articles

img

பொது சுகாதாரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அரசுகள் -

கொல்கத்தா மாநகரில் மிகச்சிறந்த மருத்துவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் பவுத் ஹலிம், ‘கொல்கத்தா மக்களின் மருத்துவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மக்கள் நிவாரணக் குழுவின் செயலாளராகவும் உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவான இவர், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் முற்போக்கு இயக்கத்தில் பணியாற்றி ஆழமான புரிதலைக் கொண்டவர். இவர், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவரும், நாட்டின் அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் தூண் எனப் போற்றப்பட்டவருமான ஹசீம் அப்துல் ஹலிம் அவர்களின் மகனாவார்.

நாட்டில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் நிலை, அதில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் பவுத் ஹலிம், நியூஸ் கிளிக் இணையதள செய்திப் பிரிவுக்கு அளித்த நேர்காணல்:

    கேள்வி: மேற்குவங்கத்தில் நீண்டகாலமாக இயங்கி வரும் மக்கள் நிவாரணக் குழு பற்றி... 

பதில்: 1930-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் வங்கத்தை  நாசப்படுத்தத் துவங்கிய சமயத்தில், மக்கள் நிவாரணக் குழு தன் பயணத்தை தொடங்கியது. தற்போது இந்த அமைப்பு 80 வருடங்களை கடந்து விட்டது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாத அன்றைய, ஆங்கிலேய அரசாங்கம், சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடித்தது. இந்தநிலையில், 1943 ஆம் ஆண்டு மக்கள் நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. 

    டயாலிசிஸ் செய்வதற்கு தனியார் மருத்துவ மனைகளில் ரூ.2500 முதல் 3 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய இச்சூழலில், மக்கள் நிவாரணக் குழு வெறும் 50 ரூபாய்க்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?

சுகாதார உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில், இன்னும் இது அடிப்படை உரிமையாக்கப்படவில்லை என்பது வேதனையானது. வாழ்வதற்கான உரிமையும், சுகாதார உரிமையும் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது. இதன்படிதான், கொல்கத்தா சுவஸ்த்யா சங்கல்ப் அமைப்பு, கடந்த 2008 ஆம் ஆண்டு  முதல் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ரூ.50 கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறது. தினமும் 35 முதல் 50 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. மூன்று கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள்  செயல்படுகிறோம். சிகிச்சையின் போது நோயாளிக்கு  இரண்டு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும். எங்களி டம் மின்தூக்கி, வரவேற்பாளர் போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பொருள் விநியோகஸ்தர்கள் எங்கள்  அமைப்பில் ஓர் அங்கமாக உள்ளனர். அவர்கள் குறைந்த விலைக்கு எங்களுக்கு பொருட்களை வழங்கு கின்றனர். கொல்கத்தாவில் இச்சேவை தொடர்வதற்கு நன்கொடையாளர்களும் பங்களிக்கின்றனர். தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் உதவுகின்றனர்.

    இதற்காக மக்கள் நிவாரணக் குழு என்னென்ன வசதிகளை செய்துள்ளது?

சிலர் வெளியிலிருந்து எங்களுக்காக அர்ப்பணிப்பு டன் பணியாற்றுகின்றனர். அதன் மூலம், நோயாளி களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெறுகிறோம். நோயாளிக்கு, மூன்று நாட்களுக்கு தேவையான மருந்துகளை நாங்கள் பத்து ரூபாய்க்கு வழங்குகிறோம். சில நோயாளி களுக்கு அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள மிகக் குறைந்த செலவில் ஏற்பாடு செய்கிறோம். இக்குழுவுடன் ‘கிம்பர் நர்சிங் ஹோம்’ இணைந்துள் ளது. அங்கு படுக்கை வசதிகள் இருப்பதால், ரூ.50 கட்டணத்தில் குடல்இறக்க (Hernia) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முதியோர் இல்ல மும் இக்குழுவுடன் இணைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய  மருத்துவ மையங்களை நாங்கள் கொண்டிருக் கிறோம்.

    மருத்துவத் துறையில் தனியாரின் செயல்பாடு களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? மருத்துவ சேவை தனியார்மயமாவதை ஏன் எதிர்க்க வேண்டும்?

