articles

img

ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாஜக!

ஹைதராபாத்தில் ஜூலை 2-3 தேதிகளில் நடைபெற்ற பாஜக-வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரையிலிருந்து பாஜக ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை நிறுவிடக்கூடிய விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இதுதொடர்பான அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து அமித்ஷா பேசுகையில் அடுத்த 30-40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜக-வின் சகாப்த மாக இருந்திடும் என்று கூறியிருக்கிறார். நாஜி ஜெர்மனியின் (மூன்றாவது ரெய்ச்) பாணியில் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பாஜக ஆட்சி இருக்கும் என்று  அவர் கூறாது, ஏதோ கொஞ்சம் கருணைகாட்டி யிருக்கிறார். எனினும், முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் என்பது “பாஜக சகாப்தத்திற்கு” இந்தியா வை ஒரு கட்சி இந்துத்துவா சர்வாதிகாரத்தை நிறுவு வதற்குப் போதுமானதாக இருந்திடும்.

அமித்ஷா மேலும் தன்னுடைய உரையின்போது பாஜக மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திடும் என்றும், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு,  ஒடிசா மற்றும் கேரளாவிலும் ஆட்சிக்கு வரும் என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசுவதற்கு நம்பிக்கை அளித்தது எது என்றால், மகாராஷ்டிராவில் ஆட்சிபுரிந்து வந்த மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அங்கே பாஜக கட்டுப்பாட்டின்கீழ் ஓர் அரசாங்கத்தை நிறுவி யிருப்பதேயாகும். பாஜக அல்லாத அரசாங்கத்தைப் பலவீனப் படுத்துவதென்பது மகாராஷ்டிராவில் ஒரு புதிய  உச்சத்திற்கே சென்றது. சட்டமன்ற உறுப்பினர் களுக்கு லஞ்சம் கொடுப்பதோடும், இதற்கான குதிரை பேரத்தில் ஏராளமான அளவில் பணம் பயன்படுத்தப்பட்டதுடனும்  அது சுருங்கிடவில்லை. வழக்கமான இதுபோன்ற முறைகளைக் கடைப்பிடித்ததோடு, சிவ சேனா கட்சியையும், மாநில  அரசாங்கத்தையும் உடைத்திட அரசும் அதன் கீழான  நிறுவனங்களும், ஏஜன்சிகளும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன.

உச்சநீதிமன்றமும்...

மகாராஷ்டிராவில் கவிழ்ப்பு வேலைகள் மும்முர மாக நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில், அதற்கு வசதி செய்து தரும் விதத்தில் உச்சநீதிமன்றமும், கட்சித் தாவும் எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்வ தைத் தடுத்ததன் மூலம் சிவசேனா எம்எல்ஏ-க்கள்  கட்சித் தாவல் செய்வதற்கு வசதி செய்து கொடுத்தது. கட்சித் தாவல் மேற்கொண்ட 16 எம்எல்ஏ-க் களுக்கு துணை சபாநாயகர், ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரி காரணம் கோரும் அறிவிப்பு அனுப்பியபோது அதற்குப் பதில் அளிப்ப தற்கான காலக்கெடுவிற்கு உச்சநீதிமன்றம் தடை  விதித்தது. உச்சநீதிமன்றம் கட்சித் தாவல் மேற்கொண்ட எம்எல்ஏ-க்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான காலத்தை இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீட்டித்தது. இதன்மூலம் ஒட்டுமொத்த நட வடிக்கையும் பயனற்றதாகிவிட்டது. இது, கட்சித்  தாவல் தடைச்சட்டம் கொண்டுவந்ததன் நோக்கத் திற்கே எதிரானதாகப் போய்விட்டது.

ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளராக நடந்த ஆளுநர்

இந்த பாணியில் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டுள்ள நிலையில், ஆளுநரின் பங்கோ மிகவும் அப்பட்டமானமுறையில் இருந்தது.  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சட்டமன்றப் பேரவையின் சபாநாயகருக்கான தேர்தலை மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முழுவதிலும் கடந்த சுமார் 17 மாதங்களாக சில விதிகள் தொடர்பாக ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி அனுமதித்திடாமல் காலங்கடத்தினார்.  எனினும், பாஜக - அதிருப்தி சிவ சேனா எம்எல்ஏக்கள் அரசாங்கம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபின்னர், இரண்டு நாட்களிலேயே சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவதில் ஆளுநர் எந்தப் பிரச்சனையையும் காணவில்லை. மகா விகாஷ் அகாதி அரசாங்கத்தின் காலம் முழுவதுமே ஆளுநர் கிட்டத்தட்ட ஓர் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டா ளர் போன்றே நடந்து கொண்டார்.

