1939 செப்டம்பர் 1-இல் நாஜி ஜெர்மனி போலந்தை தாக்கியது முதல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது.
அத்தகைய கொடிய யுத்தங்களுக்கு இப்பூவுலகம் முடிவு கட்டட்டும் என்ற உயரிய அறைகூவலுடன், 2024 செப்டம்பர் 1 இல் உலக சமாதா னம், யுத்த எதிர்ப்பு பதாகையை உயர்த்திப்பிடித்து, உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கம் தெருக்களில் இறங்கி ,பெரும் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு உலகத் தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) அறைகூவல் விடுத்துள்ளது.
ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, ஜப்பானின் மன்னன் டோஜோ ஆகிய பாசிச சக்திகள் இணைந்து நடத்திய இரண்டாம் உலகப்போரில் சுமார் 8.5 கோடிப்பேர் பலியாகினர். அவர்களை நினைவு கூர்வதுடன், ஏகாதிபத்திய யுத்த வெறி, பெரு முதலாளிகளின் லாப வெறியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
யுத்தப் பொருளாதாரம்
வடக்கு அட்லாண்டிக் ராணுவ கூட்டணியான நேட்டோ, 2024 ராணுவ பட்ஜெட்டில் 12 சதவிகிதம் கூடுதலாக செலவிட முடிவு செய்துள்ளது. நேட்டோ நாடுகள் ‘யுத்தப் பொருளாதாரம்’ என்பதன் பெயரால் சிக்கனச் சீரமைப்பு நடவடிக்கைகளை அமலாக்கி, உழைக்கும் மக்களுக்கு பல துயரங்களை ஏற்படுத்தி வருகின்றன. பெரும் பாலான நேட்டோ உறுப்பு நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் இரண்டு சதவிகிதம் ராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளன .
உலகம் முழுவதும் ஏகாதிபத்தியம் நடத்தி வருகின்ற ராணுவ மோதல்களை/ ஆக்கிரமிப்புகளை நிறுத்தி, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; சூடான், மத்திய கிழக்கில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரவேண்டும்; பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அமெரிக்க துணையுடன் நடத்திவரும் இனப்படுகொலை/ ஆக்கிரமிப்புகளை முடி விற்கு கொண்டு வர வேண்டும்; உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்பும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலை நகராகக் கொண்டு 1967 ஆம் ஆண்டு எல்லைகள் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீ னம் அமைய வேண்டும்; நேட்டோ அமைப்பைக் கலைக்க வேண்டும்; அனைத்து ராணுவ கூட்டணிகளும் கலைக்கப்பட வேண்டும்; உலகில் அணு ஆயுதங்கள் முற்றி லும் ஒழிக்கப்பட வேண்டும்; அனைத்து நாடுகளின் சுதந்திரம், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் கூடாது என முழக்கமிட்டு இந்த உலகு தழுவிய போராட்டம் நடை பெறுகிறது.
இரண்டாம் உலக யுத்தம்
1939 செப்டம்பர் 1-இல் துவங்கிய இரண்டாவது உலக யுத்தம், 1945 செப்டம்பர் 2-இல் தான் முடிவிற்கு வந்தது. ஜெர்மனி ,இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகள் ஒரு புறம்; அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் என நட்பு நாடுகள் மறுபுறம் இந்தப் போரில் அங்கம் வகித்தன. 1945 ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோ ஷிமா மீதும், ஆகஸ்ட் 9-இல் நாகசாகி மீதும் அமெரிக்கா தேவையற்ற நிலையி லும் அணுகுண்டுகளை வீசித் தாக்கியது. ஹிரோஷிமாவில் 3,44,306 பேரும், நாக சாகியில் சுமார் 80 ஆயிரம் பேரும் அணுகுண்டு வீச்சினால் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகே யுத்தத்தின் கொடுமையை, அணு ஆயுதங்களின் பெரும் ஆபத்தை உலகம் உணர்ந்தது.
அணு ஆயுதங்களின் அபாயம்
2017 -இல் முதல் முதலாக அணு ஆயுத தடை ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 முதல் அமலுக்கு வந்தது. 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கையெழுத்திட்ட போதிலும், அணுகுண்டு தயாரிக்கும் எந்த ஒரு நாடும் இதில் கையெழுத்து இடவில்லை. உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா ,சீனா ,பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளில் தான் அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா தற்போது 4380 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அமெரிக்காவிடம் 3708 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த இரு நாடுகளில் மட்டும் உலகின் 12,100 அணு ஆயுதங்களில் 90% உள்ளன. சீனாவிடம் 500, இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் உள்ளன.
இன்றைய உலகில் எந்த நாடும் அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியாது; ஏனெனில் இந்த ஆயுதங்களால் யாருக்கும் வெற்றி கிட்டாது; அனைத்தும் அழிந்து விடும் என்பதே நிலை. அணு ஆயுதங்கள் உட்பட, ராணுவப் போர்த் தளவாடங்கள் உற்பத்திக்குச் செலவிடும் தொகையை, மனித குலத்தின் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும், உழைக்கும் மக்களின் கண்ணி யமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும், செலவிட்டால் மனித குலம் மேலும் மேலும் முன்னேறும்.
மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைய ,அதா வது இயற்கைச் சீற்றங்கள்/ பேரிடர்களில் இருந்து, மனித குலத்தை காப்பாற்றும் வகையில், விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பாய்ச்சல் வேகத்தில் முன் னேற்றம் காண முயற்சிக்கலாம். பருவநிலை மாறுதல்களால், புவி வெப்பமயமா வதை தடுத்திட உலகம் மென்மேலும் மாசுபட்டு வருவதை தடுத்திட, புதுப்பிக்கத்தக்க சூரிய ஒளி, காற்றாலை போன்றவை மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகளில் வீச்சாக இறங்கலாம்; பிரபஞ்சத்தின் பல்வேறு நுணுக்கங்களை கண்டறிய விண்வெளி ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தலாம் .
