அமர்கிறார்… கையில் செங்கோல் வைத்துள்ளார்
மன்னர் : உலகமே ஒரே குடும்பம். அதற்கு நானே           தலைவன்.
          எங்கே அமைச்சர் ?
அமைச்சர்: வந்தேன் ராஜா, 
மன்னர்: நாளை முதல் பிரியாணிக்குத் தடை 
தயிர் சாதம் தான் தேசிய உணவு 
அமைச்சர்:  சரிதான் மன்னா
மன்னர் : ராமன் மட்டும்தான் ஒரே கடவுள்  
மத்த கடவுளுங்க மேலே புல்டோசர் ஏத்தனும்
அமைச்சர் : சரிதான் மன்னா 
மன்னர் :  பாரதம்னு சொன்னா பரவசம் ஆகுது,
இந்தியான்னு சொன்னா  பயமா இருக்குய்யா
    எம்பி சீட்டை ஏலத்துல விட்டா 500 சீட்டையும், இரண்டு மடங்கு எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து அல்லாத்தையும் அலாக்கா எடுத்துடலாம்,   
    எதிர்க்கட்சில யாரும் ஜெயித்தாலும் விலைக்கு வாங்க ஏற்பாடு பண்ணியாச்சா?  400 வந்துருமா?  
அமைச்சர் :  
    மயிலுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தவர் நீங்கள், முதலைக்கு அழுவதைக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள். 
    நரிக்கு தந்திரம்  சொல்லித் தந்தவர்.
    புலிக்கு கடிக்கக் கத்துக் கொடுத்தவர் நீங்கள் 
    பொங்கல், புளியோதரையோடு 
    குடியுரிமையையும் கோயில் பிரசாதம் ஆக்கியவர் நீங்கள் 
     பாடம் எடுக்க ஆசிரியர்களே இல்லாமல், 
    கூடப் படிக்க ஒருத்தனும் இல்லாமல் 
    கல்லூரி படித்து முடித்த சாதனையாளர் நீங்கள், பிஜேபிக்கு ஓட்டுப் போடாதவன் குடிமகனாகவே இருக்க வேண்டாம் என்று குடியுரிமை சட்டம் கொண்டுவந்தவர் நீங்கள்…
    இயற்கையில் அழகராய் இருந்தும் எக்ஸ்ட்ரா 
    அழகு ஏத்திக்கொண்டவர் நீங்கள் 
    அப்படி இருந்தும் சோகமா மன்னா? 
மன்னர் :     இந்த தேர்தல்னு ஒன்று ஏன் வருது? 
        கண்டவன பார்த்து கும்பிடவேண்டியிருக்கே.
அமைச்சர்: ஜட்ஜ் எல்லாரையும் கரெக்ட்             பண்ணியாச்சு மன்னா, நமக்கென்ன          கவலை?.
மன்னர்: மக்கள நேரில் பார்க்க வேண்டுமே…         அவர்கள் கேள்வி மேல் கேள்வி             கேட்பாங்களே...
அமைச்சர்: தேர்தலே இல்லாமல் ஒழிக்கனும்             மன்னா,
        உதானி, உம்பானி, முதலாளிங்கட்ட 
    ஐடியா கேளுங்க.
மன்னர்: தேனும் பாலும் ஓடுதுன்னு ஜால்ரா மீடியாவை எல்லாம் நல்லா சத்தமாக கத்தச் சொல்லுங்கப்பா.  
தர்பாரில் ராஜா மற்றும் அமைச்சர்... மீடியாக்களை அழைத்து கவனித்து அனுப்புவது. Fund கொடுங்க... உங்க Image வேற Level ஆகும் என்று சொன்னபடி ஜால்ரா மீடியா கை குலுக்குதல்...
    வாயாலே வடை சுடுவார் நன்னா வாயாலே வடை சுடுவார்...
    பாரத் மாதாகி ஜே...
 

