குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் சமீப த்திய தரவு காட்டுகிறது. குடும்பங்களின் இந்த நிகர நிதி சேமிப்புகள் (செலவுகள் போக மீதமிருப்பது) 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 47 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். இந்தத் தொகை இப்போது 13.76 லட்சம் கோடியாக குறைந்து போய் உள்ளது. (2018-19) அதாவது 4 ஆண்டு களுக்கு முன் நிலவியதை விடவும் குறை வாகும். அவை முதலீடுகளுக்கெல்லாம் முதுகெலும்பாக இருக்கிறது. இதில் ஏற்படும் சரிவு பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை கடுமையாக அழிக்கக்கூடும் என்ப தால் இது ஒரு மிகப்பெரிய பின்னடை வாகும்.
குடும்ப சேமிப்பு முக்கியமானதா?
குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு இரண்டு வகையில் மிகவும் முக்கிய மானது: ஒன்று, சேமிப்பில் இது மேலதிக பங்கை வகிக்கக்கூடியது. அதாவது பொருளா தாரத்தில் 4-ல் மூன்று பங்கை வகிக்கிறது. தனியார் கார்ப்பரேட் துறையின் சேமிப்பு கள் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இது அடுத்த பெரிய (சேமிப்பு) பங்காகும்.அர சாங்கத்தின் சேமிப்பு மூன்றாவது கூறு கிட்டத்தட்ட, எப்போதும் அது எதிர்மறை யாக பல பத்தாண்டுகளாக உள்ளது. இரண்டாவதாக, இந்த சேமிப்பு தான் (குடும்ப நிகர சேமிப்பு) கார்ப்பரேட் மற்றும் அரசுத்துறையில் உள்ள சேமிப்பு முத லீட்டு இடைவெளியை நிரப்பவும் ஒட்டு மொத்த முதலீடுகளை அதிகரிக்கவும் உத வுகின்றன. எனவே, இந்த சேமிப்பில் ஏற்படும் வீழ்ச்சியானது பெரு நிறுவன மற்றும் அரசுத்துறை வளங்களைத் திரட்டும் திறனைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த முதலீடு களையும், வெளிநாட்டிலிருந்து பாயும் நிலையற்ற நிதியைச் சார்ந்திருக்கச் செய்து விடும். உலகளாவிய பத்திரச் சந்தை (Bond market) குறியீடுகளில் இந்தியா வும் இணைக்கப்பட்டதை இந்தப் பின்னணி யில் தான் உண்மையில் பார்க்கவேண்டும். குடும்பங்களின் நிகர சேமிப்பில் தற்போதைய வீழ்ச்சி கவலை அளிப்பதா கும். இது முற்றிலும் எதிர்பாராததும் அல்ல. எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பல குடும்பங்களில் சேமிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 மாவது ஆண்டில் துவங்கி முதல் 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க அளவிற்கு இது வளர்ச்சி கண்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதம் அள விற்கு உச்சத்திற்குச் சென்று பிறகு குறை யத்துவங்கியது. உலக நிதி நெருக்கடி யின் போது 8 சதவீதம் அல்லது 7 சத வீதம் அளவிற்கு குறையத் துவங்கியது. 2020-ல் திடீரென இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்த போதும் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக 50 ஆண்டுகளாக இல்லாத வகையில் மீண்டும் குறைந்துவிட்டது. இந்தச் சரிவு இப்போதும் மீண்டும் வேகம் பெறுவதை பொருளாதார குறியீடுகள் தெளிவாக உணர்த்துகின்றன. மொத்த சேமிப்பிற்கும், குடும்பங்களின் செலவுகளுக்குமிடையே உள்ள விகிதங் களை ஆராய வேண்டும். மொத்த சேமிப்பு 1990களில் 77 சதவீதமாக இருந்தது கடந்த 10 ஆண்டுகளில் 3.3 சதவீதமாக குறைந்து விட்டது. இதுவும் குடும்பங்களின் நிகர சேமிப்பு வீழ்ச்சியடைய முக்கிய காரண மாகும்.
