articles

img

வேலை தேடும் இளைஞர்களே.... - க.கனகராஜ்,

இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது சுயசார்பை உறு திப்படுத்துவதற்காக பல் வேறு ஏற்பாடுகளை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செய்தன. அவற் றில் பொதுத்துறை மற்றும் சிறு, குறு தொழில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய மறு அடமானம் (சப் - பிரைம்) நெருக் கடி உலக நாடுகள் பலவற்றில் பொரு ளாதாரத்தை ஒரு அசைப்பு அசைத்து பார்த்தது. சில நாடுகளின் அரசு காசோலைகளே பணமின்றி திரும்பும் நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு, ஆலை மூடல் என்று சமூகம் மொத் தத்தையும் ஆட்டிப் படைத்தபோது இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி சமாளித் தன. இத்தனைக்கும் உலகில் முதல் மற்றும் இரண்டாவது மக்கள் அதிகம் உள்ள நாடுகள் சீனாவும், இந்தியா வும். சீனா அந்த நெருக்கடியிலி ருந்து தப்பித்தற்கும் பெருமளவு பாதிக் கப்படாமல் இருந்ததற்கும் தங்கள் சிறு, குறு நிறுவனங்கள் தான் காரணம் என்று அதிகாரப்பூர்வமாகவே அறி வித்தார்கள். இந்திய பிரதமராக அப்போதி ருந்த மன்மோகன்சிங், இந்தியா 2008 ஆம் ஆண்டுக்கு பிந்தைய நெருக்கடி யில் மேற்கத்திய நாடுகள் போல பாதிக் கப்படாமல் இருந்ததற்கு இந்தியா வின் அடித்தளம் தான் காரணம் என் றும் குறிப்பிட்டிருந்தார். அவர் அடித் தளம் என்று குறிப்பிட்டது பொதுத் துறையையும், சிறுகுறு நடுத்தர தொழில்களையும்தான். இத்தனைக் கும் நவீன தாராளமயக் கொள்கை யின் ஒரு பகுதியான தனியார் மயமாக் கலை துவக்கி வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் மன்மோகன் சிங்.

தற்போது, இந்தியா கடும் நெருக் கடியை சந்தித்துக் கொண்டிருக்கி றது. இந்த நெருக்கடி இன்னும் தீவிரமாகும் என்று சொல்லப்படு கிறது. நெருக்கடி என்றாலே அதன் சுமை முழுவதையும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தலையில் கட்டு வது தான் முதலாளித்துவத்தின் மிக இயல்பான, மிக எளிதான நடை முறையாகும். இந்தியா எதிர்கொள் ளும் முக்கிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது வேலையின்மை ஆகும். மோடி ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக, தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உரு வாக்குவேன் என சவடால் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, அதைப் பற்றி பேசுவதையே மறந்துவிட்டார். உலகில் இளைஞர்களின் நாடாக இந்தியா இருப்பது இந்த நூற்றாண் டில் இந்தியாவிற்கு மிகப்பெரும் வலிமை என்று பேசப்பட்டது. ஆனால், அந்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் இந்த அரசாங்கம் முற்றி லும் தவறிவிட்டது. வேலை வாய்ப்பு என்றாலே அரசு, பொதுத்துறை, பன்னாட்டு நிறுவ னங்கள் என்றுதான் சிந்தனை கட்ட மைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந் தியாவில் முற்றிலும் கவனிக்கப்படாத புறக்கணிப்பிற்கும், ஒதுக்குதலுக்கும் இன்னும் சொல்லப்போனால் தாக்கு தலுக்கும் உள்ளான பகுதியாக இருக் கும் சிறு, குறு தொழில்களே வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னிலை  வகிக்கிறது. அரசுத்துறை, பொதுத் துறை, தனியார் பெரு நிறுவனங்கள், அந்நிய நிறுவனங்கள் இவை அனைத் தும் உருவாக்குகிற வேலை வாய்ப்பு களோடு ஒப்பிட்டால் சிறு, குறு தொழில் களில் வேலை வாய்ப்பு வழங்குவது மிக மிக அதிகமானதும், முக்கியமான தாகும்.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபடி வேலை செய்து கொண் டிருந்தவர்களின் மொத்த எண் ணிக்கை 47.41 கோடி ஆகும். ஆனால், சமீபத்திய கணக்குகளும், புள்ளி விப ரங்களும் இந்தியாவில் ஒட்டு மொத்த மாக வேலை செய்து கொண்டி ருப்பவர்களின் எண்ணிக்கை 41 கோடி என்று தெரிவிக்கிறது. அதாவது, 8  1/2 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா விலிருந்து வேலை வாய்ப்புகளில் ஏறத்தாழ 6 1/2 கோடி குறைந்துவிட்டது. இன்றைய நிலையில் மொத்த வேலைவாய்ப்புகள் 11 கோடிக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளை சிறு, குறு தொழில்களே வழங்கிக் கொண்டி ருக்கிறது. இதில், குறுந்தொழில்களின் பங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகம். மூலதனத்தை ஈர்ப்பதற்காக இந்திய சட்டதிட்டங்களும் கொள்கைகளும் வளைக்கப்பட்டு முதலீட்டில் 50 சத விகிதம் வரை மானியம் கொடுத்து அந் நிய நிறுவனங்களையும் இந்திய தொழில் நிறுவனங்களையும் விரும்பி  அழைத்த பிறகும் வேலை வாய்ப்புகள்  ஒன்றும் வானத்தை பொத்துக் கொண்டு கொட்டிவிடவில்லை. 

