articles

img

மேற்கு ஆப்பிரிக்கா : இராணுவப் புரட்சிகள் தொடரும்? - பேரா.விஜய் பிரசாத்

19ஆம் நூற்றாண்டின் மத்தியிலி ருந்து(1850களில்) பிரான்ஸ் காலனியாதிக்கம் ஆப்பிரிக்கா வின் வடக்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிக ளில் பாய்ச்சல் வேகத்தில் பரவியது. 1960-ஆம் ஆண்டில், மேற்கு ஆப்பிரிக்கா பகுதி யில் மட்டும் 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைப் போல் 8 மடங்கு, பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இரு ந்தது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் செனகல் தொடங்கி, சாட் வரை வெற்றி பெற்று அந்த நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், நிதி மற்றும் பணம் ஆகியவற்றை பிரான்சே கையாண்டது. ஆப்பிரிக்க நிதி சமூகம், பிரஞ்சு மொழியில் சுருக்கமாக, சிஎப்ஏ-(CFA) என்பதை பிரான்ஸ் உருவாக்கியிருந்தது. 

இவை முன்னாள் பிரான்ஸ் காலனிகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு (நமது காமன்வெல்த் போல) ஆகும். இதன் மூலம் பிரான்ஸ், தனது பரிவர்த்தனைப் பண மான ‘சிஎப்ஏ பிராங்க்’ என்பதை தொடர்ந்து பராமரித்து வந்தது மட்டுமல்லாமல், புதிதாக சுதந்திரம் அடைந்த நாடு களை, அவர்களின் அன்னியச் செலாவணி கையிருப்பு களில் குறைந்தது பாதியளவை பிரான்ஸ் தேசிய வங்கியி லேயே (பேங்க் ஆப் பிரான்ஸ்) வைக்குமாறு நிர்ப்பந்தப் படுத்தியது. நிதிக் கையிருப்பை தனது கட்டுப்பாட்டில் வைத் தது மட்டுமல்ல; புதிய திட்டங்கள், முயற்சிகள் அல்லது நடை முறைகள் எதுவானாலும், ஆப்பிரிக்க நாடுகளின் முடிவுக ளில் பிரான்ஸ் தலையீடு இருக்கும். அதை எதிர்த்து நின் றால்தான் புர்கினா பாசோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சி கரத் தலைவர் தாமஸ் சங்காராவை 1987-ல் பிரான்ஸ் ஏகாதி பத்தியம் படுகொலை செய்தது). பிரான்ஸ் நவீன காலனியா திக்கத்தின் அமைப்புகளை தொடர்ந்து பராமரித்து வந்த தால், அது பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அந்த பகுதியின் வளங்களை அரித்து எடுத்து செல்வதற்கு வழிவகுத்தது (உதாரணமாக நைஜர் நாட்டின் யுரேனியம், பிரான்ஸ் நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றிலொரு பகுதியை பூர்த்தி செய்கிறது) அதே நேரத்தில் அந்த நாடுகளின் நம்பிக்கைக ளை சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) மூலம் கடனுக்கான சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நசுக்கியது. 