காட்சி 2 ஜால்ரா மீடியா: அறிமுக பாடல்'

நாங்கதான் நடுநிலை நாளிதழுங்க
மக்களை தேடி வந்தோமுங்க
உள்ளதை உள்ளபடி சொல்லுவோமுங்க
நாட்டில் நடக்கும்
நடப்பையெல்லாம்
தலைப்பு செய்தியாக்கி
நிமிடத்திற்கு நிமிடம் சொல்வோமுங்க…
உண்மை கதை சொல்வேங்க
மீடியாகாரன் வந்தோங்கே….
நிறுத்து நிறுத்து… கதை என்றால்க
தைவிடுறதுதானே… அப்புறம் என்ன உண்மை கதை….
உண்மை சம்பவம்தானே…
மீடியா: அது….   வந்து…. 
(பின்னாடி  இருந்து இரண்டுபேர் அவர் 
வாயை பொத்திச் செல்கிறார்கள்.)
மீடியா: மகா ஜனங்களே, உங்களுக்கு எங்க நமஸ்காரம். ஐந்து வருஷத்துக்கு ஒரு தபா நம்ம ஊருக்கு யாரு ராஜா வாகிறதுன்னு போட்டி நடக்குறது. உங்களுக்கு தெரிஞ்சது தான். இருந்தாலும் முறைப்படி சொல்ல வேண்டியது என் பொறுப்பு.
    ராஜாவா இருக்கும்போது செய்த சாதனையச் சொல்லி போட்டி போட வராங்க… இதோ கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட ராஜா அவருடைய சாதனையச் சொல்ல வராரு பாருங்க…
    பொதுத்துறையை வித்துபுட்டு
    ஏப்பம் விட்டவன் நான்
    என்ன போல
    ராசா இங்கு யாரடா?
    எனக்கு
    கூஜாங்க இங்கு
    நிறைய பேருடா
    பணமதிப்பு செல்லா நோட்டு
    என்று சொல்லி மக்களை
    நடுத்தெருவில் கொன்னவன்
    நானடா….
    என்னை போல
    ராசா இங்கு யாரடா
    எனக்கு
    கூஜாங்க இங்கு
    நிறைய பேருடா
    இந்த நாட்டை ஆள
    எனக்கு மக்கள் வேண்டாம் டா
    எனக்கு CBI, ED, IT, MEDIA கூட்டணி போதும்டா
நான்தான் மீண்டும் ராஜாவாக போறேன்டா…
வணக்கம்… திருக்குறள் வரிகள்… 
நாடுகள எல்லாம் சுத்திட்டேன் 
உங்களுக்கு நல்ல ஆட்சியை தந்துகிட்டு இருக்கேன்.
(கூட்டத்தில் இருந்து ஒருவர்)  
    நாடாளுமன்றத்திற்கு போகாமலே, பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே நடத்துறது ஒரு ஆட்சியா…? 
நபர் 1: கள்ளப்  பணத்தை மீட்டு எல்லாருடைய வங்கிக் கணக்கிலயும் 15 லட்சம் ரூபாய் போடுறேன்னு சொன்னிங்க.. அத நம்பி அண்ணாச்சி கூட, கடன் வாங்கினதைத் திருப்பிக் கொடுத்துட்டு சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சாரு.
    அந்த அம்மா கூட, அடகு வைச்ச நகையை மூட்டுக்கலாம். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்பட்டாங்க. அவரு, சின்னதா அழகா ஒரு வீடு கட்டிக்கலானு நினைச்சாரு. இவரு, ரொம்ப நாளா தள்ளிப்போய்கிட்டே இருக்கிற ஹார்ட் ஆபரேசனைச் செஞ்சிடலாம்னு கணக்குப் போட்டாரு.
    ஆனா, கறுப்புப் பணமும் வரல, அதெல்லாம் ஈஸியில்லைன்னு இப்ப சொல்றீங்க! சும்மா சொன்னோம்னு  வேற சொல்றீங்க…
 (கூட்டத்தில் இருந்து மற்றொருவர்:)  
    அட நீ வேற… அப்பாவ தீவிர சிகிச்சையில் ஆஸ்பத்திரியில சேத்தேன். அப்ப திடீரென்னு 500 ரூபாய் பணம் செல்லாதுன்னு அறிவிச்சாங்க. நான் அவசரத்துக்குன்னு வைத்திருந்த உழைத்து சம்பாதித்த பணமும் போச்சி. 
    அப்பாவும் செத்துட்டாரு.
நபர் 3: வருசத்துக்கு 2 லட்சம் பேருக்கு வேலை தரேன்னு சொன்னாங்க. ஆட்சிக்கு வந்ததும் வேலை தர்றதுலாம் எங்க வேல இல்லைனு திமிரா சொல்றாங்க,  ரோட்ல பக்கோடா போட்டு பிழைக்கலாமேனு சொல்றாங்க.  
    ஊரு விட்டு ஊரு வந்து வேலை செய்றவன் எப்படி வீட்டுக்குப்  போவாங்கிற அறிவு கூட இல்லாம கொரோனா காலத்துல ‘ ஊரடங்கு’  அறிவிச்சாங்க 
    நூறு மைல், ஆயிரம் மைல் நடந்தே பலர் செத்தாங்க. 
நபர் 4 
    இவங்க மரண வியாபாரிங்க அடுத்தவங்க சாவுலதான் புழைக்கிறாங்க
    “ஆண்டி இந்தியன் இல்ல,இல்ல ஆண்டி பாரதியன்,  இந்து விரோதி,தேசத் துரோகி”  ‘எங்கே என்ஐஏ, எங்கே என்ஐஏ”  என்று கத்தியபடி  மேடையில் இருந்து ராஜா ஆவேசமாய் கத்தி... மிரட்டுகிறார் அவர் அவர்களின்  பெயர்களைக் கேட்கிறார்கள்.
    அவர்களோ... “பலராமன்...  சீதாராமன்,  சேதுராமன், ஜெயராமன்” என்கின்றனர்.
மன்னர் :
    “இந்தப் பேரை எல்லாம் ஒத்துக்க மாட்டேன், அந்த ஸ்டான் சாமி பாதரோடு சேர்த்து இவங்களயும் அடைச்சு வைங்க, குடிக்க தண்ணி குடுக்காதீங்க”

