ஒடுக்குமுறையின் பெயரால் அணிதிரளும் சாதிய அமைப்புகளின் செயல்பாடு தீவிரமாகி வருவது மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதன் பின்னணியில் அந்த அமைப்பிற்குள் சனாதன-ஆர்.எஸ்.எஸ்-சின் ஆதரவாளர்கள் பெருகியிருப்பதும், அவர்களது செயல்பாட்டில் சனாதனக் கருத்தியலின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதும் மிக முக்கியக் காரணங்களாகும்.
“அன்று முதல் இன்று வரை ஏகலைவனின்
ரத்தம் குடித்து
ரத்தம் குடித்து சாதி மிருகம் தாகம் தணிக்கிறது...!”
- முகநூல் கவிதை
இந்த கவிதையானது இந்தியாவில் தலித்களின் இன்றைய நிலைமையை துல்லியமாக உணர்த்துவதாக உள்ளது. உண்மை நிலைமை இதுவென்றால் முன்னே றிய சமூகம் என்று பொதுச் சமூகம் சொல்லிக் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் உண்டா? அப்படி பொதுச் சமூகத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பிய சம்பவம் தான் நாங்கு நேரியில் நடந்தது. நாங்குநேரியில் தலித் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை மீது சாதி இந்துக்களான சக மாணவர் கள் நடத்திய கொலை வெறித் தாக்குதல் தமிழகத்தில் நிலவும் சாதியப் பாகுபாட்டின் நீள, அகல பரிமாணத்தை மட்டுமல்ல- அது சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஆழத்தையும் உணர்த்துகின்றது! ஒரு தலித்- சமூகத்தில் தான் சமமாக மதிக்கப்படு வது முதல் பொதுப் பாதை உரிமையை, வழிபாட்டு உரி மையை, கல்வியை, கண்ணியமான வேலை வாய்ப்பை, அரசியல் அதிகாரத்தை அடைய முற்படும் போது அதற்கு எதிர்வினையாகவே தலித்கள் மீது சாதிய சமூகம் நடத்துகின்ற வன்கொடுமைகள் தனித்தும், கும்பல் தாக்குதல்களாகவும் வெளிப்படுகின்றன.
இதுகுறித்து மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களது ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவர் “நிலத்தின் மீதான உரிமைக்கும், உழைப் புக்குமான சாதி முரண்பாட்டின் வெடிப்பே வன்கொடு மைகள்” என்றார். மேலும், நமது பாரம்பரியமான சமூகப் பொருளாதா ரக் கட்டமைப்பில் அடிப்படையான முரண்பாடு ஒன்று இருக்கிறது. அதாவது, இந்திய மக்கள் தொகையில் தலித்துகள், சிறுபான்மையாக இருக்கின்றனர். ஆனா லும், தலித்துகள் விவசாயக் கூலித் தொழிலாளிகளில் பெரும்பான்மையோராக உள்ளனர் எனவும் தெரி விக்கிறார். தொடர்ந்து, பரந்த அளவான உழைப்பாளர் கூட்டத்தைச் சேமிப்பு பட்டாளமாக வைத்திருக்க வேண்டிய தேவையை இந்திய விவசாயச் சூழல் ஏற்படுத்தி இருக்கிறது எனவும்; விவசாயத்திற்கும் இன்ன பிற வேலைகளுக்கும் (துப்புரவு, வீட்டுவேலை, கால்நடை மேய்த்தல், பறையடித்தல், சுடுகாட்டுப் பணி உள்ளிட் டவை) தேவையான உழைப்பை வழங்குபவர்களாக தீண்டப்படாத சாதிகளைக் கட்டாயப்படுத்தி முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருத்தமான கரு வியாக, தீண்டாமையுடன் கூடிய சாதிமுறை பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறது” எனவும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.
நாங்குநேரி வன்கொடுமை உணர்த்துவதென்ன?
