articles

ஒன்றிய அரசு ஊழியர் அகவிலைப்படி ஜூலை முதல் 4 சதவீதம் உயரும், எப்படி? - ஆர்.இளங்கோவன்,

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை முதல் 3 சதவீதம் உயரும் என்று ஒரு புது தில்லி செய்தியை ஊடகங்கள் கடந்த 7 ஆம் தேதி வெளியிட்டன.அகில இந்திய ரயில்வே தொழி லாளர் சம்மேளன பொது செயலாளர் 4 சதவீதம் கேட்டு இருப்பதாகவும் ஆனால் 3 சதவீதம் தான் தருகிறார் கள் என்று கூறியதாகவும் செய்தி கூறியது. உண்மை யில் 4 சதவீதம் உயர்கிறது. 3 சதவீதம் அல்ல எப்படி என்பதை பார்ப்போம்.

கணக்கு முறை

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதி யக்குழு பரிந்துரைப்படி இப்போது அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது. ஜனவரி முதல் தேதியிலிருந்து ஒரு தவணையும் ஜூலை முதல் தேதியிலிருந்து இரண்டாம் தவணையும் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இதற்கு கணக்கிட 2001=100 என்ற தொழிலாளர்களுக்கான விலைவாசிப்புள்ளி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. ஏழாவது சம்ப ளக்குழுவின் சம்பளங்கள்  மற்றும் பென்சன்கள்  2016 ஜனவரி 1 முதல் வழங்கப்பட்டன. இந்த சம்பளங்களும் பென்சனும் விலை உயரும்போது அதற்கேற்ப உயர்த்தப்பட்டால்தான் அவற்றின் வாங்கும் தன்மை யில் ஓரளவு தாக்குப்பிடிக்கும். இதற்காக 2015 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத விலைப்புள்ளியின் சராசரி கணக்கிடப்பட்டது.12 மாத விலைப்புள்ளிகளின் கூட்டுத்தொகையை 12 ஆல் வகுத்தால் சராசரி புள்ளி வரும். இதுவும் 2001=100 விலைப்புள்ளி அடிப்படையில் கணக்கிடப்பட்டது.அது 261.4 ஆகும். இதற்கு மேல் எத்தனை சதவீதம் விலை உயர்கிறதோ அத்தனை சதவீதம் அகவிலைப்படி உயரும். ஜனவரி 1 முதல் உயரும் அகவிலைப்படியை கணக்கிட அதற்கு முந்தைய ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத விலைப்புள்ளிக ளின் சராசரி கணக்கிடப்படும். அந்த சராசரி அடிப்படை சராசரியான 261.4 க்கு மேல் எத்தனை சதவீதம் உயர்ந் துள்ளதோ அதுதான் ஜனவரி முதல் தரப்படும் மொத்த அகவிலைப்படி சதவீதம் ஆகும். அதற்கு முன்பு எத்தனை சதவீதம் வழங்கப்படுகிறதோ அதை கழித்தால் எத்தனை சதவீதம் உயரும் என்பது தெரி யும். ஜூலை 1 முதல் உயரும் அகவிலைப்படியை கணக்கிட அதற்கு முந்தைய 12 மாதங்களின் விலைப் புள்ளிகளின் சராசரி எடுக்க வேண்டும். அது அதற்கு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் நடப்பாண்டின் ஜூன் வரை உள்ள 12 மாத புள்ளிகளாகும். இவற்றின் 12 மாத சராசரி 261.4 க்கு மேல் எத்தனை சதவீதம் உயர்கி றதோ அதுதான் ஜூலை 1 முதல் அகவிலைப்படியா கும். முந்தைய மாத மொத்த அகவிலைப்படியை இந்த அகவிலைப்படியிலிருந்து கழித்தால் எவ்வளவு உயர்கிறது என்று தெரியும்.

2019 முதல் விலைவாசிப்புள்ளி கணக்கிட 2016=100 என்ற அடிப்படையிலான விலைப்புள்ளி தான் சேகரிக் கப்பட்டு வெளியிடப்படுகிறது. 2001=100 என்ற அடிப்ப டையிலான விலைப்புள்ளி கணக்கிடப்படுவதில்லை.எனவே 2016=100 என்ற விலைப்புள்ளியை 2001=100 விலைப்புள்ளியாக மாற்றப்படுகிறது. இதற்கு 2016=100 அடிப்படையிலான விலைப்புள்ளியை 2.88 என்ற  காரணியால் பெருக்க வேண்டும். அப்போது 2001=100 விலைப்புள்ளி வரும். அதன் 12 மாத சராசரி கணக்கிட்டு முன்பு சொன்ன முறையில் அகவிலைப் படி கணக்கிட வேண்டும். ஒரு மாதத்தின் விலைப்புள்ளி அடுத்த மாதத்தின் கடைசி வேலை நாளில் தொழிலாளர் துறையால் வெளி யிடப்படும். 88 மையங்களுக்கான விலைப்புள்ளிகளும் அகில இந்திய பொதுப்புள்ளியும் வெளியிடப்படும். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகில இந்திய பொ துப்புள்ளி பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஜூலை 1,2023 அகவிலைப்படியை கணக்கிடுவோம். இதற்கு நான் முன்பே சொன்னபடி 2022 ஜூலை முதல் 2023 ஜூன் வரையான விலைப் புள்ளியை எடுக்கவேண்டும்.

2016=100 புள்ளியை 2.88 ஆல் பெருக்கி அதனை முழுமை ஆக்கவேண்டும். பின்னும் அரையும் அதற்கு  மேலும் இருந்தால் 1 ஆக்க வேண்டும். அரைக்கு  குறைவாக இருந்தால் தள்ளிவிடவேண்டும்.  2001=100 புள்ளிகளின் கூட்டுத்தொகை 4587. இதனை 12 ஆல் வகுக்க சராசரி 382.25 ஆகும். இது அடிப்படை புள்ளியான 261.4 க்கு மேல் 120.80 உயர்வு ஆகும். 261.4  புள்ளி    120.80  உயர்ந்தால் அதன் சதவீத உயர்வு 46.23 ஆகும். 23 என்ற பின்னத்தை தள்ளிவிட வேண்டும். 99 என்றாலும் தள்ளப்படும். எனவே ஜூலை 1 முதல் அகவிலைப்படி 46 சதவீதம் ஆகும். ஜனவரி 2023 முதல் 42 சதவீதம் வழங்கப்படுவதால் 4 சதவீதம் உயர்வு. எனவே கணக்குப்படி 4சதவீதம் உயர்வு. 3 சதவீதம் என்பது தவறு. இதில் பேரம் எதற்கும் சாத்தி யம் இல்லை. விலைப்புள்ளி கணக்கிடுவதில் உள்ள மோசடியால் உண்மை விலை உயர்வு முழுதாக பிரதிபலிப்பதில்லை. உதாரணமாக தமிழகத்தில் 45 கிலோ அரிசியில் இலவச அரிசி 20 கிலோவுக்கு பூச்சி யம் ரூபாய் தான் எடுக்கப்படுகிறது. மீதி 25 கிலோ வுக்கான சந்தை விலையை 45 கிலோவுக்கு கணக்கிட்டு அரிசி விலை குறிக்கப்படுகிறது.

ஜூலை மாதம் முதல் உயரும் அகவிலைப்படி ஜூலை முதல் பின்பாக்கியுடன் செப்டம்பர் மாத சம்பளம் அல்லது பென்சனில் சேர்க்கவேண்டும்.அதே போல ஜனவரி முதல் உயர்வது மார்ச் மாத சம்பளத்தில் சேர்க்கவேண்டும். ஒன்றிய அரசு இப்போதெல்லாம் இதனை பின்பற்றுவதில்லை.அக்டோபர் அல்லது ஏப்ரலில்தான் தரப்படுகிறது.தமிழக அரசு ஊழியர்களுக்கும் இதே படி தான் அக விலைப்படி தரப்படுகிறது. இப்போதெல்லாம் அவர்க ளுக்கு 6 மாதம் தள்ளிதான் பின்பாக்கி இல்லாமல் தரப்படுகிறது.     கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த 18 மாத அகவிலைப்படியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. மற்றபடி அகவிலைப்படி கணக்குப்படி இது வரை வழங்கப்பட்டு வருகிறது.

2022                                2016=100              2001=100

ஜூலை                           129.9                         374
ஆகஸ்ட்                        130.2                           375
செப்டம்பர்                   131.3                          378
அக்டோபர்                   132.5                           382
நவம்பர்                         132.5                          382
டிசம்பர்                         132.3                           381
2023
ஜனவரி                          132.8                          382
பிப்ரவரி                        132.7                            382
மார்ச்                              133.3                          384
ஏப்ரல்                                134.2                        386
மே                                     134.7                         388
ஜூன்                               136.4                          393