பிரான்சுக்கு எதிரான அதிருப்தி

பிரான்சுக்கு எதிராக புழுங்கிக் கொண்டிருந்த இந்த அதிருப்தி 2011ல் லிபியாவை நேட்டோ படையுடன் சின்னா பின்னமாக்கி, சாஹேல் (மேற்கு ஆப்பரிக்கா) பகுதியில் ஸ்திர மற்ற நிலையை உருவாக்கியவுடன் மேலும் அதிகரித்தது. பிரிவினைவாதக் குழுக்கள், சஹாரா (பாலைவனம்) ஊடாக செயல்பட்ட கடத்தல்காரர்கள் மற்றும் அல்-கொய்தா வின் கிளை அமைப்புகள் ஆகியன ஒன்று கலந்து, அந்த சக்திகள் சஹாராவின் தெற்கு நோக்கி தங்கள் தளத்தை விரிவுபடுத்தி, மாலி நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிக ளையும், புர்கினா பாசோவின் பெரும்பகுதிகளையும், நைஜரின் பல பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. பிரான்ஸ், இவைகளை கட்டுப்படுத்து வது என்ற பெயரில் இராணுவரீதியில், ‘‘ஆபரேஷன் பக்யன்’’ (2013) தொடங்கியது. மேலும் நவீன காலனி யாதிக்க கட்டமைப்பான ஜி-5 சாஹேல் திட்டம் என்பதை தொடங்கியது. இவற்றிற்குப்  பிறகு பிரெஞ்சு இராணுவத்தின் வன்முறைகள் அதிக ரிக்கத் தொடங்கின. குறிப்பாக இந்த பிராந்தி யத்தில் உள்ள மக்களுக்கு எதிராக.  ஐஎம்எப் கடன், அதைத் தொடர்ந்த சிக்கன நடவடிக்கை கள், மேற்காசியாவில் மேற்கத்திய நாடுகளின் யுத்தங்கள், லிபியாவை அழித்தது போன்றவை  இந்த பிராந்தியத்தில் மக்களை புலம் பெய ரவைத்தன. இந்த புலம் பெயர்தல்களுக்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி ஆராயா மல், ஐரோப்பா அதன் தெற்கு எல்லைச் சுவரை சாஹேல் பகுதியில் கட்டுவதற்கு இராணுவ மற்றும் அன்னிய கொள்கை நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டது, அதில் சட்டவிரோதமான வேவு பார்க்கும் தொழில்நுட்பங்களை ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் இருந்த நவீன கால னியாதிக்க அரசுகள் மூலம் மேற்கொண்டன. இந்தப் பின்ன ணியில் தான் உத்வேக கோஷமான ‘‘பிரான்சே வெளியேறு (லா பான்ஸ் டிகேஜ்)’’ என்ற முழக்கம் தீவிரமடைந்துள்ளது. 

இது எந்தளவுக்கு மக்கள் கொந்தளிப்பாக உள்ளார்கள் என்பதையும், சாஹேல் பகுதியின் குரல்வளையை நெருக் கும் நவீன காலனியாதிக்கக் கட்டமைப்புகளுக்கு எதிரான மக்கள் வெறுப்பையும் சுட்டிக் காட்டுகிறது. 

அடிக்கடி இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஏன்?

கடந்த 30 ஆண்டுகளில், சாஹேல் பகுதியில் உள்ள நாடுகளில் அரசியல் மிகவும் மோசமாக வறண்டு போ யுள்ளது. கடந்த கால வரலாறு கொண்ட பல கட்சிகள் அவை. தேசிய சுதந்திர இயக்கங்களை நடத்தியவை. ஏன் சோசலிச இயக்கங்களும் உள்ளன. இவற்றில் பல ஜனநா யக அமைப்புகள் அந்த நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தி னருக்கான பிரதிநிதிகள் என்ற வகையில் உருக்குலைந்து, அதன் பிறகு மேற்கத்திய நாடுகளின் நோக்கங்களை நிறை வேற்றும் கருவிகளாக மாறிவிட்டன. இந்த சமயத்தில் அல்- கொய்தா-கடத்தல்காரர்களின் நுழைவு, அந்த பிராந்திய செல்வந்தர்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் அரசியல் சூழலை மேலும் கசக்கிப் பிழிய வாய்ப்பு கொடுத்து, ஏற்க னவே கொஞ்ச நஞ்சம் இருக்கும் தொழிற்சங்க உரிமைக ளையும், ஏற்கனவே நன்கு அறியப்பட்ட அரசியல் கட்சிக ளில் இடதுசாரி எண்ணம் கொண்டவர்களை அப்புறப்படுத் தவும் பயன்பட்டது. கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென் றால், ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தீவிரமான வலதுசாரிகளோ அல்லது நடுநிலை வலதுசாரிகளோ அல்ல; அவர்களின் அரசியல் போக்கு எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு உண்மையில், பாரீஸ் மற்றும் வாஷிங்டன் விருப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட சுதந்திரம் கிடையாது. அவர்கள் என்னவாக மாறிவிட்டார்கள் என்றால் மக்களிடம் புழக் கத்தில் உள்ள வார்த்தையைப் பயன்படுத்தினால் ‘மேற்கு நாடுகளின் கைக்கூலி’களாகிவிட்டனர். 