காட்சி 3... ராஜாவும்... அமைச்சரும்...

மன்னர்: (அமைச்சரிடம்) இதுக்குதான்          சொன்னேன். போகமாட்டேன்னு அமைச்சர்: என்னாச்சி மன்னா... மன்னர்:   நொன்ன ஆச்சி... அமைச்சர்: நடந்ததை சொல் மன்னா... மன்னர்:   இதுவரை 56 இன்ச் என்று       சொன்னாங்க...     இப்ப..‌ Mr.29 பைசான்னு       சொல்லுறாங்க...     இப்படியே போன தமிழ்நாட்டில் எப்படி     தாமரை மலரும்... அமைச்சர்: அதற்கு என்னிடம் சிறந்த       ஆலோசனை இருக்கு     மீடியாக்களை அழைத்து தமிழகத்தில்     தாமரை மலர்ந்தே தீரும் என்று ஒரு     பொய் பிரச்சாரத்தை கிளப்பி விட       வேண்டியதுதான்...

டிவியில் பிரச்சாரம்... டிவி விளம்பரம் காட்சிப்படுத்துதல்...

    “ஏய்… ராஜூ கண்ணா… புதுசா பைக் வாங்கிட்டியா, நல்லா முன்னேறு
    பிரமாதமா முன்னேறு கண்ணா...
சித்தி: நா மட்டுமில்ல என்ன போல 
  25 கோடி பேரு வறுமையில் இருந்து           வெளிவந்துட்டாங்க...
நபர்: கேரண்டி தர, இன்னும் கொஞ்சம்          வருஷத்துல நம்ம நாட்டுல வறுமை என்பதே           இருக்காது...
சித்தப்பா: கேரண்டியா என்ன கேரண்டி...
சித்தப்பா: மோதி யோட கரண்டி
சித்தப்பா: அப்படியா இப்போ கேரண்டி                நிறைவேறுவதற்கும் கேரண்டி இருக்கு
           கஷ்ட காலம் போய்விடும் மோடியின்                  கேரண்டி ஓஹோஹோ
விளம்பரத்தை பார்த்த நபர்: 
    ஏண்டா … ஒரு பைக் வாங்குறதே
    முன்னேற்றமா டா… 
    நானும் 50 ஆயிரம் கொடுத்து         இன்சால்மன்டில் பைக் வாங்கினேன்.         அதற்கு பிறகு மாசத்துக்கு             5000த்துக்கு  பெட்ரோல் ஊத்தியே         வாங்குற சம்பளத்தில் பாதி போயிருச்சு. 
    DUE கட்ட முடியல, வண்டிய தூக்கிட்டு     போயிட்டானுங்க. என்று நண்பனிடம் புலம்புதல்...
 

காட்சி 4 வாக்கு கேட்டு வருகிறார் ராஜா ....

மன்னர்:     சாவுறவரைக்கும் நானே ராஜாவா 
        இருந்துர்றேன் எனக்கே ஓட்டு             போடுங்க
நபர் 1... 
    “ஏம்பா விலைவாசிய ஏத்தினே, 
    பெட்ரோல், டீசல் விலையை ஏத்தினே, 
    420 ரூபா சிலிண்டரை 1100 ரூபாவா ஏத்திட்டு 
    மகளிர் தினத்துக்காக 100 ரூபாய் குறைக்கிறேங்கிறேயே.” 
    ஏன் ஆம்பளங்க அடுப்பே பத்த வைக்கிறது இல்லயா? 
மன்னர்: உன் பெயர் என்னம்மா? 
ராமாயி...
மன்னர்: மன்கி பாத்னு ரேடியோல பேசுறவன்              வந்திருக்கேன் ஓட்டுப் போடுங்க 
நபர் 2: 
    ஏம்பா ராஜா, இன்னும் ஏன் ரேடியோல  “மங்கி பாத்” னு பேசினுகீறே…
    மெட்ராசு ரிச்சி ஸ்ட்ரீட்ல போய் “ரேடியா வேனும்னு கேட்டுப்பாருய்யா” 
