விவசாயிகளின் செலவுகள் இரட்டிப்பாகியுள்ளன. விவசாயிகளின் கடன்கள் இரட்டிப்பாகி உள்ளன. விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பாகி உள்ளது. விவசாயிகளின் நில வெளியேற்றம் இரட்டிப்பாகி உள்ளது. விவசாயக் குடும்பங்களின் அழுகுரல் இரட்டிப்பாகியுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்து வேன், டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி மொத்தச் செலவோடு 50 சதவீதம் கூடு தலாக குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வேன், விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்க பயிர் காப்பீடு திட்டம் மூலம் பாதுகாப்பேன், விவசாயிகளை பாது காத்திட கிசான் நிதி ஆறாயிரம் ஆண்டுக்கு சிறு-குறு விவசாயிகள் அனைவருக்கும் வழங்குவேன், உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஒரே பெயரில் உரம் விற்பனை செய்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் 75ஆவது சுதந்திர தினத் திற்குள் அதாவது 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிக ளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதியளித்தார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதே கேள்விக்கு பதிலளித்த விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அரசாங்கத் தின் முயற்சிகள் மிகவும் சாதகமான பலனைத் தந்துள்ளன” என்று தெரிவித்தார்.
வருமானம் குறைந்தது
ஆனால் விவசாயிகளின் வருமானத்தின் நிலை என்ன என்று 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 77ஆவது சுற்று நிலைமை மதிப்பீட்டு ஆய்வின் (எஸ்.ஏ.எஸ்) சமீ பத்திய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப் பட்டன. அதில் 2019ஆம் ஆண்டில் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.10218 மட்டுமே. 2012-13இல் ரூ.6426 ஆக இருந்தது. ஆனால் இந்த வருவாயில் பெரும் பங்கு ஊதியத்திலிருந்து வந்தது. திட்டம் அறிவிக்கப் பட்ட நேரத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட் டிப்பாக்குவதற்கான மையத்தின் அறிக்கையின்படி 2015-16 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு வரு மானம் ரூ.96,703 ஆக இருந்தது. இது அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இது மாதத்தி ற்கு ரூ.8059 ஆக உள்ளது. இது 2022 ஆம் ஆண்டிற் குள் பணவீக்கத்தை கணக்கில் கொண்டு உண்மை யான அடிப்படையில் மாதத்திற்கு ரூ.21,146 ஆக இரு மடங்காக உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கப் பட்டது.
ஜார்க்கண்டில் விவசாயிகளின் வருமானம் ரூ.7068 லிருந்து ரூ.4895 ஆகவும், மத்தியப்பிரதேசத்தில் ரூ.9740 லிருந்து ரூ.8339 ஆகவும், நாகலாந்தில் ரூ.11428 லிருந்து ரூ.9877 ஆகவும், ஒடிசாவில் 5274 லிருந்து ரூ.5112 ஆகவும் குறைந்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் 2012-13 ஆம் ஆண்டின் என்.எஸ்.ஓ (National Statistical office) புள்ளி விபரப்படி 57.8 சதவீதம் கிராமப்புற குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி இது 54 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு காரணம் விவசாய குடும்பத்தின் மாத வருமானம் 2012-13 ஆம் ஆண்டில் ரூ.6426 லிருந்து 2018-19ஆம் ஆண்டு 10,218 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள் ளது. 2012-13ஆம் ஆண்டில் விவசாயக் குடும்பங்கள் பயிர் உற்பத்தி மூலம் 48 சதவீத வருமானத்தை ஈட்டி யுள்ளன. 2018-19ஆம் ஆண்டில் அதன் பங்கு 37 சத வீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் 2012-13 ஆம் ஆண்டில் ஒரு மாதம் ரூ.2192ஆக இருந்த சாகுபடிச் செலவு, 2018-19ஆம் ஆண்டில் 2959 ஆக உயர்ந் துள்ளது.
கொள்முதல் நிலைமை
விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமை, நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசிபருப்பு, எள், தக்காளி, வெண்டை, கொய்யாபழம் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி மற்றும் பழங்கள் மற்றும் அனைத்து பொருட்களின் விலையும் கடந்த எட்டு ஆண்டுகளாக குறைந்து வந்துள்ளது. ஆண்டுதோறும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்தாலும் பொது கொள்முதல் என்பது அரிசி, கோதுமை மற்றும் ஒரு குறிப்பிட்ட அள விலான பருப்பு வகை பயிர்களுக்கு மட்டுமே. இந்த கொள்முதலும் ஒரு சில மாநிலங்களில் பெருமளவில் குவிந்துள்ளது. மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரி யானா ஆகிய மூன்று மாநிலங்களும் நாட்டின் 46 சதவீத கோதுமையை உற்பத்தி செய்கின்றன. அதில் 85 சத வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. அரிசி உற்பத்தி 40 சதவீதம் கொண்ட பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் கொள்முதல் 74 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இதர மாநிலங்களில் கொள்முதல் என்பது குறைவாகவே நடைபெறுகிறது. இதர பயிர்க ளுக்கு ஆதரவு விலை மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை. காரணம் அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கிறது. இதர பயிர்களின் பொருட்களை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வெளிச் சந்தையில் தனியாரிடம் விற்க வேண்டியுள்ளது. அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் தனியார் எங்கும் கொள்முதல் செய்வதில்லை. இதனால் விவ சாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
காய்கறிகளுக்கு ஆதரவு விலை...
