articles

img

சோதனை எலிகளா சிறு, குறு தொழில் முனைவோர்? - கே.இ.ரகுநாதன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் அழிந்து வருகின்றன, தொழில் முனைவோர்கள் கடும் நெருக்கடிக்கும், பாதிப்புக்குள்ளாகியும் வருகின்றனர். தொழில் முனைவோரின் பிரச்சனைகள் முன்பெல் லாம் அவரைச் சார்ந்ததாகவும், சந்தை நடைமுறை சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது வரிவிதிப்பு முறையின் கடுமையான விதிகளாலும், சிக்கலான  அமலாக்கத்தாலும் ஏற்படுகின்ற பிரச்சனை கள் புதிதாக உள்ளன.

ஒவ்வொரு விஷயத்திலும் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிகிறது. ஆனால் பிடிப்பவ ருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப்பட்டபோது சொல்லப்பட்டது என்ன? பிசினஸ் நடைமுறை வசதியாகும், வாய்ப்புகள் எளிதா கும், வியாபாரம் விரிவாகும் என்றுதானே கூறினார்கள். ஆனால் நடப்பது என்ன? புதிய ஜிஎஸ்டி வரிமுறை யால் தொழிலின் ஒரு சாரார் மட்டுமின்றி பல துறைகள் அழிந்து நிர்மூலமாகிவிட்டன. தொழில் முனைவோர் படும் துயரங்களை வெளியில் சொல்ல முடியாத நிலை உள்ளது.

இதற்கு என்ன காரணம்?

அறிமுகமாகி 5 ஆண்டுகளாகியும் இன்னமும் ஜிஎஸ்டி செயலியில் இடர்கள் நீடிக்கிறது. நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான சந்தோஷத்தைக் கொடுக்க முடியவில்லை. நாம் கடுமையாக  வேலை செய்ய நினைத்தாலும் ஜிஎஸ்டி போர்ட்டல் அதை முழுமையாக செய்ய விடுவதில்லை. தொழில் முனைவோர் மீது திணிப்புகள், எதை எடுத்தா லும் ஒரு பக்க முடிவுகள், எந்த எதிர்மறை கருத்து சொன்னாலும், நீ யார் சொல்வதற்கு என்ற நடவடிக்கை களே ஒன்றிய அரசின் தரப்பில் மேலோங்கி உள்ளன. ஒரு கட்டிங் பிளேயரை எடுத்து, அதற்குள் நம் விரலை வைத்து அழுத்தினால் என்ன வலி இருக்குமோ, அது போல் வலியோடு இருக்கிறோம். தொழில் முனைவோர்  ஒவ்வொரு நாளையும் கடத்துவதே கடினமாக இருக்கிறது. சமீபத்தில் சம்மன் மற்றும் கைதுகளுக்கான வழிகாட்டுதலை (Guideliness for summons and arrests) கொடுத்திருக்கிறார்கள். இதை எப்பொழுது கொடுக்க வேண்டும்? முன்பே யோசித்து, முன்பே செய்திருக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது முக்கிய மில்லை. பேச வேண்டியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

எதை நோக்கி பயணிக்கிறோம்?

அழுத்தம் அதிகமானால், வேலையின்மை அதிக மானால், மக்களால் ஒரு தரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்ய முடியாமல் போனால் போராட்டங் கள் வெடிக்கக்கூடிய நிலை ஏற்படும். தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற விஷயத்தை அரசு அறிமுகப்படுத்திய நாளிலேயே அல்லவா யோசித்திருக்க வேண்டும். நல்லவர்கள் தண்டிக் கப்பட்டால் அதற்கு என்ன வழி என்று யோசித்தி ருக்க வேண்டும். யாரைப் பாதுகாக்க வேண்டுமோ அவர்களை ‘அம்போ’ என்று விட்டுவிட்டோம்.  வேலை  இழந்தவர்கள், வேறு வேலை தேடிச் சென்று விடலாம்.  ஆனால் தொழிலை இழந்தவர்கள் இன்னொரு தொழிலை தேடிச் செல்வது எளிதானதல்ல. இன்று இந்தியாவில் 75,000 ஸ்டார்ட் அப் நிறுவ னங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக பெருமை பேசு கிறோம். ஆனால் உண்மை என்ன? அவற்றில் 90 விழுக் காடு நிறுவனங்கள் அழிந்துவிட்டன. ஒரு மருத்துவர் மருந்துச் சீட்டு எழுத வேண்டும் என்றால், நோயாளி யின் ஸ்கேன் ரிப்போர்ட் வேண்டும். அதுபோல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட விஷயங்களில் தரவுகள் வேண்டும். ஆனால் நம்மிடம் எந்தவிதமான தரவுகளும் கிடை யாது. அது புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆகட்டும், தொழில் முனைவோர் ஆகட்டும், தரவுகள் இல்லாத நிலையே உள்ளது.

