குற்றவாளிக்கு எதிராக வங்கதேசத்தில் நாடுதழுவிய போராட்டம்
மதச்சிறுபான்மை பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
டாக்கா, ஜூன் 30- வங்கதேசத்தில் மதச்சிறுபான்மை யினரான இந்து பெண் ஒருவரை உள்ளூர் அரசியல்வாதி பாலியல் வன்கொடுமை செய்ததை எதிர்த்து அந்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. வங்கதேசத்தின் குமிலா மாவட்டத்தில் ஜூன் 26 அன்று, 21 வயதுடைய மதச்சிறுபான்மையினராக உள்ள இந்துப் பெண் ஒருவரை அவரது வீட்டிற்குள் புகுந்து உள்ளூர் அரசியல்வாதியும் இன்னும் சிலரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முன்னதாக அவன் அப்பெண்ணை துன்புறுத்திய போதே அந்நபரை உள்ளூர்வாசிகள் பிடித்து அடித்து, காவல்துறையிடம் ஒப்படைக்காமல் நேரடி யாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் மருத்துவ மனையில் இருந்து தப்பி வந்து அப்பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணை நிர்வாணமாக்கி அவர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் வன்கொடுமை தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து தான் இச்சம்பவம் வெளியே வந்தது. அதன் பிறகு தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் துவங்கியது என கூறப்படுகிறது. இதையடுத்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கள் அனைவருக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக முக்கியக் குற்றவாளியான உள்ளூர் அரசியல்வாதியான 36 வயதான ஃபஸோர் அலி உட்பட ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படம் மற்றும் அடையாளத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான நாடுதழுவிய போராட்டம் தீவிரமடைந்தவுடன் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமை யில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு நாட்டின் சூழலை சரிசெய்யத் தவறிவிட்டது. இதனால் அந்நாட்டில் கடந்த 11 மாதங்களாக கும்பல் தாக்குதல்கள், பயங்கரவாதம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்ப வங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.