காரணம் என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளில் இது மேலும் 2.9 மற்றும் 1.9 சதவீதமாக குறை ந்துள்ளது. குடும்பங்களின் சேமிப்பு விகி தத்தில் இது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் குடும்பத்தின் வரவு செலவு அறிக்கையில் நிலையான சரிவை பிரதி பலிக்கிறது. வருமானம் உயர்வதில் தாம தம் அல்லது மந்த நிலை, பணவீக்கத்தால் ஏற்படும் ஊதிய அரிப்பு (வாங்கும் சக்தி வீழ்வது)-இவை இரண்டும் சேமிப்புக் களையும், அதற்கான (ஆதாரத்தை) வாய்ப்புகளையும் குறைக்கிறது. இந்த தரவு, நீண்ட காலப்போக்குகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வருமானம் உயர்ந்ததால் சேமிப்பும் உயர்ந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டு களில் இது கணிசமாக குறைந்துள்ளது. 1970களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து 1980களின் நடுப்பகுதியில் இரட்டை இலக்க நிலைக்கு நகர்ந்தது. 2006-07-ல் உலக நிதி நெருக்கடியால் வளர்ச்சி தடம் புரண்ட போது ஜி.டி.பி . யில் 18 சதவீதம் என்ற உச்சநிலையை எட்டியது. மொத்த சேமிப்பு விகிதம் பிந்தைய ஆண்டுகளில் குறைந்து கடந்த 10 ஆண்டுகளின் முடிவில் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை ஓரளவு மீண்டது. தொற்று நோய் காலத்தில் 15 சத வீதம் அளவிற்கு உயர்ந்தாலும் மிகக்குறை வான அளவிற்கு தற்போது திரும்பி விட்டது.
அதிகரிக்கும் செலவினங்கள்
வருமானம் தடைபடுவது என்ற காரணத்திற்கு அப்பால் செலவினங்களும் அதிகமாவது சேமிக்கும் திறமையை குறைத்து விடுகிறது. உள்நாட்டு உற்பத்தி யில் 1.6 சதவீதமாக இருந்த செலவினங்கள் தற்போது 6.6 சதவீதம் என்ற உயர்வை எட்டியுள்ளது. உலகநிதி நெருக்கடியின் தாக்கம் குடும்பத்தின் செலவினங்களை கடுமையாக பாதித்தது. 3லிருந்து 4 சத வீதம் அளவிற்கு உயர்ந்து 2022- 23-ல் 5.8 என்ற நிலையை அடைந்தது. வங்கி கள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் தொகையாகவும் கூட இது உயர்ந்தது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் உலக நிதி நெருக்கடிக்கு முன்னர் இருந்த அளவிற்கு நிதிச்சேமிப்பை உரு வாக்க வேண்டும். வங்கிகளின் வைப்புத் தொகை, காப்பீடு மற்றும் குறைந்துவரும் வட்டிவிகிதம் - இவற்றையெல்லாம் கவ னிக்கும் போது இந்தப் பணி மிகவும் சவால் நிறைந்ததாகவே தெரிகிறது. வருங்காலவைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி இரண்டிலும் சேமிப்பு கிட்டத்தட்ட தேக்க நிலையை அடைந்துவிட்டது. வங்கி அல்லாத வைப்புத் தொகைகள், பங்குகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு கள் போன்ற சில சேமிப்பு வாய்ப்புகள் சிறு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பொருளாதார மந்த நிலையும் பண வீக்கமும் குடும்பங்களின் சேமிப்புக்கான ஒட்டுமொத்த நாட்டத்தையுமே கடுமை யாக அரித்துவிட்டது என்பது தெளிவு.
எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல்
வீக்லி தலையங்கம்.
- தமிழில் : கடலூர் சுகுமாரன்