பட்டியலின மக்களின் கடைகோடியில் இருக்கும் அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 1976- லிருந்து அருந்ததியர் சமூக இயக்கத்தவரால் முன் வைக்கப் பட்டு வந்தது. இச்சூழலில் 2007 - செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று, விருதுநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அருந்ததியர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாடு அருந்ததி யர் இயக்கத்தினருக்கு புது நம்பிக்கை யையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி யது. அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், ஈரோடு,கோவை ஆகிய மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தி அருந்ததியர் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. மேற்கண்ட மாநாடுகளின் தொடர்ச்சியாக சென்னையில் உள் ஒதுக்கீட்டிற்கான எழுச்சிப் பேரணியை அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் அவர்களின் தலைமை யில், அருந்ததியர் இயக்கத் தலைவர் களின் முன்னிலையில் மாபெரும் பேரணியை 2008-ஜூன் 11 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
இப்பேரணியின் நிறைவில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து அருந்ததியர் மக்களின் கோரிக்கைகளை தோழர் என்.வரதராஜன் அவர்களுடன் நானும், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதிய மான் அவர்களும் எடுத்துரைத்தோம்.
அருந்ததியர் மக்களின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களுக்கும் சமூகநீதி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் 12.03.2008 அன்று கலைஞர் அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது.
அதில் புதிய தமிழகம் கட்சியைத் தவிர பிற அனைத்துக் கட்சியினராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் அ.இ.அ.தி.மு.க வின் அன்றைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள், இது அருந்ததியர்களை ஏமாற்றும் வேலை. சட்டப்படி சாத்திய மற்றது என அறிக்கை வெளியிட்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 25.03.2008 அன்று நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களின் தலைமை யில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப் பட்டு ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சுமார் ஒன்பது மாத காலத்திற்குள் தனது ஆய்வறிக்கை களை சமர்ப்பித்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரை செய்து ஆணையம். தீவிர மான தரவுகள் சேகரிக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து எவ்வித சட்டச் சிக்கலும் ஏற்படாத வண்ணம் சிறப்பான ஒரு அறிக்கையை நீதிநாயகம் ஜனார்த்தனம் வழங்கினார். கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் 27.02.2009 அன்று தமிழக சட்டபேரவையில் அன்றைய உள்ளாட்சிதுறை அமைச்சரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டா லின் அவர்கள் உள் ஒதுக்கீடு மசோதா வை தாக்கல் செய்தார். அது விவாதத் திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 29.04. 2009 அன்று சட்ட மன்ற (அருந்ததியர் இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் 2009) நிறைவேறியது. முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தரவுகள் சேகரிக்கப்பட்டு, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி கருத்தறியப்பட்டு, அமைச்சரவை மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஒப்புதல் பெறப்பட்டே இச்சட்டம் நிறைவெறியது.
எனினும் அச்சட்டம் அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ராஜசேகர் சுப்பையா என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் 2011-ல் வழக்குத் தொடர்ந்தார். பின்பு அதில் உயர்நீதிமன்றம் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதே போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களைச் சார்ந்த வர்கள் தொடுத்ததில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை இங்கு விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதி மன்ற வழக்கோடு இதையும் இணைந்து மாறுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கில்தான் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அருந்ததியர் இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
கலைஞர் அவர்களுக்கு இத்தீர்ப்பை சமர்ப்பணம் செய்கிறோம். இதனால் தமிழகத்தில் வாழும் அருந்ததி யர் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சை சட்டத்தின் மீதான நம்பிக்கையை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதற்காக சிறப்பு வழக்கறிஞர் நியமித்து பெரும் முயற்சி எடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ஆதித்தமிழர் கட்சி யின் சார்பில் நன்றிகளை உரித்தாக்கு கிறோம்.
இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு சட்டப் போராட்ட த்தினை தொடர்ந்தவர்கள் தோழர் என்.வரதராஜன் மற்றும் தோழர் பி. சம்பத் ஆகியோர் அன்றிலிருந்து இன்றுவரை மக்கள்மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து அருந்ததியர் உரிமைக்காக களத்தில் நிற்பவர்களாக மார்க்சிஸ்ட் கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமை அடைகிறோம். தோழர். என். வி மறைந்தும் போராடிக் கொண்டிருக் கிறார்.
-கு.ஜக்கையன்
நிறுவனத் தலைவர், ஆதித் தமிழர் கட்சி