உலகம் சந்தித்த இரண்டு உலக மகா யுத்தங்களும், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட அசமத்துவ வளர்ச்சியின் பின்னணியில், உலகச் சந்தையை தங்க ளுக்குள் மறுபங்கீடு செய்து கொள்ளவே நடத்தப்பட்டன. சாமானிய மக்களுக்கும், உழைக் கும் மக்களுக்கும் சொல்லொணா துயரங்களை இந்த யுத்தங்கள் ஏற்படுத்தின.
ஏகாதிபத்திய பயங்கரம்
அமெரிக்காவின் ஆகப்பெரும் தொழிலாக, ராணுவத் தளவாட உற்பத்தி உள்ளது. 2022 இல் அமெரிக்காவின் ஐந்து பெரிய ஆயுத தயாரிப்பு காண்ட்ராக் டர்கள் பெற்ற ராணுவ ரீதியான வருவாய் 19,600 கோடி டாலர். ராணுவத் தளவாட விற்ப னையே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோள். மனிதர்களுக்கு, இயற்கை வளங்களுக்கு ஏற்படும் அழிவுகளைப் பற்றி ஏகாதிபத்தியம் ஒருபோதும் கவலை கொள்வதில்லை.
ஏகாதிபத்தியம் காட்டுமிராண்டித்தனமானது. வியட்நாமில் 30 ஆண்டுகள் போரிட்டு அந்நாட்டில் அமெரிக்கா ஏற்படுத்திய மிகப் பெரும் சேதாரங்களை மறக்க முடியுமா? புல் ,பூண்டு கூட முளைக்க முடியாத அளவு நாஃபாம் குண்டை அமெரிக்கா பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களை ஒழித்துக் கட்டுவோம் என்ற பெயரில், ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்கப் படைகள், இறுதியில் அந்த தலிபான்கள் வசமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறிய அவலத்தை மறக்க முடியுமா? இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக மிகப்பெரும் பொய்யைக் கூறி, அதன் ஜனாதிபதி சதாம் உசேனை கொன்று, எண்ணற்ற உயிர்ச் சேதாரங்களை அமெரிக்கா ஏற்படுத்தியது.
புதிய புதிய ராணுவக் கூட்டணிகளை ஏற்படுத்தும் அமெரிக்கா, ஐநா நிறைவேற்றும் தீர்மானங்களை மதிப்பதில்லை.
ஐநா தலைமையகம் அமெரிக்காவில் தான் உள்ளது. பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் என்ற தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் வரும்போதெல்லாம், அமெ ரிக்கா தனது வீட்டோ, ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விடுகிறது. கியூபா மீதான 60 ஆண்டு கால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கிக் கொள்ள வேண்டும் என ஐநாவில் பலமுறை பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்த போதிலும், அமெரிக்கா அவற்றை பொருட்படுத்தாமல் சண்டித்தனம் செய்கிறது .
உலகெங்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள்
உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்களை அமெரிக்கா தான் நிறுவியுள்ளது .பல நாடுகளில் இந்த ராணுவத் தளங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
கியூபாவிற்கு சொந்தமான குவாண்டனாமோ என்ற தீவை ஆக்கிரமித்து, உலகி லேயே மிகக் கொடூரமான சிறைச்சாலையை அமெரிக்கா நிர்வகித்து வருகிறது. இந்திய பெருங்கடலில் டீகோ கார்சியா, இன்னமும் அமெரிக்காவின் ஆக்கிர மிப்பில், அதன் ராணுவ தளமாக உள்ளது.
2008 முதல் உலக அளவில் முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கி உள்ளது. 16 ஆண்டுகள் ஆகியும் நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீளவில்லை. கொரோனா காலத்தில் கூட கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் தேடித் தந்ததே, முதலா ளித்துவம். நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது தான் முதலாளித்து வம் திணிக்கிறது. அதுதான் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனை களுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு எதிர்ப்பு வலுவாகும்போது சாதிவெறி, மதவெறி, பிரிவினைவாத சூழ்ச்சிகளை, புதிய பாசிச பாணியுடன் கையாள முதலாளித்துவம் தயங்குவதில்லை.
மோடி அரசும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பாரம்பரியமான அணிசேராக் கொள்கை கைவிடப்பட்டு விட்டது. பாரம்பரியமான பாலஸ்தீன ஆதரவு தொடர தயக்கம் காட்டுகிறது. இஸ்ரேலில் ராணுவத் தளவாட ஆலைகளை ஏற்படுத்தி உள்ளார் அதானி. இஸ்ரேலில் ஒரு துறைமுகத்தையும் வாங்கியுள்ளார். இஸ்ரேலு க்கு அதானி மூலமாக ஆயுதங்கள், வேவு பார்க்கும் எந்திரங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன. அமெரிக்காவின் கேந்திரமான, இளைய பங்காளியாக, இந்தியாவை மோடி அரசு மாற்றி வருகிறது.
இப்பின்னணியில், உலக அளவில் மனிதகுலம் மேன்மேலும் முன்னேற, யுத்தங் களற்ற, சமாதானத்தை நிலைநாட்ட, மக்களின் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்து மாகச் செயல்படும் நிலை ஏற்பட வேண்டும் .
அத்தகைய உறுதியுடன் செப்டம்பர் 1 (இன்று) உலக தொழிற்சங்க சம்மேள னத்தின் அறைகூவலுக்கு இணங்க, உலக சமாதான தினத்தன்று, பெருமளவில் உழைக்கும் மக்களை திரட்டிடுவோம்!
செப்டம்பர் 1 உலக சமாதான தினம்