அரசு அமைப்புகளின் மூலம் துன்புறுத்தல் - அத்துமீறல்    

 மகா விகாஸ் அகாதி அரசாங்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான ஆயுதம், ஒன்றிய அரசாங்கத்தின் ஸ்தாபனங்களாகும். அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறை அப்பட்டமாகப் பயன்படுத்தப்பட்டது. அமலாக்கத்துறையினர் சிவ சேனை மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் குறித்துப் புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றங்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. தேசியவாதக் காங்கிரசைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், கொடுமையான பணமோசடிக் குற்றச்சாட்டின் (money laundering charges) கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றிய அரசாங்கத்தின் உளவு ஸ்தாபனங்களின் துன்புறுத்தல் நடவடிக்கைகளிலிருந்து தப்ப வேண்டுமானால் பாஜக-வின் பக்கம் தாவுவது என்பதே கட்டாயமான காரணமாக மாறியிருந்தது.

ஆளுநர், ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மற்றும் நீதித்துறை என அரசின் அனைத்துக் கருவி களையும் பயன்படுத்திக்கொண்டதன் மூலமாகத்தான்,  மாநிலங்களைக் கவிழ்க்கும் பாஜக-வின் நடவடிக்கைகளிலிருந்து எந்த மாநிலமும் தப்ப முடியாது என்று அமித்ஷாவைப் பிரகடனம் செய்ய வைத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களை வெற்றிகொள்ள வேண்டு மானால் அதனை அரசியல் நடவடிக்கைகள் மூலம் செய்திட முடியாது, மாறாக அரசின் அனைத்துக் கருவிகளையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே செய்திட முடியும். “ஒரே தேசம், ஒரே கட்சி” என்பதன் மூலம் மட்டுமே முடியும்.

தீய அறிகுறிகள்

பாஜக சகாப்தத்தின் தீய அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன் நடை பெற்ற நிகழ்ச்சிப் போக்குகளிலிந்து பார்க்க முடியும்.  2002 குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடை பெற்ற படுகொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எதிராக நீதி கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள் என்பதற்காகவே டீஸ்டா செதல்வாத், ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியவர்கள் அவர்களின் இத்தகு துணிச்சல் மிக்க நடவடிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முகமது ஜூபைர் சுதந்திரமானமுறையில் இதழியல் நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதும், இவ்வாறான சுதந்திரமான ஊடகச் செயல்பாடுகளின் மீது தாக்குதல் தொடரும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். பாஜக சகாப்தம் என்பது வளைந்துகொடுக்கிற ஊடகத்தையே விரும்புகிறது, அங்கே மாற்றுக் கருத்துக்கள் கூறுவோருக்கு இடம் இல்லை. 

பாஜகவின் பாதுகாவலில் முஸ்லீம் தீவிரவாதிகள்

இந்துத்துவா அமைப்புகள் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகளுக்கு தீ மூட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில், அதன் மூலம் சமூகத்தில் ஒரு நிரந்தரமான பிளவினை உருவாக்கிட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், இப்போது பாஜக முஸ்லீம் தீவிரவாதி களுக்கு அடைக்கலம் கொடுத்துவருவதும் எதிர்பாரா விதத்தில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உதய்பூரில்  தையல்கடைக்காரர் கன்னையா லாலைத் தாக்கியவர்களில் ஒருவனான முகமது ரியாஸ் அக்தாரி, பாஜக சிறுபான்மைப் பிரிவில் ஓர் உறுப்பினர் என்று தெரிய வந்திருக்கிறது.  அதேபோன்று, ஜம்முவில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் தலிப் உசேன் ஷா என்பவன், ஜம்முவில் பாஜகவின் சமூக ஊடகத்தின் தலைவன் என்பதும் இவற்றிலிருந்து பாஜக அனைத்து வகையான தீவிரவாதிகளுக்கும் இல்லமாக இருந்து வருகிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. தீவிரவாத நடவடிக்கைகளை இரு பக்கங்களிலிருந்தும் விசிறிவிடும்போதுதானே மதவெறித் தீ கொழுந்துவிட்டு எரிய முடியும்! இந்துக்களின் நலன்களையே உயர்த்திப்பிடிப்பதாகப் பீற்றிக்கொண்டுவரும் ஒரு கட்சியில் முஸ்லீம் தீவிரவாதிகள்-பயங்கரவாதிகள் இடம்பெற்றிருப்பது என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை போன்றே தோன்றுகிறது.

அமித்ஷாவின் ஒரு புதிய பாஜக சகாப்தத்தின் மதவெறி-எதேச்சதிகார பார்வை என்பது அவருடைய ஆரவாரப் பேச்சின் தொனியிலிருந்து மட்டுமல்ல,  அவருடைய தலைவரான மோடி அப்போது  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழி விலிருந்தும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மோடி உரையாற்றும்போது, ஹைதராபாத் பாக்யாநகர் என மாற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். இது ஏதோ ஒரு நகரின் பெயர் மாற்றத்தை மட்டும் அடையாளப்படுத்திடவில்லை. இது ஒரு புதிய இந்துத்துவா சகாப்தத்தின் குறியீடுமாகும்.

ஜூலை 6, 2022
- தமிழில்: ச.வீரமணி