-இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், காங்கிரஸ்
மாநில உரிமைகளுக்கான போராட்டக்களத்தை உருவாக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அன்று முதல் இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்று “இந்தியா” கூட்டணி உருவாகியுள்ளது. அன்றைக்குச் சுர்ஜித் செய்த பணியை இன்று சீத்தாராம்யெச்சூரி செய்துவருகிறார். மிருகங்களைப் போல் பெண்கள் நடத்தப்பட வேண்டுமென்பது தான் ஆர்எஸ்எஸ் நோக்கம். அவர்களது நோக்கத்தைப் பாஜக மணிப்பூரில் நிறைவேற்றியுள்ளது. மணிப்பூர் சம்பவம் கண்ணீரை வரவழைக்கிறது. கண்ணீரைப் பற்றி ஆர்எஸ்எஸ் கவலைப்படாது. அவர்களுக்கு அவர்களது நோக்கம் நிறைவேறவேண்டும். அவ்வளவு தான். உழைப்பாளி மக்களின் நிலங்களைப் பறித்து அதானியிடம் ஒப்படைத்தவர் மோடி. தமிழகத்தின் வரி வருவாயில் பெரும்பகுதியை ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு பறித்துக் கொண்டுள்ளது.
- பேரா.காதர்மொய்தீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
பல இனங்கள், பல மொழிகள் கொண்ட நாட்டை இந்து நாடாக மாற்றி மக்கள் ஒற்றுமையை மதச்சார்பின்மையைச் சிதைக்கப் பாஜக முயற்சிக்கிறது. மாநிலங்களே இருக்கக்கூடாது என்பது தான் பாஜகவின் கொள்கை. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் பேரூராட்சிகளாக, நகராட்சிகளாக மாற்றி அதிகாரத்தைப் பறிக்க நினைக்கின்றனர். 2024-நாடாளுமன்றத்தேர்தலில் இந்தியா அணி வெற்றி மாலை சூடும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் சீத்தாராம் யெச்சூரி.
- அப்துல் சமது, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
மணிப்பூர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் பணிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில உரிமைகள் குறித்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைத் திமுக ஆதரிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக என்ற பீடையைத் தோற்கடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்.
-நடராஜன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி துணைத்தலைவர்
மாநில அரசுகள் இழந்த உரிமைகளை, இழந்து வரும் உரிமைகளைத் தக்க வைக்கச் சரியான தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆணவம், அதிகார எண்ணம் கொண்ட சுயநலவாதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம். நாம் தொடங்கியுள்ளது இரண்டாம் சுதந்திரப் போர். இந்தப் போரில் “இந்தியா” வெல்லும்.
- பி.வி.கதிரவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர்
சரியான நேரத்தில் மாநாடு நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டுகிறேன். ஜனநாயகத்தை அழிக்கும் சர்வாதிகார பாஜகவை வீழ்த்துவோம். தமிழக ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை. வரும் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படவில்லையெனில் நாடு சர்வாதிகார நாடாக மாறும்.