    எந்த காலத்து ஆளு நீன்னு ஆச்சரியமா கேட்பாங்க… கொஞ்சம் வளருங்க பாஸ்
மன்னர்: உங்க பேர் என்னா?
வெங்கட்ராமன்
மன்னர்: “என்னோட ஆட்சியில் 25 கோடி ஏழைங்க பணக்காரங்க ஆகிட்டாங்கப்பா ” அதுக்காக ஓட்டுப் போடுங்க 
நபர் 3:
    அமெரிக்க அதிபர் டிரம்ப் தில்லிக்கு வந்தப்போ G20 மாநாடு நடந்தப்ப
    குடிசங்களை எல்லாம் ஸ்கீரின் போட்டு மறைச்சீங்களே அது மாதிரியாப்பா? 
மன்னர்: உங்க பேரு என்னா? 
நபர் 4:
முத்துராமன்பா 
மன்னர்:     ராமருக்கு  கோயில் கட்டுனேன்             அதற்காக ஓட்டு போடுங்க …
நபர் 5:
        ராமர் கோயில நீ பக்தியால கட்டல
        ஒட்டு வாங்குறதுக்காக கட்டிருக்க.
        ராமருக்கு ஓட்டு இருந்தா கூட 
        சத்தியமா உனக்குப் போட             மாட்டாரு…
        (ராஜா பதறிவிட்டார்)
மன்னர்:     ஏய் யாருடா நீ
நபர்  6:
செல்லாராமன்...
    ராமன், ராமன், ராமன் யாருடா நீங்க எல்லாம் என்று ராஜா கத்துகிறார். 
    எல்லா ராமன்களும் ஒன்று சேர்ந்து கடவுள் ராமர் கோபமாக தோன்றும் காட்சி…
ராமர்:  கடவுளை வைத்து அரசியல் செய்யும் கபட ராஜாவே 
    ராமர்களாக வந்து உன்னை கேள்விகளாய் கேட்டவன் நான்தான் ..
கம்ப ராமாயணத்தில் 
     “வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
    திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
    உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
    வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்” 
    என்று கம்பன் பாடினான்
    ராமரின் அயோத்தியில்  வறுமை என்பதே இல்லை என்பதால் கொடைக்கு அவசியமில்லை;     ஆனால் நீயோ…மதத்தின் பெயரால்  மக்களை பிளவுபடுத்துகிறாய்.      பொய் பொய்யாய்  பிரச்சாரம் செய்து மக்களை கலவரத்திற்கு தூண்டினாய்.     பேட்டி பத்தாவு… பேட்டி பச்சாவு நல திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக ஒதுக்கிய பணத்தை  வெறும் விளம்பரத்திற்கு மட்டுமே செலவு செய்துள்ளாய்….     காந்தியோட பஜனைய கேட்டு இருக்கியா? பிறர் சொத்தை திருடாதே என்றுதான் அவர் பாடுவார்…     பிறர் சொத்தை ஏமாற்றி பிழைக்கும் நீ அயோக்கியன்      என் பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கி இருக்க…     எனக்கே தெரியாம என்னையும் உன்னோட கூட்டாளியாக்கி நீ செய்த பாவத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நான் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மறைந்துவிடுகிறார்.

