அழிந்துபோன உயிரினங்களை மீட்கும் அறிவியல் பிரிவில் (deextinction) அழிந்த பாலூட்டிகளின் முன்னோர் என்று கருதப்படும் மாமூத் என்ற விலங்கையும் தைலசின் புலி என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியப் புலி இனத்தையும் மீண்டும் உயிருடன் கொண்டுவரும் பெரு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புகழ்பெற்ற கொலாசல் உயிரி அறிவியல் (Colossal biosciences) என்ற அமெரிக்க நிறுவனம். இவ்வரிசையில் அழிந்த டோடோ (Dodo) பறவையை மீட்கும் ஆய்வுகளைத் தொடங்கி யுள்ளதாக அறிவித்துள்ளது. பறக்க இயலாத இப்பறவையை மீண்டும் மீட்கமுடியுமா என்பது பற்றி சர்ச்சை எழுந்துள் ளது. தொழிலதிபர் பென் லேம் மற்றும் ஹார் வர்டு பல்கலைக்கழக மரபியல் நிபுணர் ஜார்ஜ் சர்ச் ஆகியோரால் 2021-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது டோடோ மீட்பு முயற்சிக் காக பறவை மரபியல் பிரிவை தொடங்கி யுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகளுக்காக 150 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டோடோவின் கதை
இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் தீவைத் தாயகமாகக் கொண்ட டோடோ, மனிதர்களின் வருகையால் 17ஆம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் இன அழிவை சந்தித்தது. ஒரு மீட்டர் உயரமும் 15 முதல் 20 கிலோ எடை யும் உடைய இந்த சாதுப்பறவை பரிணாமத் தின் துரதிர்ஷ்டம் என்றே கருதப்படுகிறது. மற்ற உயிரினங்கள் மனிதர்களைக் கண்டவு டன் அஞ்சுவது போல இது அஞ்சவில்லை. தன் இனம் சுற்றிலும் வேட்டையாடப்படுவதைக் கண்டபிறகும் இப்பறவைகள் கடற்பயணிகள் முன்னால் போய் தயக்கமில்லாமல் நின்றன. மனிதன் அதற்குரிய பரிசாக இவற்றை வேட்டையாடியே அழித்தான். தீவிற்கு மனிதன் கொண்டுவந்த குரங்குகள், எலிகள் போன்றவை ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு முட்டையை நிலத்தில் இடும் இப்பறவைக்கு எதிரிகளாக மாறின. இந்த ஆய்வுப்பணிகள் தொடக்க நிலை யிலேயே உள்ளன என்று நிறுவனத்தின் அறிவி யல் ஆலோசனைக் குழு உறுப்பினர், சாந்தா குரூஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக பரிணாம உயிரியல் மற்றும் சூழலியல் பேராசிரியர் மற்றும் முன்னணி தொல்மரபியலாளர் பெத் ஷபீரோ (Beth Shapiro) கூறுகிறார். தொல் மரபியல் துறையின் ஆரம்பகாலம் முதலே இவர் டோடோ பறவைகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்.
மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ
இவர் டோடோவின் மைட்டோகாண்டிரி யல் டிஎன்ஏவின் ஒரு சிறு துண்டை பிரித்தெடுத் தார். இதன் மூலம் டோடோவின் நெருங்கிய சொந்தம் நிக்கோபார் புறா என்ற புறா இனம் என்பது தெரியவந்தது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை 2002-ல் சயன்ஸ் இதழில் வெளி வந்தது. எம்டிடிஎன்ஏ பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும் முக்கிய மரபியல் கூறு. 2022ல் இப்பறவையின் முழு மரபணு வரிசை எம்டி டிஎன் ஏவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பல பத்தாண்டுகள் ஆயின. ஆனால் இதில் இருந்து உயிருள்ள, சுவா சிக்கும் விலங்கை உருவாக்குவது என்பது பல சிக்கல்கள் நிறைந்த கடினமான செயல் முறைகளைக் கொண்டது. குளோனிங் மூலம் அதே போன்ற செல் அமைப்பை உடைய ஒரு உயிரினத்திடம் இருந்து புதிய உயிரினம் ஒன்றை உருவாக்கமுடியும். ஆனால் அழிந்த உயிரினத்தில் இது சிக்கலானது. மரபணு பொறியியல் மூலம் அழிந்துபோன உயிரி னத்தின் மாதிரியை அதன் நெருங்கிய சொந்த முடைய மற்றொன்றின் மரபணு வரிசையை மரபணு எடிட்டிங் செய்வதன் மூலம் பெறலாம்.
அழிந்ததை உயிர் பெறச்செய்தல்
இவ்வாறு அழிந்த உயிரினத்தின் மரபணு, வரிசை உருவாக்கப்படுகிறது. எடிட்டிங் செய்யப்பட்ட மரபணு பிறகு நெருங்கிய சொந்தத்தின் முட்டை செல்லில் வைத்து வளர்க்கப்படுகிறது. இந்த செயல்முறை வெற்றிகரமாக நடந்து பொருத்தமான வாடகைத்தாய் அதன் கருவில் வளர்த்து புதிய உயிரினத்தைப் பெற்றெடுத்து சரியான சூழலில் சத்துள்ள உணவுகள் கொடுத்து வளர்த்து ஆளாக்கவேண்டும். இச்செயல் முறைக்குரிய சரியான குளோனிங் முறையை உருவாக்க தீவிர முயற்சிகள் நடந்துவரு கின்றன. கணினித்தொகுப்பு உயிரியல், செல்லு லார் பொறியியல், குருத்தணுவியல் (stem cell reprogramming), கருவளர்ச்சியியல், புரதப்பொறியியல், கால்நடைத்துறை போன்ற பல பிரிவுகளில் இதற்காக தனித்தனி குழுக்கள் செயல்படுகின்றன. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி செம்மறியாடு போல இது சுலபமானதில்லை. இதே முறையைப் பயன்படுத்தி பறவைகளை குளோனிங் செய்யமுடியாது. குளோனிங் முறையை மேற்கொள்ள கருவுறத்தயாராக இருக்கும் ஆனால் கருவுறாத ஒரு உயிரினத்தின் முட்டை செல் அவசியம்.
பாலூட்டியும் பறவையும்
பாலூட்டியில் நடப்பது போல ஒரே மாதிரியான வளர்ச்சிநிலைகளை உடைய பறவையின் முட்டைசெல் இன்று இல்லை. இதற்காக விஞ்ஞானிகள் நிக்கோபார் புறாவின் முட்டையில் இருந்து இத்தகைய ஒரு கருச் செல்லைப் (Primordial Germ Cells PGCs) பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டோடோவின் அளவைப் போன்ற புதிய பறவை மரபணுப் பொறியியல்முறையில் புறாவிடம் இருந்து உருவாக்கப்படும். இதில் முட்டையின் அளவு முக்கியப்பங்கு வகிக்கிறது என்று ஷபீரோ கூறுகிறார். இதன் ஆரம்பநிலை கடினமானது என்றாலும் அடுத்தடுத்த நிலைகள் சுலபமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். புதிய கருமுட்டை வாடகைத்தாயின் உடலில் இருந்துகொண்டு எவ்வாறு அதன் சுற்றுப்புறச்சூழலில் பதில் வினை புரியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. புதிய உயிரினத்தின் செயல் பாடுகள் அனைத்தும் முட்டையிலேயே நிகழ் கின்றன. புதிய உயிரினம் பிறந்துவிட்டால் பல கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.
டோடோ போல உருவாகுமா புதிய உயிரினம்?
பெரும்பாலான விலங்குகள் நடத்தை தூண்டுதலின் அடிப்படையில் உருவாகின் றன. இது அந்த உயிரினங்களின் மரபணு செயல் முறை, சமூக நடத்தை போன்ற பண்புகளின் வழியாக பெற்றோரிடம் இருந்து பெறப்படு கிறது. இதனால் அழிந்துபோன உயிரினங் களுக்குப் பொருத்தமான இயற்கைச்சூழ் நிலையை உருவாக்குவது கடினம். சொல்லித்தர யாருமில்லை இதனால் டோடோவை எவ்வாறு ஒரு டோடோ போல நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லித்தருவதற்கு அதைச் சுற்றி அது போன்ற எந்த உயிரினமும் இல்லை என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழக தொல் மரபணுவியல் பிரிவு முதுகலை முனைவர் பட்ட மாணவர் மிக்கெல் சிண்டிங் கூறுகிறார். உண்மையில் டோடோவின் வாரிசை உரு வாக்கமுடியாது. பதிலாக டோடோ போல அதன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு உயிரினத்தையே உருவாக்கமுடியும் என்கிறார் அவர்.
மேலும் புதிதாக உருவாக்கப்படும் டோடோ அதன் முன்னோர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் இருக்கும் பூமியில் இப்போது வாழவேண்டும். புதிய டோடோ புதிய புவிச் சூழலில் எவ்வாறு செயல்படும் என்பது தெரி யாது. மொரிஷியஸ் காடுகளில் மட்டுமே முன்பு இப்பறவைகள் வாழ்ந்தன. அப்போது இவற் றிற்கு எதிரிகள் என்று பெரிதாக எந்த உயிரின மும் இல்லை. இவை மெதுவாக இனப்பெருக் கம் செய்யும் இயல்புடையவை. ஒரு ஆண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இட்டன. ஒருகாலத்தில் இத்தீவில் இவை ஆயிரக் கணக்கில் வாழ்ந்தன என்று புராதன கடற் பயணிகளின் குறிப்புகள் கூறுகின்றன. புதிய டோடோக்களின் ஆரோக்கியம் மற்றொரு கேள்விக்குறி. இவை உடல் மற்றும் உளவியல் ரீதியாக சுற்றுச்சூழலில் பொருந்தி நலமுடன் வாழத் தெரியவேண்டும். இதற்குரிய வாழிடச் சூழலை மொரீஷியஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தீவுகளில் நாம் கண்டுபிடித்து உரு வாக்கவேண்டும் என்று ஷபீரோ கூறுகிறார். ஆமைகளும் எபனி மரங்களும் இத்திட்டம் வெற்றியடைந்தால் இதுபோல அழிந்துபோன பல தாவர விலங்குகளை மீட் டெடுக்கும் முயற்சிகள் உத்வேகம் அடையும். புதிய பறவை தன் வாழிடச்சூழலை தானே மீட்டெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. மொரீஷி யஸ் தீவுகளுக்கு அருகில் அழிந்துபோன ராட்சச ஆமைகள். இதுபோல மீண்டும் மரபணு முறையில் உயிர்ப்பெறச் செய்யப்பட்டபோது முன்பு அவற்றின் முக்கிய உணவாக இருந்த எபனி (Ebony)மரங்களின் கனிகளை உண்டு அவற்றின் விதைகளைப் பரவச்செய்து அப்பகுதி முழுவதும் இம்மரங்கள் வளர உதவின.
அழிந்த விலங்குகளின் டிஎன்ஏ
சிண்டிங் அழிந்துபோன ப்ளஸ்ட்டோட்டின் ஓநாய்கள் (Pleistotene wolf), உரோமங் களுடன் வாழ்ந்த காண்டாமிருகங்கள், ஆரோக்ஸ் (Aurochs) ஆகிய விலங்குகளின் புராதன டிஎன்ஏக்களை முன்பே பிரித்தெடுத் துள்ளார். ஒரு யானையிடம் இருந்து செயற்கை முறையில் ஒரு மாமுத்தை உருவாக்குவது கடினம். ஆனால் டோடோவின் கருவளர்ச்சி விரைவாக நடக்கிறது என்பதால் இம்முயற்சி வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முயற்சி வெற்றிபெறுமா என்று உறுதியாகத் தெரியாதநிலையில் இதற்கு மாற் றாக அழிந்துகொண்டிருக்கும் புறா இனங் களைக் காக்க இந்நிதியை பயன்படுத்தலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது வரவேற்கத்தக்க முயற்சி என்று டேனிஷ் தேசிய பரிணாமம் மற்றும் மரபியல் ஆய்வு நிலையத்தின் இயக்குனர் டாம் கில்பர்ட் கூறு கிறார். டோடோவின் மீட்பு அழிந்துகொண்டி ருக்கும் உயிரினங்களைக் காக்க ஒரு தீர்வாக அமையாது. ஆனால் இதன் மூலம் அழிந்த பறவையினங்களை மீட்பது பற்றிய ஆய்வுகள் புதிய ஊக்கம் பெறும். இவ்வகையில் இந்த நூற்றாண்டில் டோடோ உயிருடன் மீண்டு வந்து ஒரு புதிய சரித்திரம் படைக்கலாம். பறவைகள் பற்றிய பன்னாட்டு அமைப்பின் (Birdlife International) 2017 ஆய்வறிக்கையின்படி 1500ஆம் ஆண்டு முதல் பூமியில் இருந்து 161 பறவையினங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. கொலாசலின் இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் அது அழிந்தவற்றை மீட்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெரிய திருப்பு முனையாக அமையும்.