articles

img

திறப்புவிழா கண்டு 16 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம்!

சென்னையிலிருந்து 200 கிமீ தொலைவில் நெல்லிக்குப்பம் நகரம்  உள்ளது. இந்நகருக்கு அருகாமையில் வடலூர் சத்தியஞானசபை, பிச்சாவரம், சிதம்பரம், நெய்வேலி அனல்மின் நிலையம் மற்றும் புதுச்சேரி ஆகிய சுற்றுலா நகரங்கள் அமைந்துள்ளது. பண்ருட்டிக்கும் கடலூருக்கும் மத்தி யில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம்  நகரம். கடலூர் மாவட்டத்தில், நெல்லிக் குப்பம் நகராட்சி 30 வார்டுகளை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சி யாக விளங்குகிறது. 

நெல்லிக்குப்பம் மிகப் பழமையான நகராட்சியாக இருந்தாலும், பேருந்து நிறுத்தம் மட்டுமே இருந்தது.  இந்த நிலையில் இந்த  பகுதிக்கு பேருந்து நிலையம் அமைக்க  வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை  விடுத்தனர். அப்போது நெல்லிக்குப்பம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் முயற்சியின் பேரில்,  பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் ரூ. 105.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு திமுக ஆட்சி காலத்தில் தற் போதைய முதலமைச்சர் மு. க.ஸ்டா லின் துணை முதல்வராக இருந்த போது  2008 நவம்பர் 7ஆம் தேதி அவரால்  திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் திறப்பு விழா நடை பெற்றது முதலே நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்துகள் செல்லாமல் பழைய நிலையிலே சாலை மார்க்கமாக சென்று  பேருந்து நிலையத்தை புறக்கணித்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலை யத்திற்குள் கட்டப்பட்ட ஏராளமான கடைகளும் வெறிச்சோடி காணப்படு கின்றன.

தற்போது இந்த பேருந்து  நிலையம் தனியார் கனரக வாகனங் கள் நிறுத்துமிடமாகவும், மண் மற்றும் கட்டுமான பொருட்கள் வைக்கும் இடமாகவும் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறும் இடமாகவும் மாறிவிட்டது.  பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரையில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்கள் மட்டும் அதிகாரி களின் கடும் முயற்சியால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து சென்று வந்த நிலையில் படிப்படியாக பேருந்து கள் செல்லாமல் பழையபடி பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும் நிலை உருவானது.  அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக அந்த  பேருந்து நிலையத்தை நகராட்சி  நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவே யில்லை. பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவருக்கு அருகிலேயே நகராட்சி அலுவலகம் இருந்தும் இதனை கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் சிபிஎம் நகர செயலாளர் தே. வெங்கடே சன் கூறும்போது, மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட நகராட்சி பேருந்து நிலை யம் பேருந்து நிலையமாக செயல்படு வதற்கு வட்டார போக்குவரத்து துறை,  காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நகராட்சி முன் முயற்சி எடுத்து பேருந்து  நிலையத்தின் கடைகளை புதுப்பித்து டெண்டர் விட்டு மக்கள் வந்து செல்லக் கூடிய அளவிற்கு உருவாக்க வேண்டும். சில தனி நபர்களின் கட்டுப் பாட்டில் இருந்து பேருந்து நிலையத்தை  மீட்க வேண்டும் என்பதே நெல்லிக் குப்பம் பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என்றார். 

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லும் வழி வெளியே செல்லும் வழியில் உள்ள கட்டிடங்களை  அகற்றி பேருந்துகள் சிரமம் இன்றி  எளிதாக சென்று வர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேருந்து நிலை யத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொகுப்பு: வ.சிவபாலன்