articles

img

வளர்ச்சிக்குத் திட்டமிட்ட தொழில் முனைவோர் ஆண்டு - பினராயி விஜயன் கேரள முதலமைச்சர்

கேரள வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத மிகப்பெரிய முன்னேற்றம் தொழில் முனைவோர் ஆண்டுத் திட்டத்தின் மூலம் நமது தொழில்-வாணிபத் துறைகளில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகள், ஏஜென்சிகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது மூலம் தான் தொழில் முனைவோர்களைக் கண்டறிவதற்கான திட்டம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது.

நீண்டகாலத்திற்கான கேரளத்தின் வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டுள்ள திட்டங்கள்தான் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றது. மிகச்சரியாகக் கூறினால் அடுத்த 25 ஆண்டுகளில் கேரளத்தின் வாழ்க்கைத்தரம் வளர்ச்சியடைந்த நடுத்தரவருமான நாடுகளுக்குச் சமமான நிலைக்கு உயர்த்துவதற்கு முயற்சிக்கிறோம். அதற்காக திறன்சார்ந்த பயிற்சிகள், தொழில் மறுசீரமைப்பு, விவசாய நவீனமயமாக்கல் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்துகிற செயல் திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்கிறது. இதில் தொழில்துறை சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலத்தின் தொழில் சூழலை உருவாக்கத் தேவையான முறையில் உற்சாகப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது தொழில் முனைவோர்களுக்கு அனுமதி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட விதிகளிலும் சட்டங்களிலும் காலத்திற்கேற்றவாறு செய்யப்பட்ட மாற்றங்களாகும்.

கேரளத்தின் தொழில் முனைவுகளை உற்சாகப்படுத்துவதற்கும் தொழில்கள் துவங்குவதற்குமான செயல்பாடுகளை செழுமைப்படுத்துவதற்காக ஏழு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 10 துணைச் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொழில் முனைவுகளுக்கு தேவையான அனுமதிகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு உதவுகிற ஒற்றைச்சாளர முறையான கே-ஸ்விஃப்ட் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் 21 துறைகளின் 90 வரையிலான அனுமதிகள் தற்போது வழங்கப்படவுள்ளன. சிறு-குறு தொழில் முனைவுகளின் செயல்பாடுகளை சிறப்புறச் செய்வதற்கான சட்டவடிவம் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 50 கோடி ரூபாய்க்கு குறைவான மூலதனமுள்ள தொழில்முனைவுகளுக்கு மூன்று வருடத்திற்கான அனுமதி கிடைத்ததாகக் கணக்கிட்டு செயல்படுவதற்கான சட்டத்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் மேலாக புகார்களுக்கத் தீர்வுகாணும் ஏற்பாடுகளை சக்திப்படுத்துவதற்கும் பரிசோதனைகளை சுமூகமான முறையில் செய்வதற்குமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. 

நடைமுறைச் சாத்தியமானது 2016 முதல்வரையிலான கணக்குகளைப் பார்த்தோமானால் KSIDC மூலம் 242 தொழில்முனைவுகளும் கின்ஃபித் திட்டத்தின் மூலம்721 தொழில் முனைவுகளும் நடைமுறைச் சாத்தியமாகியுள்ளன. அதன் மூலம் பல்வேறு தொழில் முனைவுளுக்கு4,653 கோடி ரூபாய் பொருளாதார உதவி வழங்கி, 49,594 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. KFCE- யின் மூலம் ,5,405 தொழில் முனைவுகளுக்கு 12,048 கோடி ரூபாய் பொருளாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் மாற்றம் மாநிலம் முழுவதும் உள்ள காட்சியாகும். புதிய தொழில்கள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்கியதும் அதன் பலனாக புதிதாக தொழில்கள் துவங்கப்பட்டதையெல்லாம் கணக்கில்கொண்டு தொழில் நட்புறவுத் தரவரிசைப் பட்டியலில் கேரளம் 15வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

முந்தைய அரசின் காலத்தில் கேரளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது 69,138 சிறு மற்றும் நடுத்தர தொழில்களாகும். அதன் மூலம் கிடைத்த முதலீடு என்பது 6,448 கோடி ரூபாயாகும்.2,45,369 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசின் மூன்றாண்டுகளின் கணக்குகளை ஆராய்ந்தால் ஒரு வருடத்தில் 17,855 தொழில் முனைவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 1,736 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. 64,541 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 86,993 தொழில் முனைவுள். 8,184 கோடி ரூபாய் முதலீடு. 3,09,910 வேலைவாய்ப்புகள் என்று 2016 முதல் 2021 வரையிலான 6 ஆண்டுகளில் கேரளத்தில் ஏற்பட்டுள்ளது. இவைவெயல்லாம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். தனியார் முதலீடுகளை மட்டுமல்லாமல் பொதுத் தொழில் முனைவுகளையும் ஊக்கப்படுத்துகிறோம். 2021-22 ஆம் ஆண்டில் நமது 21 பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கின. தொழில் துறையின் கீழ் மொத்தமுள்ள 41 பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த வரவு செலவு 3,892 கோடி ரூபாய் மற்றும் செயல்பாட்டு லாபம்386.04 கோடி ரூபாயும் ஆகும்.2020-21 பொருளாதார ஆண்டைவிட வரவு-செலவில் 588 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபத்தில் 339 கோடி ரூபாய் அதிகரிக்கவும் செய்தது. நஷ்டத்தில் இயங்குகிறது எனக்கூறி ஒன்றிய அரசு விற்பனைக்கு அறிவித்த பெல், இஎம்எல். ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் ஆகியவற்றையெல்லாம் கேரள அரசு ஏற்றுக் கொண்டு நவீனப்படுத்தியது. அவை தற்போது கெல் இஎம்எல், கேபிபிஎல் என்ற பெயர்களில் செயல்பட்டுவருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் கேரளப் பொதுத் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடும் செயல்களைக் குறித்தான தெளிவான சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். அதன் ஒரு பகுதியாக பெரும் முன்னேற்றம் நமது தொழில் துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