டாப் காய்கறிகள் என்று அறியப்படும் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படும், உற்பத்தி செய்யப்படும், அதே போல் அதிகளவில் நுகரப்படும் காய்கறிகளாகும். இவற்றின் உற்பத்தி பல ஆண்டு களாக அதிக அளவில் செய்யப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. புள்ளிவிவரப்படி 2018-19இல் தக்காளி உற்பத்தி 19 மில்லியன் மெட்ரிக் டன், வெங்காய உற்பத்தி 22.8 மில்லி யன் மெட்ரிக் டன் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தி 50.2 மில்லியன் மெட்ரிக் டன் ஆக இருந்தது. இது மட்டும் அல்லாமல் ஏராளமான காய்கறிகள், பழங்கள், பூக்கள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின் றன. இவைகளுக்கு எந்த விதமான குறைந்தபட்ச ஆதரவு விலையும் ஒன்றிய - மாநில அரசுகள் அறி விக்கவில்லை. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத தால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கிற நிலை மோடி ஆட்சிக் காலத்தில் அதி கரித்துள்ளது. நாட்டிலேயே கேரள மாநில அரசு இதற்கு விதிவிலக்காக காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை தீர்மானித்து கொள்முதல் செய்கிறது. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2820 நிர்ண யம் செய்து கொள்முதல் செய்கிறது.
காய்கறி விலை வீழ்ச்சி
கேரட் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை யானது. விவசாயிகள் அறுவடை செய்து விற்ப னைக்கு கொண்டு செல்லும் போது கிலோ ரூ.18 முதல் 28 வரை மட்டுமே விற்பனையாகிறது. வெண்டைக்காய் விலை ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படு கிறது. பூண்டு, வெங்காயம், தக்காளி, கொய்யா, மிளகாய், நெல்லிக்காய், வாழைத்தார், சுரைக்காய், தேங்காய், வெற்றிலை, கோழி கொண்டை பூ, செண்டிப்பூ, சம்பங்கி பூ, ரப்பர், மிளகு, இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத விலைவீழ்ச்சி காய்கறிகளுக்கு இந்தாண்டு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் காய் கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, காய்கறி விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்றுமதி 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்து விட்டது என்றும் ஏற்றுமதி யாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடக மாநிலம் கடாக் என்ற இடத்திலுள்ள விவ சாயி தங்கள் தோட்டத்தில் விளைவித்த வெங்கா யத்தை பெங்களூரு யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் 205 கிலோ விற்பனை செய்தார். ஒரு குவிண்டால் ரூ.200 மட்டுமே. மொத்தம் 410 ரூபாய் இதில் போர்டர் கட்டணம் ரூ.24, சரக்கு போக்குவரத்து கட்டணம் ரூ.377.64. எனவே 410 ரூபாயில் போர்ட்டர் கட்டணம், சரக்கு கட்டணம் போக மீதம் விவசாயிக்கு 8 ரூபாய் 36 பைசா கிடைத்துள்ளது. இது ஒரு உதாரணம். இது போல் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட உதாரணங்கள் மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் தற்கொலையே அதிகரிப்பு
2017 முதல் 2021 வரை இந்தியாவில் 28,572 விவ சாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2017ஆம் ஆண்டில் 5955 விவசாயிகள், 2018ஆம் ஆண்டில் 5763 விவசாயிகள், 2019ஆம் ஆண்டில் 5957 விவசாயிக ளும், 2020 ஆம் ஆண்டில் 5579 விவசாயிகளும், 2021 ஆம் ஆண்டில் 5318 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மகா ராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களி லும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதோடு தற்கொலை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமீபத்திய குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விபரங்களை தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகளில் 1,12,000 விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
வாய்ச்சொல்லில் வீரரடி என்பது மகாகவி பாரதியின் வரிகள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விவ சாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிரதமர் நரேந்திரமோடி 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் தங்கள் வரு வாயில் இரண்டு மடங்கு கூடுதலாக பெறுவார்கள் என்று 2016ஆம் ஆண்டு தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு துவங்கிவிட்டது. ஆனால் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக வில்லை. மாறாக விவசாயிகளின் செலவுகள் இரட்டிப் பாகியுள்ளன. விவசாயிகளின் கடன்கள் இரட்டிப்பாகி உள்ளன. விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பாகி உள்ளது. விவசாயிகளின் நில வெளியேற்றம் இரட்டிப்பாகி உள்ளது. விவசாயக் குடும்பங்களின் அழுகுரல் இரட்டிப்பாகியுள்ளது. நரேந்திர மோடி அரசு சிறுகுறு விவசாயிகளுக்கு தற்போது ரூ.6000 கொடுத்து வருகிறது. அது விவ சாயிகளின் வாழ்க்கையில் ஒரு கடுகளவு கூட மாற் றத்தை ஏற்படுத்தவில்லை. பயனாளிகளின் எண்ணிக் கையையும் 11 கோடியிலிருந்து 3 கோடியே 80 லட்ச மாக குறைத்து விட்டார்கள். இவர்கள் விவசாயிகளை பாதுகாக்கக் கூடியவர்கள் என்று மீண்டும் நாடகம் நடத்த முற்படுவார்கள். ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தரு கிறோம் என்று கூடச் சொல்வார்கள். நாம் நம்பக் கூடாது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் வேண்டும். ஒருமுறை கடன் தள்ளுபடி வேண்டும். மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று நாடு முழுவதும் நமது குரலை உயர்த்த வேண்டும்.