பெங்களூரு, பிப்.25- கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி வரு கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி முன் கூட்டியே தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்பட சில வியூக வேலைகளில் களமிறங்கியுள்ளது. இந்நிலை யில், தோல்வி பயத்துடன் இருக்கும் பாஜக வழக்கம் போல புதிய உள்ளடி வேலையைத் தொடங்கியுள்ளது. பாஜக தோல்வியை தழுவும் என கருதப்படும் தொகு தியில் சிறும்பான்மையினர், தலித் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணை யத்தின் உதவியுடன் புகார் மூலம் நீக்கம் செய்வது என களமிறங்கியுள்ளது. இந்த உள்ளடி வேலையின் தொடக்கமாக சிவாஜி நகர் தொகுதியில் 26,000 வாக்காளர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாஜக புகார் அளித்துள் ளது. தேர்தல் ஆணையமும் சம்மந்தப்பட்ட வாக்கா ளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிவாஜி நகர் தொகுதி மீது குறி ஏன்?
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் வடக்கு மூலையில் உள்ள தொகுதியான சிவாஜி நகரில் சுமார் 1.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.மொத்த வாக்கா ளர்களில் 40 விழுக்காடு முஸ்லிம்கள். இதுபோக தலித் மக்களும் 10 விழுக்காடு அளவில் வசித்து வரும் நிலையில், 2008-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. எனவே சிவாஜி நகர் தொகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடம் பெயர்ந்தவர்கள், இறந்த வர்கள், வகுப்பு வாத கலவரத்தை தூண்டுபவர்கள் என 26,000 வாக்காளர்களை பட்டியலிட்டு பாஜக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. புகார் அளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நவம்பர் 16, 2022 அன்று பாஜக சிவாஜி நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் சட்டவிரோதமாக வாக்காளர் விவரங்க ளைச் சேகரித்து வருவதாக தி நியூஸ் மைனுட் (the News Minute) செய்தி வெளியிட்டது. தி நியூஸ் மைனுட் செய்தி நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலாக உருவாகிய நிலையில், டிசம்பர் 24, 2022க்குள் சிவாஜி நகரில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து நீக்குதல்கள் மற்றும் சேர்த்தல்களை 100 விழுக்காடு சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தனியார் நிறுவனதுடன் பாஜக கூட்டு
சட்டவிரோத வாக்காளர்கள் என கூறப்பட்ட 26,000 பேர் கொண்ட பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அனுப்பப்பட்டது. இதுதொடர்பான தேர்தல் ஆணைய விசாரணையில், பாஜகவுடன் சேர்ந்து சிலுமே சமூக சேவை சொசைட்டி (CLSM - Chilume Social Service Society) என்ற தனியார் நிறுவனம்தான் 26,000 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலை தயார் செய்தது என தெரியவந்தது. தொடர்ந்து சிவாஜிநகர் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 15, 2023 அன்று வெளியிட்டது . வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு, தனிப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 26,000 பெயர்களை நீக்கக் கோரி பாஜக தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் சென்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக ஒரு ரிட் மனுவையும் தாக்கல் செய்தது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இந்த நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் உடனடியாக குற்றம் சாட்டியது.
தேர்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ்
9,159 வாக்காளர்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகுமாறு இரண்டு முறை அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கொடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் வாக்காளர் பதிவு அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்றால், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று நோட்டீஸில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் புகார் மற்றும் தேர்தல் ஆணைய அவசர நடவடிக்கை போன்றவற்றால் சிவாஜி நகர் வாக்காளர்கள் விவகாரம் பெரும் சர்ச்சைக் குள்ளாகி இருக்கிறது.
வலுக்கும் சந்தேகம்
சிலுமே என்ற தனியார் நிறுவனம் பாஜகவுடன் சேர்ந்து வாக்காளர்கள் ஆய்வு நடத்தியது எப்படி? யார் அனுமதி தந்தது? இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்ட பிறகு ஏன் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது? அக்டோபர் 2022-ஆம் ஆண்டு பாஜக புகார் செய்த பின் நடவடிக்கை ஏன்? ஒருவேளை சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பது தெரியவந்திருந்தால் மாநில தலைமை நிர்வாக அதிகாரி ஏன் முன்கூட்டியே நடவ டிக்கை எடுக்கவில்லை? யாரேனும் ஆட்சேபணை தெரி விக்க விரும்பினால் மற்றும் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க விரும்பினால் படிவம் 7-ஐ நிரப்ப வேண்டும் என்று விதிகள் கூறு கின்றன. 26,000 பேருக்கு படிவம் 7-ஐ பாஜக பூர்த்தி செய்ததா? அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர்களின் புகாரை தேர்தல் அலுவலகம் ஏன் ஏற்றுக்கொண்டது? என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது பல்வேறு சந்தேகம் எழுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு நடைமுறை மீறல்
வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கை செப்டம்பர் 13, 2021 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறுவதாகக் கருதப்படு கிறது. இது சட்டமன்றத்தின் பதவிக்காலத்திற்கு முந்தைய ஆறு மாதங்களில் தானாக முன்வந்து நீக்கு தல்களைச் செய்ய முடியாது என்று கூறுகிறது. ஆனால் சிவாஜிநகர் வாக்காளர் பிரச்சனையை ‘சிறப்புச் சூழ்நிலையில்’ நீக்குதல்கள் செய்யப்படலாம் என தனி யாக ஒரு ஷரத்தை செயல்படுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முற்பட்டுள்ளது. “ஒரு அரசியல் கட்சியால் தாக்கல் செய்யப்படும் புகார், அதுவும் திரளான பெயர்களுடன், ஒரு சிறப்பு சூழ்நிலை எப்படி இருக்கிறது? “ என்று “பீப்பிள் பர்ஸ்ட்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2024-க்கு முன்னோட்டமா?
தேர்தல் நேரத்தில் பாஜக - சிலுமே என்ற தனியார் நிறுவனம் நடத்திய தற்காலிக ஆய்வும், ஆய்விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையமும் புதிதாக சில நட வடிக்கைகளை கையாள்வது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் புதிய தாக்குதல் ஆகும். சிவாஜி நகர் போன்று வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை நீக்கம் செய்யும் வேலையை பாஜக தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து செய்ய வாய்ப்புள் ளது. இதற்கான டிரைலரை பாஜக, சிவாஜி நகரில் சோதித்து பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.