articles

img

கென்யா துறைமுகத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியப் போராட்டம்

கென்யா துறைமுகத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியப் போராட்டம்

கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில், தனி யார் துறைமுகத் தொழிலாளர்கள் நியாயமான ஊதியம் மற்றும் சிறந்த பணி நிலைமைகளுக்காக கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். 2023-ல் நிர்வாகம் மற்றும் காண்ட்ராக்டர்களுடன் ஏற்பட்ட கூட்டு பேர ஒப்பந்தப்படி, தினசரி ஊதியம் $6.8-இல் இருந்து $7.1-ஆக உயர்த்தப்பட்டது. எனி னும், தொழிலாளர்கள் இன்னும் கடுமையான சுரண்டலுக்கு உள் ளாகிறார்கள். கப்பலுக்கு வழிகாட்டு தல், சரக்கு ஏற்றி இறக்குதல் போன்ற பல பணிகளை மேற் கொள்ளும் இவர்கள், மோசமான பணி நிலைமைகள் மற்றும் காத்திருக்கும் நேரத்திற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.   ஜனவரி கடைசி வாரத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். இதற்கு பதிலடியாக, போலீஸ் மற்றும் நிர்வாகத்தின் குண்டர்கள் கடுமையான தாக்கு தல்களை நடத்தினர். கென்யாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு மற்றும் நிர்வாகத்தின் அடக்கு முறைகளை கடுமையாக கண்டி த்து வலுவான அறிக்கை வெளி யிட்டுள்ளது.  

லண்டனில் லத்தீன் அமெரிக்க மாநாடு:

 சர்வதேச ஒருமைப்பாட்டின் அழைப்பு  

லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் லத்தீன் அமெ ரிக்க மாநாடு, இந்த ஆண்டு சர்வ தேச ஒருமைப்பாடு மற்றும் சோசலிச மாற்றத்தின் அவசியம் குறித்து விவா தித்தது. அயர்லாந்தின் சின் பெயின் கட்சியின் MP கிரிஸ் ஹெஸ்ஸர்டு, இங்கிலாந்தின் MP ஜெர்மி கோர் பைன், வெனிசுலா தூதுவர் மற்றும் சேகுவாராவின் பேத்தி டாக்டர் அலெய்தா குவாரா ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர்.   மாநாட்டில், வடக்கு உலக நாடுக ளின் செல்வாக்கு மற்றும் தெற்கு நாடு களின் சுரண்டல் பற்றி விரிவாக விவா திக்கப்பட்டது. கிரிஸ் ஹெஸ்ஸர்டு குறிப்பிட்டதாவது, “வடக்கு உலகின் 1% பணக்காரர்கள், தெற்கு நாடுகளில் இருந்து ஒரு மணி நேரத்தில் $3 கோடி டாலரை பறிக்கிறார்கள். முத லாளித்துவம் பேரழிவுகள், யுத்தங் கள் மற்றும் வறுமையை மட்டுமே ஊக்குவிக்கிறது. சோசலிச மாற்றமே இதற்கு தீர்வு.”

 டிரம்ப்பின் புலம் பெயர்ந்தோர் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு

  அமெரிக்காவில், டிரம்ப்பின் புலம் பெயர்ந்தோர் நாடு கடத்தல் நடவடிக்கை களுக்கு எதிராக, ஆயிரக்கணக்கானோர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட னர். நியூயார்க் மாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், குடியேறியவர்களின் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் முக்கிய பங்கு வகித்தது.   ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டதாவது, “அமெரிக்காவில் குடியேறியவர்கள் வீட்டு நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் வேலை யின்மைக்கு காரணம் அல்ல. எங்கள் எதிரி வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பில்லியனர்கள். டிரம்ப் ஒரு கோமாளி. அவர் பில்லியனர்களின் சொந்தடையாக செயல்படுகிறார்.”

அமெரிக்காவில் கருப்பு இன  தொழிலாளர்களின் ஒற்றுமைப் போராட்டம்  

அமெரிக்காவின் தெற்கு பகுதியில், வேலை உரிமை சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இச்சட்டம், தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமையை பறிப்பதாக AFL-CIO தொழிற்சங்கம் குற்றம் சாட்டுகிறது.  2023-ல், தெற்கு மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் முன்னேறி வருகிறது. டென்னஸ்ஸியில் உள்ள போக்ஸ் வாகன் ஃபேக்டரி தொழிலாளர்கள், யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் சங்கத்தில் இணைந்தனர். இது தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

ஈக்குவடார் ஜனாதிபதி தேர்தல்:  

முற்போக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு   ஈக்குவடாரில் பிப்ரவரி 9-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி டேனியல் ரோபோ 44.29% வாக்குகள் பெற்றார். முற்போக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் லூயிசா கோன்சாலெஸ் 43.85% வாக்குகள் பெற்றார். எவருக்கும் 50% வாக்குகள் கிடைக்காததால், ஏப்ரல் 13-ல் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். முற்போக்கு வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கேமரூன் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின்  வேலை நிறுத்தம்  

கேமரூனில் உள்ள சர்க்கரை ஆலையில், தொழிலாளர்கள் பணி நிலைமை கள் மற்றும் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் நடத்தினர். 2022-23-ல் 8 மாதங்களில், 100 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.   பிப்ரவரி 4-ல், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பிப்ரவரி 7-ல் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. 

ஜோர்டான் மீது அமெரிக்காவின் அழுத்தம்:

அல்-தமிமி வழக்கு   ஜோர்டான் நாட்டின் பாலஸ்தீன பிரஜை அலாம் அல்-தமிமி மீது அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. 2017-ல், அல்-தமிமியை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு ஜோர்டான் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும், ஜோர்டான் நீதிமன்றம், அல்-தமிமியை நாடு கடத்த முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.   2021-ல் இன்டெர்போல் கைதுவாரண்டை கைவிட்டாலும், அமெரிக்கா இன்னும் ஜோர்டான் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இது ஜோர்டான் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.