ஆனால், தங்கள் சேமிப்பையே முதலீடாக்கி, தங்கள் குடும்ப தேவைக்கு பொருள் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறு வனங்கள் ஒட்டுமொத்த வேலை வாய்ப்பில் நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமாகவே வழங்கி கொண்டிருக் கிறது. இந்த நிறுவனங்களில் பணி  புரிந்து வரும் ஏறத்தாழ 100 சதவிகி தம் பேர் மிகக்குறைந்த கல்வி வாய்ப்பை பெற்றவர்களாகவோ அல் லது ஓரளவு கல்வி வாய்ப்பை பெற்ற வர்களாவோ இருக்கிறார்கள். இந்த  நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு குறிப் பிட்ட இடத்தை மையப்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப் படுகின்றன. இதன் காரணமாக பொரு ளாதார நடவடிக்கையும், பொருளா தார பரவலையும் இது உருவாக்கு கிறது. மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒருவர் அதை முழுவதையும் ஒரே மாதத்தில் செல வழித்து விடுவதில்லை. ஆனால், சிறு,  குறு தொழில்களில் பணிபுரிகிற பெரும் பகுதியினர் அவர்களின் வரு மானம் முழுவதையும் கிட்டத்தட்ட சந்தையில் செலவழித்து விடுகிறார் கள். சந்தைக்கு வருவதன் மூலமா கவே இந்த பணம் பொருளாதார நட வடிக்கையில் ஈடுபடுகிறது. அந்த  வகையில் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெரும்பா லான சம்பளம் உடனடியாகவே சந் தைக்கு வருவதன் மூலம் பொருளா தார நடவடிக்கையை தூண்டுகிறது.  சிறு, குறு தொழில்கள் சில இடங் களில் தொழிற்பேட்டைகளில் இயங்கு கின்றன. ஆனால், பெரும்பாலான சிறு, குறு தொழில்கள் அதை உரு வாக்குவது சொந்த இடத்திலோ, அல் லது விலை குறைந்த இடத்திலோ இயங்குகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்பும் ஓரிடத்தில் குவிய லாக இல்லாமல் பரவலாக்கப்படுகின் றன. பல ஊரகப் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. இந்த வகையில் நகரத்திற்கும், கிரா மத்திற்கும் இடையிலான வேறுபாடு களை குறைப்பதிலும்  பங்காற்று கின்றன.

எனவே, சிறுகுறு தொழில் பாது காப்பு என்பது வெறும் அந்த தொழில் களை அதன் மூலம் அந்த தொழிலை நடத்தி கொண்டிருப்பவரை பாதுகாக் கும் நோக்கம் மட்டுமில்லை. மாறாக, வேலை வாய்ப்பையும் பொருளாதார பரவலாக்குவதையும், தொழில்கள் பரவி கிடப்பதையும் உத்தரவாதப் படுத்துவதாகும்.

இத்தகைய தொழில்கள்தான் தொடர்ச்சியாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா, தொழில் போட்டிகள் இவற்றோடு அரசின் பாரா முகம், வங்கிகளில் கை முறுக்கல், மூலப்பொருட்களின் விலையேற்றம், மின்சாரக் கட்டணம், மாதாந்திர நிரந் தர கட்டணத் தொகை, பீக் அவர் கூடு தல் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகியவற்றின் காரணமாக மிகக் கடு மையான பாதிப்புக்கு உள்ளாகி இருக் கின்றன. கடன் கொடுப்பதும் வசூலிப் பதும் இவர்களிடம் வங்கிகள் கறார்  தன்மையுடன் நடந்து கொண்டு வசூ லிக்கிறார்கள். பெரு நிறுவனங்க ளுக்கு காட்டப்படும் எந்த சலுகை களும் இந்த நிறுவனங்களுக்கு காட்டப் படுவதில்லை. கடன் வசூலிக்கும் முறையிலும் கடனுக்கான வட்டி விகி தத்திலும் பெரு நிறுவனங்களுக்கு காட்டப்பட்டும் சலுகைகள் இந்த சிறு, குறு நிறுவனங்களுக்கு காட்டப்படு வதே இல்லை. எனவே சிறு, குறு நிறுவனங்கள் மிகவும் நெருக்கடியான காலக்கட் டத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. சிறு, குறு நிறுவனங்களை பாதுகாப் பதற்கு என்பதற்கு அப்பால் தேசத் தின் பொருளாதாரம், இளைஞர்களின் வேலை வாய்ப்பு, பொருளாதார பரவ லாக்கம் உள்ளிட்டவற்றோடு சம்பந்த பட்ட ஒரு அம்சமாகும். எனவே,  சிறு, குறு தொழில்களை பாதுகாப்ப தற்கான போராட்டம் சமூகத்தின் உணர்வாகவும், போராட்டமாகவும் மாற்றப்பட வேண்டும். இந்த தொழில் நிறுவனங்கள் முன்வைக்கும் பல் வேறு கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டியது அனைத்து பகுதி மக்களின் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களின் மிக முக்கியமான கடமையாகும்.