மக்கள்: போலிகளை வெளியேற்றும் நேரம் இது. 

 ஆமாம்…போலிகளை வெளியேற்றும் நேரம் இது மீடியா: அப்ப யாருக்குதான் உங்க ஓட்டு…     நாளை நமதே… 40தும் நமதே... மதவெறியை தூண்டாமல் மக்களை சமத்துவமாக பார்க்கும் ஆட்சிதான் எங்களுக்கு வேண்டும்.     கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி மக்களை கௌரவப்படுத்தும்  ஆட்சி…     அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்கு வயிறார சோறு போடும் ஆட்சி...      கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 வழங்கி பெண் கல்வியை முன்னேற்றும் ஆட்சி... பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து வசதி, தமிழ்ப் புதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1000, இப்படி மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் சொன்னதைச் செய்யும் நம் முதல்வருக்குதான் நம் ஒட்டு...      இந்தியா முழுவதும் பயணம் செய்தால்தான் தெரியும் தமிழகத்தின் அருமையும்  பெருமையும்… தமிழ்நாட்டை போல இந்தியா மாற வேண்டும் என்றால் நாம் இந்தியா கூட்டணிக்குதான் ஆதரவு தர வேண்டும். இந்தியா கூட்டணி மாற்றம் காணும் கூட்டணி மனித நலனில் அக்கறை கொண்ட நல்லோரின் பேரணி     அது இந்தியா கூட்டணி மனித நலனில் அக்கறை கொண்ட     நல்லோரின் பேரணி திமுகவின் தலைமையிலான கூட்டணியின்…. ஆட்சி     இங்கே அமைத்திடவே     வேட்பாளர்……. தேர்ந்தெடுப்பீர்

    பகைவர் எவரும் இல்லை என்பதால் துணிவுக்கும் வேலையில்லை; 
    பொய்யுரை ஏதும் இல்லை என்பதால் உண்மைக்கும் பொருளில்லை; 
    மிக்க கேள்வியறிவு பொருந்தி இருப்பதால் அறியாமை என்பதும் இல்லை. 
என்று எனது நாட்டைப் பற்றி பாடினான் கம்பன்
    நீ குடிசையை ஸ்கீரின் போட்டு மறச்சிட்டு வறுமையை ஒழிச்சிட்டேன்னு  பொய் சொல்லி திரியுற…
     எம்மதமும் சம்மதம் என்று சொல்லுறவன் நான்