மருத்துவ சேவை சந்தை வியாபாரமாகி விட்டால், அதன் அம்சங்கள் மற்ற வியாபாரங்களிலிருந்து மாறுபட்டுவிடும் என 1959 ஆம் ஆண்டு கென்னத் ஜெ  ஆரோ, தான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக் கிறார். உதாரணமாக, ஒருவர் வாழைப்பழங்கள் வாங்க சந்தைக்குச் செல்கிறார் என்றால், வியாபாரி அவருக்கு கொய்யாப்பழத்தை கொடுத்து அனுப்ப முடியாது. ஆனால், மருத்துவ சேவை சந்தை வியாபார மாகிவிட்டால், எதை, எவ்வளவு விலை கொடுத்து வாங்கப் போகிறோம் என நுகர்வோருக்கு தெரி யாது. இதில் அனைத்து முடிவுகளையும் வியாபாரியே  தீர்மானிப்பார். நுகர்வோரைப் பொறுத்து வியாபாரியே முடிவுகளை எடுக்கிறார். இந்தியாவில் உள்ள மருத்துவ நுகர்வோர்கள் உதவியற்ற நிலையில்  இருக்கின்றனர். எனவே வியாபாரிகளால் இதில் அதி களவு லாபம் பார்க்க முடியாது. இதை விரிவான கோட்பாடாக  எழுதியமைக்காக கென்னத் ஜெ ஆரோ  1973 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது மட்டு மின்றி, உலகின் முதல் சுகாதார பொருளாதார நிபுணர் எனவும் போற்றப்பட்டார்.  1960 மற்றும் 70-களில் இக்கோட்பாடு மிகவும் பிரபலமடைந்த நிலையில், பெரும்பாலான வளரும் நாடுகள் மருத்துவத் துறையை அரசுத் துறையாக மாற்றின. ஆனால், சில வளரும் நாடுகள் மருத்து வத் துறையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டன. கலப்புப் பொருளாதார கொள்கை யைக் கொண்டிருக்கிற இந்தியா, தற்போது கட்டுப்பாடற்ற தனியார்மயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் சுகாதாரத் துறையின் மீதான தங்கள் கட்டுப் பாட்டைத் தக்க வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சின்னம்மையை ஒழிப்பதற்காக அரசு தலைமை யிலான மருத்துவத்துறை நடத்திய பிரச்சாரங்கள் மிகப்பெரும் அளவில் வெற்றியடைந்தன. இதன் மூலம் அரசாங்கத்தின் ஆற்றல் வெளிப்பட்டது. 1960-களில் ‘பிக்ஸ் விரிகுடா நெருக்கடியின்’ போது முதலாளித்துவ நாடுகளும் சோசலிச நாடு களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல்  உருவானது. ஒருபுறம், அமெரிக்க முதலாளித்துவ அரசு, “மனித குலத்தின் அனைத்து பிரச்சனை களுக்கும் சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் தீர்வுகாண முடியும்” என கூறிக் கொண்டிருந்தது. மறுபுறம், “வளர்ச்சியைத் தடுப்பதற்கு சந்தையே முக்கிய காரணம்” என சோவியத் அரசு உறுதியாக கூறியது. ‘பிக்ஸ் விரிகுடா’ தாக்குதல் (Bay of Pigs crisis) என்பது 1961 ஆம் ஆண்டு, கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவின் அரசைக் கவிழ்ப்பதற்காக, அமெரிக்காவினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் தென்மேற்கு கியூபா வின் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கியதால், இது “பிக்ஸ் விரிகுடா நெருக்கடி” என அழைக்கப்படுகிறது. 

1960-களில் சின்னம்மையை ஒழிப்பதற்காக தடுப்பூசி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது,  இந்த தடுப்பூசியை சந்தை மூலம் செயல்படுத்த லாமா (வாங்கும் திறன் உள்ளவர்கள் தடுப்பூசியை பெறலாம் என்பது பொருள்) அல்லது உலகளாவிய மக்கள் சுகாதாரக் கட்டமைப்புகள் மூலம் இலவச மாக செயல்படுத்தலாமா? என கேள்வி எழுந்தது. இக்கேள்விக்கான பதில் பொது சுகாதாரத்திற்கு ஆதரவாக அமைந்தது. வலுவான பொது சுகாதாரம் மற்றும் அரசு வழங்கிய உள்கட்டமைப்புகளின் காரணமாக, 1970-களில் சின்னம்மை வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டது. 1978-ல் கஜகஸ்தானின் அல்மா-அட்டா நகரில்  நடைபெற்ற மாநாட்டில், 2000 ஆம் ஆண்டிற்குள் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற நிலையை அடைய வேண்டுமென உலகின் அனைத்து சுகாதார உணர்வுமிக்க நாடுகளும் கூட்டாக தீர்மானித்தன. 148 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த இலக்கை அடைய ஒப்புக் கொண்டனர். ஆனால், 1990-களுக்குப் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் நவதாராளவாத கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால், பொது சுகாதாரம் பலவீனப்படுத்தப்பட்டது.

