அரசியல் துணிச்சல் இல்லாத மதவெறியர்கள் வன்முறைத் தாக்குதல் தொடுக்கிறார்கள்
திண்டுக்கல்லில் இந்து முன்னணி யின் தாக்குதலைக் கண்டித்து இடதுசாரிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆற்றிய உரையின் பகுதிகள்:
அரசியலை அரசியலாக எதிர்க்க துணிச்சல் இல்லாததால் மதவெறியர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தாடிக்கொம்பில் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சரத்குமார் மீது இந்து முன்னணி நடத்திய தாக்குதல் இதற்கு உதாரணம். இந்தக் கூட்டம் முடிந்து நாம் களைந்து சென்று விட்டால், இதைப் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தா மல் போனால், தமிழகம் முழுவதும் இப்படிச் செய்யலாம் என்ற துணிச்சல் அவர்களுக்கு வரும்.
ஜனநாயக அரசியலும் நாகரீகமும்
ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கும் முறைகளில் இயக்கங் கள் நடத்தலாம். பிரச்சாரம், பொதுக்கூட்டம், கடையடைப்பு, மறியல் என அனைத்தும் சட்டப்பூர்வமானவை. இந்த அடிப்படையில் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிபிஎம் தோழர் சரத்குமார் பேசியது தவ றாகப் பட்டால் கூட்டம் போட்டு “அவர் தவறாகப் பேசினார்” என்று பேசுங்கள். அதுதான் அரசி யல் நாகரீகம். எது சரி எது தவறு என்று பொது மக்கள் தீர்மானிக்கட்டும். வன்முறையில் ஈடுப ட்டு தடுத்து நிறுத்துவது அரசியல் அநாகரீகம். அந்த அரசியல் அநாகரீகத்தைத்தான் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் செய்திருக்கிறார்கள்.
அமித் ஷாவின் முரண்பாடும் அரசியல் மாநாடும்
அமித் ஷா முருகன் மாநாட்டிற்கு “பல்லா யிரக்கணக்கில் திரண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று சொன்னவர், இப்போது “எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என் கிறார். அவர் எவ்வளவு பெரிய பித்தலாட்டக் காரர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் அது அரசியல் மாநாடு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டு ஆளு நரே முதல் நாளே சென்று தீபாராதனை காண்பித்து “இதற்கும் அரசியலுக்கும் சம்பந்த மில்லை, இது முருக பக்தர்கள் மாநாடு” என்று அப்பட்டமாக பொய் சொன்னார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் உத்தி
ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பல முகங்கள் உண்டு. 1977 வரை ஜனசங்கம், அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சி. அதுபோல் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத் என எத்த னையோ அமைப்புகள். தொழிற்சங்கம், மாண வர், இளைஞர் அமைப்புகள் என பல்வேறு முகங்கள். முதலில் விநாயகரை அதாவது அண்ண னை வைத்து அரசியல் செய்தார்கள். அண் ணன் கைகொடுக்காததால் இப்போது தம்பி முருகனைப் பிடித்திருக்கிறார்கள். மக்க ளின் இறை நம்பிக்கையைத் தங்க ளுக்குச் சாதகமாக அரசியல் ரீதியாக மாற்றிக் கொள்ளும் உத்தியைப் பின்பற்றுகிறார்கள்.
மதம் குறித்த எங்கள் நிலைப்பாடு
நாம் எந்தக் கடவுளையும் திட்டவில்லை. எந்த மதத்தையும் திட்டவில்லை. மதவெறி கூடாது, சாதிவெறி கூடாது என்றுதான் சொல்கிறோம். மூடநம்பிக்கையைப் பரப்பக் கூடாது என்று சொல்கிறோம். மதங்களைச் சார்ந்திருப்பது அவரவர் விருப்பம். சாதியைச் சார்ந்திருப்பது அவரவர் விருப்பம். அதற்குள் போகவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளை அரசியல் ரீதியாகவும் விஞ்ஞானப் பூர்வமாகவும் சொல்கிறோம். இதை அவர் களால் எதிர்கொள்ள முடியவில்லை. அரசியல் ரீதியாகப் பதில் அளிக்க வேண்டாமா? அந்த தகுதியும் துணிச்சலும் இல்லாததால்தான் தாக்குகிறார்கள்.