எந்த ஒரு நம்பிக்கையான அரசியல் அல்லது ஜனநாய கக் கருவிகள் இல்லாத நிலையில், கைவிடப்பட்ட சாஹேல் நாடுகளின் கிராமப்புற மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகள் நகரமயமாக்கப்பட்ட இராணுவத்தில் பணியாற்றும் தங்களின் பிள்ளைகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். புர்கினா பாசோ வில் தற்போது இராணுவ ஆட்சியின் தலைவராக உள்ள  கேப்டன் இப்ரஹிம் தரோர் (1988ல் பிறந்தவர்), கிராமப்புற மாநிலமான மவுஹன் பகுதியில் வளர்ந்தவர், அவர் மண்ணியல் படித்தவர். மாலி நாட்டின் இராணுவ ஆட்சி யின் தலைவர் அசிமி கொய்தா (1983-ல் பிறந்தவர்), அவர் கால்நடைகள் சந்தை நகரமான-இராணுவத்திற்கு அதிகம் செல்லாத- கத்தி நகரைச் சேர்ந்தவர். 

இவர்கள் நாம் மேலே தெரிவித்த வர்க்கங்களோடு பொது வாக பொருந்துவர். அவர்களின் சமூகங்கள் ஐஎம்எப்பின் கடும் சிக்கன நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்கள். அவர்களின் வளங்கள் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் மேற் கத்திய இராணுவங்கள் இந்த நாடுகளில் இருப்பதற்கும் இவர்கள் ‘கப்பம்’ கட்ட வேண்டியிருந்தது. தங்களுக்காக உண்மையாக பேசக்கூடிய எந்த ஒரு அரசியல் மேடையும் பறிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்த இளம் இராணுவ வீரர்களின் தேசப்பற்று மிக்க நோக்கங்களின் பின்னாள் திரண்டனர். அவர்களே மிகப்  பெரிய வெகுஜன இயக்கங்களால் உந்தப்பட்டனர். தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் போன்றவை கை  கோர்த்தன. ஆகவேதான், நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அந்த நாட்டின் தலைநக ரான நியாமே தொடங்கி மிகச்சிறிய, தொலைதூரத்தில் லிபியா எல்லையில் உள்ள சிறு நகரங்கள் வரை இந்த இராணுவ ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் திரண்டனர். இந்த இளைஞர்கள் அதிகாரத்திற்கு வரும்முன் நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் எதுவுமின்றி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு படுகொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இளம் புரட்சியாளர்கள் தாமஸ் சங்காரா அளவிற்கு மக்களிடம் அங்கீகாரம் உள்ளது. கேப்டன் இப்ரஹிம், உதாரணமாக, தாமஸ் சங்காரா போன்று தனது தொப்பியில் ஒரு சிவப்பு இறகுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். தாமஸ் சங்காரா போன்று இடதுசாரிகள் போன்று வெளிப்படையாகப் பேசுகிறார்; அதிலும் சங்காரா பேசும் தொனியில் குரலை மாற்றிப் பேசுகிறார். 