(அல்மா அட்டா (Alma-Ata) பிரகடனம் என்பது ஆரம்ப சுகாதார கவனிப்பு அல்லது முதல்நிலை சுகாதார கவனிப்பை மேம்படுத்துவதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்துலகப் பிரகடனம் ஆகும். 1978 ஆம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மா அட்டா நகரில் நடந்த மாநாட்டில் இப்பிரகட னம் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.) பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்றவை, சுகாதாரத் துறைக்கு நிதியுதவி வழங்குகிறோம் என்ற பெயரில், ‘சேவைக்கு பணம் செலுத்தவும்’ (Pay at the point of service) என்ற திட்டத்தை தொடங்கின. மேலும் நிதி மறுசீரமைப்பு என்ற பெயரில், கடன்களை வழங்கி, அரசுகளின் கைகளை கட்டிப்போட்டன. இதன் விளைவாக, 2000 ஆம் ஆண்டிற்குள் ‘அனை வருக்கும் ஆரோக்கியம்’ திட்டம் இலக்கை எட்ட முடியவில்லை. மேலும், ஆரோக்கியத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னர் ‘மில்லேனியம் வளர்ச்சி குறிக்கோள்கள்’ என புதிதாக உருவாக்கப்பட்டு, அதுவும் தோல்வி யடைந்தது. பின்னர், 2014 ஆம் ஆண்டு ‘அனை வருக்கும் ஆரோக்கியம்’ என்பது ‘அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம்’ என மாறிவிட்டது. இது, மருத்துவ சேவைகளை உணர மட்டுமே முடியும்  என்பதற்கு இட்டுச் சென்றது.

    அரசு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

2000 ஆம் ஆண்டிற்கு பிறகு பல்வேறு துறைகள் மிகப்பெரும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகள். சமீப காலங்களாக, சர்வ தேச நிதி முதலாளிகள் இந்த இரண்டு துறை களில்தான் அதிகளவு முதலீடு செய்யத் துவங்கி யுள்ளனர். இதன் விளைவாக கடந்த 2013-2014 ஆம் ஆண்டு களில், பொருளாதார வசதி இல்லாத மக்களுக்கு தனி யார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மறுக்கப்பட்டதை காண முடிந்தது. தற்போது, காப்பீட்டுத் திட்டங்களில், அரசு மூலம் நோயாளி களுக்கு பணம் செலுத்தப்படுகிறது; நோயாளி களிடமிருந்து அப்பணம் தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்கிற நிலைமைதான் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ‘சுவஸ்த்யா சதி’ திட்டமும் இதன் ஒரு பகுதிதான். இதன்மூலம், பொது சுகாதார  உள்கட்டமைப்பு மேலும் பலவீனமாகிறது. தற்போது, அரசுத் துறையில் தடுப்பு மருந்துகளுக்கு முன்னு ரிமை அளிப்பது குறைந்துள்ளது. வரி செலுத்து வோரின் பணம் தனியாரை நோக்கிக் செல்கிறது. முக்கியமாக, இதனால் அரசு செலவினங்கள் அனைத்தும், தனியார் மருத்துவமனைகளின் செலவுக்கும், அவர்களின் லாபத்திற்கும் சென்று கொண்டிருக்கிறது. தேசிய குடும்ப நல ஆய்வின்படி, 13 முதல் 15 சதவீத தாய்மார்கள் மட்டுமே சிசேரியன் (அறுவை  சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு) செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போது மேற்கு வங்கத்தில் 83 சதவீதம் பேருக்கு சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது. ஏனென்றால், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் சிகிச்சைக்கான கட்டணம் மிக அதிகம். இங்கு, ஒரு தாயின் ஆரோக்கியம் மிகக் குறைவாக மதிப்பிடப்படுகிறது.

- சந்திப்பு: சந்தீப் சக்கரவர்த்தி
தமிழில்: ஆர்.நித்யா