நூறுநாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
பலங்கள் (Strengths)
- • வேளாண்மையில் வேலை வாய்ப்பு இல்லாத சூழலில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது.
- • தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனை (Bargaining Power) கிராமப்புறங்களில் அதிகரிக்க செய்தது.
- • வேளாண் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) அதிகரிக்கச் செய்தது.
- • பொது சொத்துக்களை (Public Assets) சீர் செய்ய உதவியது.
- • புதிய கிராமப்புற கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய வளங்களை பெருக்க உதவியது.
- • உணவு பாதுகாப்பை (Food Security) உறுதி செய்தது.
- • பெரு நகரங்களை நோக்கிய இடப் பெயர்வை தடுத்தது.
- • வங்கிகள் மற்றும் தபால் நிலைய சேவைகளை பயன்படுத்த உதவியது.
- • அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்தது.
- • கிராமப்புறங்களில் சமூக இடர்ப்பாடுகளை குறைத்தது.
பலவீனங்கள் (Weakness)
- • தாமதமாக கூலி வழங்கப்படுவது மற்றும் கூலி நிர்ணயத்தில் நடைமுறை பிரச்சனைகள்.
- • கிராம பஞ்சாயத்துக்களில் வளர்ச்சி திட்டங்களை அடையாளப்படுத்துவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் .
- • சமூக தணிக்கை (Social Audit) பற்றிய விழிப்புணர்வு இல்லாத நடைமுறை சூழல்.
- • மின்னணு பணியாளர் வருகைப் பதிவேடு பற்றிய விழிப்புணர்வு இல்லாத சூழல்.
- • அடிமட்ட அளவில் தொழில்நுட்ப உதவி இல்லாத நடைமுறைச் சூழல்.
- • குறைந்த கல்வி மற்றும் வங்கிகள், தபால் நிலையங்கள் பல கிராமங்களில் இல்லாத நடைமுறை நிலை.
- • மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் ஊழல்.
- • நூறுநாள் வேலை திட்டத்தில் குறைந்த அளவு பணி ஒதுக்கீடு.
வாய்ப்புகள் (Opportunities)
- • அதிகளவு பெண் பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்வதால் அதிகாரம் பெறுதல்.
- • உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல்.
- • பெருநகரங்களை நோக்கிய இடம்பெயர்வை தடுத்துள்ளது.
- • மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- • கிராமப்புறங்களில் பொது கட்டுமானங்கள் மற்றும் சமுதாய வளங்களை உருவாக்கி உள்ளது.
- • சமூக சமத்துவத்தை (Social Equity) உறுதி செய்துள்ளது.
- • கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளில் பங்களிப்பை பெருகச் செய்துள்ளது.
சவால்கள் (Challenges)
- • போதிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வேலைக்கு உரிய நேரத்தில் கூலி வழங்காத நடைமுறைச் சூழல்.
- • போதிய கண்காணிப்பு இல்லாத காரணத்தால் குறைந்த அளவு பொதுக் கட்டுமானங்கள் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம்.
- • பயனாளிகள் தேர்வு மற்றும் வேலை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடு.
- • அதிகளவு ஊழல் மற்றும் முறைகேடான நிதி ஒதுக்கீடுகள்.
- • உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக செயல்படுத்தப்படுவதால் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு மிக அதிக வேலைப் பளு.
- • கிராமப்புற மக்கள் அதிக கூலிக்கு பிற பகுதிகளுக்கு இடம் பெயர்வதை தடுக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பெருவாரியாக நமது கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வு ரிமைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் பொது தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது நாட்டின் வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலைகளுக்கு உரிய வேளாண் தொழிலாளர்கள் கிடைக்காமல் நிலத்தின் உரிமையாளர்கள் அதிகளவு கஷ்டப்படுவதாகவும், இத் திட்டத்தால் உருப்படியான ஊரக வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் பலர் வேலையே செய்யாமல் ஊதியம் பெறுவதாகவும், இத்திட்டத்தை நிறுத்துவதன் வாயி லாக வேளாண் துறையில் வேலைக்கு உரிய தொழிலா ளர்கள் கிடைப்பார்கள் என்பது போன்ற உண்மைக்கு மாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இத்தகைய நடைமுறைச் சூழலில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் தருமபுரி மாவட்டத்தில் நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய முதுநிலை விரிவாக்க ஆய்வு. அண்ணா மலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க துறையின் முதுநிலை மாணவர் வெ. திருமால் கண்ணனால் வேளாண் விரிவாக்கத் துறை இணைப்பேராசிரியர் முனைவர். தி. ராஜ் பிரவினின் வழிகாட்டலில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் அதிகளவு நூறுநாள் பயனாளிகளை கொண்டதால் இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டது. சுமார் 120 பயனாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பின் வரும் உண்மைகள் நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தில் கண்டறியப்பட்டன.
நூறுநாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்:
பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது.
பயிற்சித் தேவைகள்
நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளின் பயிற்சித் தேவைகள் (Training Needs) பற்றிய விவரங்களும் தொகுக்கப்பட்டன. வேலை அட்டைகளில் செய்யப் படும் பதிவுகளை சரிபார்க்கவும், கிராமசபை கூட்டங்க ளில் உரிய முறையில் பங்கு பெறவும், கூலிப் பணத்தை பெற வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளை சரிபார்க்கவும், சமூகத் தணிக்கையில் பங்கு பெறவும், வேலை ஒதுக்கீடுகளை நடைமுறை யில் தெரிந்து கொள்ளவும், குறை தீர்க்கும் அமைப்பு களை பற்றித் தெரிந்து கொள்ளவும் பயிற்சிகள் தேவைப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விரிவாக்க ஆய்வு கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் இருந்து வெளியிடும், நூறு ஆண்டு பழமை மற்றும் பாரம்பரியம் கொண்ட 1913 முதல் வெளியாகி வரும் மெட்ராஸ் அக்ரிகல்ச்சுரல் ஜெர்னல் (“ Madras Agricultural Journal “) என்ற புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக்க முனைவர் பட்ட ஆய்வு
தற்போது புதியதாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் இந்திய சமூக அறிவியல் கழகத்தின் (Indian Council for Social Science Research) முனைவர் பட்ட ஊக்கத் தொகையுடன் “நூறு நாள் வேலைத் திட்டத்தின் வாயி லாக வட தமிழகத்தில் தலித் பெண்களிடம் அதிகாரப் பர வலாக்குதல் மற்றும் இயற்கை மேலாண்மை வாயிலாக பருவ மாற்று தொழில்நுட்பங்களின் தாக்கம்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முனைவர் பட்ட ஆய்வின் முடிவில் தற் போதைய நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய வட மாவட்டங்களில் (கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்ம புரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை மற்றும் ராணிப்பேட்டை) உள்ள தலித் பெண்க ளிடம் அதிகாரம் பரவலாக்குதல் மற்றும் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை காண உதவும் நில வள மேலாண்மை தொழில்நுட்பங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும்.