இராணுவ தலையீடுக்கு எதிர்ப்பு

இராணுவம் நைஜரில் ஆட்சியைப் பிடித்ததற்கு மேற்கிலி ருந்து உடனடியாக கண்டனம் வெளியிடப்பட்டது(குறிப்பாக பிரான்சிலிருந்து). நைஜரின் புதிய அரசு, அது ஒரு ராணு வம் அல்லாத நபரால் தலைமை தாங்கப்படுகிறது (முன் னாள் நிதி அமைச்சர் அலி மகமன் லேமைன் ஜீன்). அவர் பிரான்ஸ் நாட்டு துருப்புகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார். மேலும், பிரான்சுக்கு யுரேனியம் ஏற்றுமதி க்கு தடை விதித்தார். பிரான்சோ அல்லது அமெரிக்காவோ நேரடியாக தங்கள் இராணுவத்தைக் கொண்டு இதில் தலை யிட விரும்பவில்லை. 2021-ல் பிரான்ஸ் மற்றும் அமெ ரிக்கா தங்களின் தனியார் நிறுவனங்களான டோட்டல் எனர்ஜி (பிரான்ஸ்) மற்றும் எக்சான் மொபில் (அமெரிக்கா) ஆகியவற்றை மொசாம்பிக்கில் பாதுகாக்க தங்கள் இராணு வத்தை அனுப்பாமல், ருவாண்டா இராணுவத்தை தலையிட வைத்தன. நைஜர் நாட்டில் மேற்கத்திய நாடுகள் முதலில், ‘ஈக்கோவாஸ்’ எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின்  பொருளாதாரக் கூட்டமைப்பை இராணுவ தலையீடு செய்யு மாறு நிர்ப்பந்தித்தன. ஆனால், மிகப் பெரிய வெகுஜன எதிர்ப்புகள் அதிலும், ஈக்கோவாஸ் உறுப்பு நாடுகளிலேயே எழுந்தன.  அதில் தொழிற்சங்கங்களின் கண்டனங்களும், மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பும் அடங்கும், இந்த எதிர்ப்பு அமை திப்படையின்’ கைகளை கட்டிப் போட்டது. ஆகஸ்ட் 19 தேதி ‘ஈக்கோவாஸ்’ பதவி நீக்கப்பட்ட அதிபரையும், புதிய அரசின் தலைவர்களையும் பார்த்து பேச ஒரு குழுவை அனுப்பி யது.  ஆரம்பத்தில் இராணுவம் ஆட்சியைப் பிடித்ததிற்கு கண் டனம் தெரிவித்த ஆப்பிரிக்க ஒன்றியம், அந்த ஒன்றி யத்தின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நைஜரை சஸ்பெண்ட் செய்தது. ஆனால், சமீபத்தில் நைஜரில் இரா ணுவ தலையீடு எதுவும் நடைபெறக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இதேவேளையில், ஆனால் கானா தனது துருப்புகளை நைஜருக்கு அனுப்பலாம் என்பது போன்ற வதந்திகள் பரவின. (கானா நாட்டின் பிரஸ்பைடிரியன் தேவாலயம் நைஜரில் இராணுவ தலையீட்டிற்கு எதிராக கடு மையாக எச்சரித்தது. தொழிற்சங்கங்கள் இராணுவ தலை யீடு நடக்கலாம் என்பதற்கு எதிராக கடுமையாக கண்டனங் களை முழங்கின. 

இது கடைசி அல்ல!

இதற்கிடையில், புர்கினா பாசோ மற்றும் மாலி நாடு கள் தங்கள் நாட்டு துருப்புகளை நைஜர் நாட்டிற்கு அனுப்பி யுள்ளன. நைஜர் நாட்டின் மீதான எந்த ஒரு இராணுவ தலை யீடும் தங்கள் நாடுகளுக்கும் எதிரான தலையீடாக பார்க்கப் படும் என்று அறிவித்துள்ளன. புர்கினா பாசோ, மாலி, கினி,  நைஜர் ஆகிய நாடுகளில் சுமார் 8.5 கோடி மக்கள் வாழ்கின் றனர், இந்த நாடுகளை இணைத்து புதிய கூட்டமைப்பு உரு வாக்க தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. செனகலில் இருந்து சாட் வரையிலும் உள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமைகளைப் பார்க்கும் போது ஆப்பிரிக்க கண்டத்தின் இந்த பகுதியில் நைஜரில் நடந்தது கடைசி இராணுவ புரட்சியாக இருக்காது என்று தெரிகிறது. மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு போன்ற அரசியல் மேடைகளின் வளர்ச்சி இந்த பகுதியில் அரசியல் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும். 

தமிழில்: க.ஆனந்தன்