வரலாற்றுச் சாதனை

இத்தகைய செயல்பாடு களிலிருந்தெல்லாம் நாம் உத்வேகம் பெற்று தொழில் முனைவு ஆண்டு என்ற திட்டத்தை உருவாக்கினோம். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தொழில் முனைவுகள் துவங்குவதற்குத்தான் நாம் லட்சியமிட்டிருந்தோம். ஆனால் முதல் எட்டு மாதத்திலேயே ஒரு லட்சத்தை நெருங்குவதற்கு நம்மால் முடிந்தது. 2023 பிப்ரவரி மாதம் வரையிலான கணக்கின்படி 1,34,358 தொழில் முனைவுகள் இந்தத் திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளன.  அவற்றின் மூலம் 8,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈட்டவும், 2,88,000 வேலைவாய்ப்புகள் வழங்கவும் நம்மால் முடிந்தது. அதாவது, கேரள வரலாற்றில் நடைபெற்றிராத வகையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தொழில்முனைவு ஆண்டுத் திட்டத்தின் மூலம் நமது தொழில்-வாணிபத் துறைகள்அடைந்துள்ளன. கேரள வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத மிகப்பெரிய முன்னேற்றமாகும் தொழில் முனைவோர் ஆண்டுத் திட்டத்தின் மூலம் நமது தொழில்-வாணிபத் துறைகளில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகள், ஏஜென்சிகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததுதான் தொழில் முனைவோர்களைக் கண்டறிவதற்கான திட்டம் இவ்வளவு பெரிய வெற்றிப் பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமான தொழில் முனைவுகள் ஆரம்பிக்கப்பட்டன. எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றன. மாநிலத்தின் பொதுவான முன்னேற்றத்தை முன்னிறுத்தி இந்தத் தொழில் முனைவு முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த நாம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

’ஒரு உள்ளாட்சி நிறுவனம், ஒரு உற்பத்தி’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் அத்தகைய உற்பத்திப் பொருட்களின் மதிப்பை உயர்த்துவதற்கு ஊக்கம்கொடுத்து  மேலும் அதிகமான தொழில் முனைவுகளைத் துவங்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் உதவி மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வாரு உள்ளாட்சி நிறுவனத்தின் கீழும் இந்தத் திட்டத்திற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2022 மே-ஜூன் மாதங்களில் அனைத்து உள்ளாட்சி நிறுவனங்களிலும் நடத்திய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்தது. வட்டி குறைப்புடன் கூடிய கடன்கள் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடைமுறைப்படுத்திய கடன் மேளாக்களின் ஒரு பகுதியாக கிடைக்கப்பெற்ற 5,556 விண்ணப்பங்களுக்கு 108 கோடி ரூபாய் கடன் அனுமதிக்கப்பட்டது.

இத்தகைய பொருளாதார உதவிகள் கிடைக்கச் செய்வதற்கும் மேலாக சில சிறப்புத் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பான இத்தகைய நடவடிக்கைகளின் பலனாகத்தான் நாம் எதிர்பார்த்ததற்கும் முன்பாகவே லட்சியத்தை அடைவதற்கு நம்மால் முடிந்தது. தொழில் முனைவோர் ஆண்டு என்ற கேரளத்தின் முன்முயற்சியை சிறந்த நடைமுறை என்று ஒன்றிய அரசே சிறப்பித்துள்ளது. நமது மாநிலம் தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலமல்ல என்ற கேரள எதிர்ப்புக்காரர்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்குரிய பதிலடிதான் தொழில் முனைவோர் ஆண்டுத் திட்டத்தின் வெற்றி மற்றும் அதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம். நாட்டிலேயே முதல் தொழில்நுட்ப பூங்காவிற்கு துவக்கம் குறித்த மாநிலமாகும் கேரளம். மேலும் முதல்  மின்னணு உற்பத்தியைத் துவக்கிய மாநிலமும் கேரளாதான். உலகில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒலியோரெஸினுகளின் 40 முதல் 50 சதவீதம் வரை கேரளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.  நமது சாதனைகளைப் பாதுகாப்பதற்கும், அவை தொடர்வதை உறுதிப்படுத்திடவும் நாம் கவனம் செலுத்திட வேண்டும். அதற்கு உதவுகிற செயல்பாடுகள் மூலம் மாநிலத்தின் முழுமையான, நிரந்தரமான வளர்ச்சியை சாத்தியமாக்கி ஒரு புதிய கேரளத்தைப் படைப்பதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது.