articles

img

தொழிலாளர் அமைப்புகளுக்கு வழிகாட்டியாக ஒரு நூல் -ஐவி.நாகராஜன்

தொழிலாளர் அமைப்புகளுக்கு வழிகாட்டியாக ஒரு நூல்

“உலக தொழிற்சங்க இயக்க வரலாறு - நடைமுறை உத்தியும் நீண்ட கால உத்தியும்” என்ற இந்த நூல் முதலில் 2021-ல் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் சர்வதேச மாநாட்டில் “சர்வதேச தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இதை தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஆர்.சிங்காரவேலு அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மொழி பெயர்ப்பை அதன் அம்சங்கள் மாறாமல் எளிமையாகச் செய்துள்ளார். அதேபோல் இந்நூலுக்கான முன்னுரையை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் வழங்கியுள்ளார்.  “உலக தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் தொழிற்சங்க இயக்க ஊழியர் களுக்குக் கிடைத்துள்ள சிறந்த கொடையாகும்.

வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுச்சித்திரம்

300 ஆண்டுகளுக்கும் மேலாக உலகள வில் நடந்து வருகின்ற முதலாளி-தொழிலாளி வர்க்க மோதலும், முதலாளிகளின் கொடிய  சுரண்டலும், முதலாளித்துவ அரசுகள் ஈவு இரக்க மில்லாமல் நடத்திய வன்முறைகளும் படு கொலைகளும் மிகக் கொடூரமானவையாகும். இதை இந்த நூல் சுருக்கமாகப் படம்பிடிக்கிறது.  நமது முன்னோர்கள் பட்ட பாடுகளும், பெற்ற துயரங்களும், செய்த தியாகங்களும், அடிமைகளாய் இருந்து அடைந்த சித்ரவதை களும் நிறையச் சொல்லிக்கொண்டே போக முடியும். இன்று பொருளாதார வளர்ச்சியடைந்து செல்வச்செழிப்பிலும் ஏகாதிபத்திய ஆணவச் செருக்கிலும் இருக்கின்ற நாடுகள் எல்லாம் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர் களாலும் அடிமைகளாய் நடத்தப்பட்ட வர்களாலும் வளமாக்கப்பட்டவைதான்.  இதர நாட்டுச் செல்வங்களையும் அவர்கள் கொள்ளையடித்துத் தனது கருவூலங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்ற நாடுகள்தான் அவையெல்லாம். இதற்காகவே ஓயாத போர்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார் கள். மக்களைக் கொன்று குவிப்பதோடு புலம் பெயர்ந்த அகதிகள் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்கு கள் குறித்து ஏராளமான தரவுகளை இந்நூல் மிக்க சுருக்கமாகத் தருகிறது.

சுரண்டல் முறையின் தொடர்ச்சி

மனிதரை மனிதர் சுரண்டிக் கொழுப்பதுதான் முதலாளித்துவ சமூகத்தின் ஆகப்பெரிய கொடுஞ்செயல். இதைத் தடையில்லாமல் விரும்பிய வண்ணம் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற வகையில் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றி தொழிலாளி வர்க்கம் பிறந்த காலத்திலிருந்தே தொழிலாளர்களை ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டார்கள். 300 ஆண்டு களாகச் சங்கம் அமைக்கும் அந்தச் சாதாரண உரிமை கூட கொடுந்தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அண்மை யில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத் தின்போது கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. எந்தச் சூழலிலும் தொழிலாளி வர்க்கம் தனது போர்க்குணத்தைக் கைவிடாது என்பதற்கான சான்றுகள் இந்த நூலில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் தொழிற்சங்கங்களின் பொறுப்பும்

உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்கள் செய்கின்ற போர் முயற்சிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் தூண்டப்படுகின்ற பிற்போக்குக் கலவரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது தொழிற்சங்க இயக்கத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாகும்.  சோசலிச நாடுகளுக்கும், முற்போக்காகவும் வலதுசாரிப் பார்வையோடு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடும் இருக்கின்ற அரசுகளுக்கும் எதிராக, ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்து இடை யூறுகள் செய்து அந்த ஆட்சிகளைக் கவிழ்த்து விட்டு வேறு சர்வாதிகார ஆட்சியைத் திணிக்க முயற்சிக்கின்றன. இது பலிக்காத இடங்களில் பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்குகின்றன. கியூபா, சிரியா, லிபியா, இராக், சீனா என்று ஏராளமான நாடுகள் இப்படிச் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. பெரும் கார்பரேட்டுகளின் நலனுக்காக ஏகாதிபத்திய நாடுகள் யுத்தங்களை நடத்து கின்றன. ஜனநாயக உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமை போன்ற வற்றிற்கான போராட்டம் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் நடந்துகொண்டுதான் உள்ளது. யுத்த எதிர்ப்புக் குரலைத் தொழிற் சங்கங்கள் அனைத்து நாடுகளிலும் வலுவாக எழுப்ப வேண்டும். கோவிட் போன்ற கொடிய தொற்று நோயின் போது முதலாளித்துவத்தின் போலித் தோற்ற மும் அம்பலப்பட்டது நமக்கு நினைவிருக்கிறது. அந்தக் கொடிய தருணத்திலும் முதலாளித்து வம் எப்படி லாப வேட்டையாடியது என்பதையும் உலகம் கண்டது.

நூலின் முக்கியத்துவம்

உலக மக்களின் அடிப்படை எதிரி ஏகாதிபத்தியமே. இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பை முனைப்போடு உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதை இந்நூல் விவரிக்கிறது. தோழர் மாவ்ரிகோஷ் அவர்களின் இந்தச் சிறந்த நூல் ஒரு பருந்துப்பார்வையில் 300 ஆண்டுகால உலக தொழிற்சங்க இயக்கத்தை நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இன்றைய தொழிற்சங்கச் செயல்பாட்டா ளர்களுக்கும், ஜனநாயகச் சக்திகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் கூர்மை யான முறையில் பல தரவுகளைத் தந்துள்ளது. இந்த நூலைத் தொழிற்சங்க இயக்கத்திலுள்ள எல்லா அமைப்புகளும் வாங்கி படித்து பயன்படுத்த வேண்டும்.