வன்கொடுமைகளின் அடித்தளம் பற்றிய பி.எஸ்.கிருஷ்ணனின் நிர்ணயிப்பு நாங்குநேரிக்கு எவ்வாறு பொருந்துகிறது? நாங்குநேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பெரும்பான்மையினராக சாதி இந்துக்களே உள்ளனர். அதில் நாங்குநேரி பகுதியில் தலித்களில் ஒரு பிரிவான தேவேந்திர குல வேளாளர் சமூகம் கணிசமான எண் ணிக்கையிலும், மாணவன் சின்னத்துரை சார்ந்துள்ள ஆதிதிராவிடர்(பறையர்) சமூகத்தை சார்ந்த 150 குடும்பங்கள் பெருந்தெரு என்கிற பகுதியில் ஒப்பீட்ட ளவில் சிறிய எண்ணிக்கையிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் 90 சதமானம் பேர் விவசாயக் கூலிக ளாகவும், அங்குள்ள சாதி இந்துக்களை சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளனர். இந்தச் சூழலிலிருந்து ஒரு தலித் விவசாய வருமானத்தின் மூலம் தன்னிறைவு அடைந்தாலும் அல்லது கல்வியின் மூலம் நல்ல வேலை வாய்ப்பு பெற்று இந்த வட்டத்திலி ருந்து வெளியேறினாலும் அது சாதிய ஒழுங்கு விதி கட்டமைப்பை குலைப்பதாகிவிடும். எனவே தான், சாதிக் கட்டமைப்பை ஒடுக்குமுறையின் மூலமாக நிரந்தரமாகக் கட்டிக் காத்து நிற்கும் அரணை உருவாக்க ஆதிக்க சாதியினர் (சக்திகள்) நினைக்கின்றனர். அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வதன் மூலம் அதை நிறைவேற்றுகின்றனர். இதுதான் நாங்கு நேரியில் நடந்தது.
சின்னதுரையின் மீதான கொலை வெறித் தாக்கு தலை நேரடியாகப் பார்க்கும் போது சக மாணவர்கள் மீது அவர் புகார் அளித்ததன் காரணமாக தொடுக்கப் பட்ட தாக்குதலாகத் தோன்றினாலும், உண்மையில் சின்னத்துரையின் கல்வி உரிமையின் மீதும்; நிலத்தோடு பிணைக்கப்பட்டிருக்கும் சாதி ஒடுக்கு முறையிலிருந்தும் மலிவான உழைப்புச் சுரண்டலிலி ருந்தும் வெளியேறத் துடிக்கின்ற அந்த மாணவனின் சுதந்திர வேட்கையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலா கும். இதுதான் தமிழகம் முழுவதும் நடக்கும் சாதிய வன்கொடுமைகளின் உள்ளீடு. சின்னத்துரையின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொ டுமை தமிழகம் முழுவதும் நடக்கும் சாதியப் பாகுபாடு என்கிற கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள வன்கொடு மைகள் என்னும் (பனி)மலையின் வெளியே தெரியும் சிறு முகடு மட்டுமே! சரி, இங்கே குற்றவாளியாகிப் போன சாதி இந்துக் களான மாணவர்களின் செயலுக்கு தூண்டுதலாக இருந்தது எது? அவர்கள் வாழ்ந்து வரும் சூழல் தான். வாழ்நிலை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது. குற்றம் செய்த மாணவர்கள் தங்களது பெற்றோ ரைப் பார்த்தும், தனது சமூகம் சார்ந்த நட்பு வட்டாரங்களை யும் பார்த்துப் பழகுதல் மற்றும் போலச் செய்தல் என்கிற முறையில் வளர்க்கப்படுகின்றனர். அது இளவயதிலேயே அவர்களை சாதிவெறி கொண்டவர்களாக மாற்றி விடு கின்றது. அதன் விளைவு இப்போது 7 பேர் குற்றவாளி களாக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு ஆளாகி யுள்ளனர்.
சாதிய சமூகத்தைப் புரிந்துகொள்வது!
சாதி இந்துக்களைப் பற்றி பேசும் போது நாம் பல நேரங்களில் ‘ஆதிக்க சாதியினர்’ என்று குறிப்பிடு கிறோம். இந்த சொல்லாடல் தலித் சமூகத்திற்கும், பிற சமூகத்திற்கும் இடையே நிலவுகின்ற உறவு நிலையை விளக்குகின்றது. ஆனால், சாதிய சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கவில்லை. அந்தக் குறையை ‘சாதிய ஆதிக்க சக்திகள்’ என்கிற சொல்லாடல் நேர் செய்கிறது. இந்த சொல்லாட லானது சாதி இந்துக்கள் அனைவருமே சாதிவெறி கொண்டவர்களாக, ஆதிக்கம் செலுத்த விரும்புவர்க ளாக, சாதிய வன்கொடுமை மீது தீராத தாகம் கொண்ட வர்களாக இருக்கின்றனரா என்கிற கேள்வியை எழுப்பும் போது அதற்கு விடை தருவதாக இருக்கின்றது.
ஒடுக்கு முறைக்கு எதிராக இயங்கும் அமைப்பு களின், செயல்பாட்டாளர்களின் மத்தியில் சாதி இந்துக்களைப் பற்றிய பிம்பம் பொதுவாக எதிர்மறை யானதாகவே உள்ளது. அதே போல் ஆளும் தரப்பு மற்றும் பொது நீரோட்டத்தில் இயங்கும் ஜனநாயக இயக்கங்க ளும் எவ்வாறு புரிந்து வைத்துள்ளனர்? சாதி இந்துக்கள் மீதான எந்தவொரு விமர்சனமும், நடவடிக்கை யும் தனது இயக்கத்தை விட்டு அவர்களை விலகிச் செல்ல வைத்துவிடுமோ என்கிற ஐயத்தோடு பார்க்கின்ற போக்கு நிலவுகிறது. இதனால் சாதி இந்துக்கள் மீதான உறுதியான நடவடிக்கைகளையோ, விமர்சனத்தையோ கவனமாகத் தவிர்த்து விடுகின்றனர். இது அப்பட்டமான வாக்கு வங்கி அரசியலின் (அரசியல் சந்தர்ப்பவாதம்) வெளிப்பாடே ஆகும். இடதுசாரிகள் மட்டுமே இதில் விதிவிலக்காக உள்ளனர். அப்படியானால், உண்மை நிலைமை தான் என்ன? ஒரே சாதிக்குள் இயங்கும் போது சாதி இந்துக்கள் என்ன வாக இருக்கிறார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதிலுள்ள பல்வேறு பிரிவினரைப் பற்றி பகுப்பாய்வு மேற்கொள்வது அவசியமாகும். இதனை கிடைமட்ட ஆர்ட்டின் வரைபடம் மூலம் விளக்கலாம்.
ஒரே சாதிக்குள் இயங்கும் சாதி இந்துக்களின் வகைப்பிரிவு வரைபடம்
‘A’-பிரிவினர் : இவர்கள் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமையை வெறுப்பவர்கள். சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களை சாதிய சமூகத்தின் முற்போக்கு பிரிவினர் எனலாம் - இவர்கள் சாதி இந்துக்களில் மிகச் சிறுபான்மையாக உள்ளனர்.
‘B’-பிரிவினர் : தனது சாதி அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புபவர்கள். ஆனால், தலித்கள் மீது பாகுபாடு கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள். இவர்கள் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்ற போதிலும், தலித்துகள் விசயத்தில் ஜனநாயகமாக நடந்து கொள்பவர்கள். இவர்க ளும் சாதி இந்துக்களில் சிறுபான்மையாகவே உள்ளனர்.
‘C’-பிரிவினர் : சொந்த சாதி மீது பற்றுக் கொண்ட வர்கள். தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை பின்னொட்டாக இணைத்துக் கொள்வதை கௌரவ மாகக் கருதுபவர்கள். சாதி அமைப்பு முறையின் நியதி களை கடைப்பிடிப்பவர்கள். தலித்துக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்ப வர்கள். ஆனால் வன்கொடுமையில் நாட்டம் இல்லாத வர்கள். இவர்கள் தான் சாதி இந்துக்களில் பெரும்பான் மையாக உள்ளனர். ஆனாலும் அரசியல் ரீதியாக ஜன நாயக இயக்கங்களைச் சார்ந்து இருப்பவர்கள்.
‘D’-பிரிவினர் : சாதி வெறியர்களாக இருப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வன்கொடுமையில் நாட்டம் கொண்டவர்கள். சாதிய அமைப்புகளின் பால் திரண்டு நிற்பவர்கள். அடியாட்களாக வலம் வருபவர்கள்-பெரும்பாலும் இவர்கள் கீழ்நிலை வர்க்கங்களாக இருக்கின்றனர். குறிப்பாக, வேலையின்மை இவ்வா றான வன்கொடுமைகளில் ஈடுபட தூண்டுகோலாக இருக்கின்றது. இவர்களும் சாதி இந்துக்களில் சிறு பான்மையாகவே உள்ளனர்.