காந்தியும் கம்யூனிஸ்ட் கட்சியும்
தேசப்பிதா காந்திக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொள்கையில் கருத்து வேறுபாடு உண்டு. மீரட் சதி வழக்கில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சிறைக்கு வந்து காந்தி சந்திக்க விரும்பினார். சிறையிலிருந்த தலைவர்கள் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்கள். “நீங்கள் சந்திக்க வரவேண்டாம்” என்றனர். பிறகு காந்தி சென்று சிறையில் சந்தித்தார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவ ருக்கு “தேசப்பிதா” பட்டத்தை வழங்கியது கம்யூ னிஸ்ட் கட்சிதான். அன்றைய நிலையை விளக்கும் விதத்தில் தோழர் பி.இராமமூர்த்தி மொழியாக்கம் செய்த “பி.சி.ஜோசி காந்தி கடிதப் போக்குவரத்து” என்ற சிறிய நூலை நியூ செஞ்சுரி புக்ஸ் வெளி யிட்டுள்ளது. எல்லோரும் வாங்கிப் படியுங்கள். அதைப் படித்தால் அரசியல் நாகரீகம் என்ன என்று தெரியும். காந்திக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக் கும் உள்ள உறவு என்ன என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ்.ஸால் காந்தி கொலை இந்த நாடு விடுதலை அடைந்த போது காந்தி குடியரசுத் தலைவராகவில்லை, பிரத மராகவில்லை, எந்தப் பதவியையும் ஏற்க வில்லை. மற்றவர்களை அடையாளம் காண் பித்துப் பொறுப்பில் அமர்த்திய தலைவர். நாடு விடுதலை அடைந்து 5 மாதம் 15 நாளில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். ஏன் சுடப்பட்டார்? அவ ருடைய கருத்தியலுக்கு முன்பாக வகுப்பு வெறியர்களால் நிற்க முடியவில்லை. மதச் சார்பின்மை என்ற மகத்தான கொள்கையில் அவர்களால் உடன்பட முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையினர் இந்த நாட்டை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடினார்கள். காந்தி அதை ஏற்க வில்லை. “ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று மதச்சார்பின்மையின் பக்கம் உறுதி யாக நின்ற காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த கோட்சேவால் 1948 ஜனவரி 30-இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொடர்ச்சியான அறிவுஜீவி கொலைகள்
சிபிஎம் தோழர் சரத்குமார் மீது இந்து முன் னணி தாக்குதல் நடத்தியது சின்ன விஷயம் அல்ல. இது போன்ற சம்பவம் ஏன் நடைபெறு கிறது என்பதுதான் முக்கியம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த தோழர் கோவிந்த் பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் செய்த “பாவம்” என்ன தெரியுமா? மராட்டிய மன்னர் சிவாஜி பற்றி ஒரு புத்தகம் எழுதினார். சிவாஜி இந்து மன்னர் என்று ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்து வந்தது. அதை மறுத்து “சிவாஜி மதச்சார்புடையவர் அல்ல, மதச்சார்பற்றவர்” என்று ஆதாரப்பூர்வமாக புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகம் லட்சக் கணக்கில் விற்பனையானது. மக்கள் விழிப் புணர்வு அடைந்துவிடுவார்கள் என்று எண்ணி அஞ்சி, கொலை செய்யப்பட்டார். அவரையடுத்து நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார். கல்புர்கி கொலை செய்யப்பட்டார். பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி நடந்தது. இந்தப் படுகொலையைச் செய்த குண்டர்கள், தாடிக்கொம்பில் சரத்குமாரைத் தாக்கிய குண்டர்களின் சகோதரர்கள். இவர்கள் செய்வது சரிதானா என்பதுதான் நாங்கள் மக்கள் முன் வைக்கிற கேள்வி.
காவல்துறையின் இரட்டை நிலைப்பாடு
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருக்கிறார்கள். இங்கே ஆயிரம் போலீசாரா பாதுகாப்பிற்கு இருக் கிறார்கள்? சரத்குமார் மீது தாக்குதல் நடந்த போது ஒரே ஒரு போலீஸ்காரர்தான் இருந்தி ருக்கிறார். போலீசார் என்ன நினைக்கிறார்கள்? கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) கட்சிகள் ஒரு இயக்கம் நடத்தினால் எந்தப் பிரச்சனையும் வராது. சட்டம் - ஒழுங்குப் பிரச்சனை வராது. வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். ஏன் என்றால் இந்தக் கட்சிகளில் ரவுடிகள் கிடையாது. மதுரையில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். அந்த மாநாட்டில் மது விற்றதா? இல்லை. ஏன் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்டுப்பாடு மிக்க கட்சிகள். அதனால் தான் ஒரு போலீஸ்காரரை அனுப்பியிருக் கிறார்கள். அந்த ஒரு போலீஸ்காரருக்கு அங்கு யார் தகராறைத் தொடங்கினார்கள் என்று தெரியும். “அங்கே 8 பேர் கைது, இங்கேயும் 8 பேர் கைது” என்று வழக்கு போடுவது நியாயமல்ல. தர்மமல்ல. யார் பிரச்சனையைத் தொடங்கினார்கள், அவர்கள் மீது மட்டும் வழக்கு போட்டிருந்தால் இந்தப் பிரச்சனைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதை காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.