ஒரு பக்கம் ஒரு சாரார் உயர்ந்து கொண்டிருப்ப தைப் பார்க்க முடிகிறது. அது சந்தோஷம்தான் என்றா லும் கூட, உயர்வு இன்னொரு சாரரின் அழிவிலிருந்து ஏற்படும் என்றால் அது வருந்தக் கூடியதுதானே. சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்  வரைய முடியும். அதில் விரிசல் இருந்தால் அதை சீரமைப்பது அவசியமில்லையா? ‘செய் அல்லது செத்துமடி’ என்ற நிலை வரும்போது, யாருமே கண்டிப்பாக செத்து மடிவதற்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். 75 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் முதன்முத லாக தொழில் முனைவோர்கள் போராட ஆரம்பித்தி ருக்கிறார்கள். தேசியக்கொடியில் ‘மேட் இன் சைனா’ என்று இருந்ததாக பிரச்சனை எழுந்தது.  அந்தக் கொடி செய்ய வாய்ப்புள்ள உள்நாட்டுத்தொழில் முனைவோரைக் கண்டு கொள்ளவில்லையே என்பது தான் எங்கள் கவலை. இந்த நாட்டு கலாச்சாரம், இன்னொரு நாட்டுக்காரனின் லாபத்திற்கு விதை போட்டால் ஆத்மநிர்பார் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

 தேசமே ஆட்டம் கண்டு விடும்

பேசிவிடலாம், மயக்கி விடலாம், பேச்சால் மயக்கி விடலாம் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எத்தனை காலம்? எத்தனை முறை? எத்தனை நாட்கள்? எதற்கும் எல்லை உண்டு. இதற்கு மேலும் தொழில்முனைவோரை துன்புறுத்தினால், இப்போது நடைபெறுவது வெறும் சாதாரணமான வேலை நிறுத்தங்கள் தான். திடீரென்று ஒரு நாள் தொழில் முனைவோர் அனைவரும் ஒன்று கூடி நாங்கள் இந்த முறை ஜிஎஸ்டி செலுத்தப் போவ தில்லை என்று அறிவித்து விட்டால் தேசமே ஆட்டம் கண்டு விடும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் அடித்தளம் என்ன? சாமான்யனின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்பதுதானே. எந்தக் கோரிக்கையும் கேட்பதற்கு முன்னால், அல்லது கேட்ட பிறகு அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் தற்போது தொழிலில் கவனம் செலுத்த முடியாமல், பைத்தியம் பிடித்த நிலைக்கு தொழில் முனைவோர் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் 3 நாள் மேளா நடத்தி 60,000 கோடி வியாபாரம் செய்ததாக தம்பட்டம் அடிக்கி றார்கள். அது இங்குள்ள வணிகர்களின் முதலீடு களை அழிக்கும் செயல் அல்லவா? இதை இங்குள்ள வர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி? இது போன்றவை தான் வளர்ச்சி என்றால், அது ஒருநாள் கிளர்ச்சி யில்தான் போய் முடியும். இந்த ஜிஎஸ்டியே தேவை யில்லை என்ற கட்டாயத்தில் தொழில் முனைவோர் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதனை க்குப் பயன்படுத்தும் எலியைப் போல் தொழில்முனை வோர் ஆகி விட்டார்கள். எலி அல்ல புலி என்று காட்ட வேண்டிய தருணம் வந்து கொண்டிருக்கிறது. அதை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கட்டுரையாளர் : இந்திய தொழில் முனைவோர்  சங்கத்தின் தலைவர்