‘E’-பிரிவினர் : சாதிய ஆதிக்க சக்திகள். பொது வாக சாதி அமைப்புகள் மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக - நிலவுடமையாளராக - தொழில் முதலீட்டாளராக - கந்து வட்டி மூலதனக்காரர்களாக - சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருப்ப வர்கள். தனது சாதியின் ஒழுங்கு விதிகள் குலையாமல் அரண் அமைத்து பாதுகாப்பவர்கள். தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக C மற்றும் D பிரிவினரை பயன்படுத்துபவர்களாக அல்லது தூண்டுப வர்களாக உள்ளனர். அதாவது, சாதிய சமூகத்தின் ஆகப் பிற்போக்கான சக்திகள் இவர்களே. இவர்களும் சாதி இந்துக்களில் சிறுபான்மையாகவே உள்ளனர்.
எனவே, சாதி இந்துக்களுக்குள்ளேயே இவ்வாறான பல பிரிவினர் இருக்கும் போது, சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்கும் போது ஒட்டுமொத்தமாக ஒரு சாதி யையே குற்றவாளியாக முன்னிறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. அதிலுள்ள ‘A’ மற்றும் ‘B’ பிரிவில் உள்ள ஜனநாயகப் பகுதியினரை (இந்த இரண்டு பிரிவினரையும் சேர்த்தோமானால் கணிச மான எண்ணிக்கையில் இருப்பார்கள்) வென்று சாதி ஒழிப்புப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிப் பது சாதி ஒழிப்பில் தீவிரமாக இயங்கும் ஜனநாயக அமைப்புகளின் கடமையாகும். அதே நேரத்தில், சாதிய சிந்தனைக்கு ஆட்பட்டுள்ள போதிலும் அரசியல் ஜனநாயக இயக்கங்களின்பால் நம்பிக்கை வைத்துள்ள ‘C’ பிரிவில் உள்ள பகுதியி னர் மத்தியில் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தையும், உரையாட லையும் நிகழ்த்துவதன் மூலமாகவும் அதோடு சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்தும் ‘D’ பிரிவினர் மீது கடும் நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்குவதை உறு திப்படுத்துவதன் மூலமாகவும் தான் சாதி இந்துக்க ளில் உள்ள ‘E’ பிரிவான ஆதிக்க சக்திகளை தனிமைப் படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும். இதுவே, அரசுக்கு உள்ள பொறுப்பும் கடமையும் ஆகும்.
சாதிய உடம்புக்குள் சனாதனப் பேய்!
ஒரு பக்கம் தலித்கள் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெற வேண்டி அமைப்பு ரீதியாக அணி திரள்வதும்; மறுபக்கம் சாதி இந்துக்கள் தலித்களை ஒடுக்குவதெற்கென்றே அமைப்பு ரீதியாக அணி திரள்வதும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. ஒடுக்குமுறையின் பெயரால் அணிதிரளும் சாதிய அமைப்புகளின் செயல்பாடு தீவிரமாகி வருவது மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதன் பின்ன ணியில் அந்த அமைப்பிற்குள் சனாதன-ஆர்.எஸ்.எஸ்- சின் ஆதரவாளர்கள் பெருகியிருப்பதும், அவர்களது செயல்பாட்டில் சனாதனக் கருத்தியலின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதும் மிக முக்கியக் காரணங்க
இயல்பாகவே சாதிய அமைப்புக்கள், சாதி இருத்த லுக்கான தத்துவ பலத்தை சனாதனத்திடமும், அதற்கு ஒத்திசைவான அரசியலை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க விடமும் காண்கின்றன. எனவே, ஆர்.எஸ்.எஸ் - பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அதே வேளையில், சனாதன எதிர்ப்புப் பிரச்சாரத்தை கருத்தியல் தளத்தில் கொண்டு செல்ல வேண்டியது மிக மிக அவசியமாகும். சாதிய வன்கொடு மைகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கையானது- சாதி இந்துக்களை தம்மைவிட்டு விலகிச் செல்ல வைத்துவிடுமோ என்கிற அச்சம் (ஆளும் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்களுக்கு) அரசுக்கு தேவையற்றது. மாறாக கருத்தியல் பிரச்சாரத்தையும், அரசியல் கள நடவடிக்கைகளையும் இணைத்து முன்னெடுப்பதன் மூலமாகத்தான் சாதிய ஆதிக்க சக்திகளை தனிமைப் படுத்த முடியும். சாதி இந்துக்களில் உள்ள பெரும்பான் மையோரை மேலும், மேலும் ஜனநாயக வட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கவும் முடியும்.
கட்டுரையாளர் : மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி