ஆகஸ்ட்,2023 ஆரம்பத்தில், ஒன்றிய அரசு சர்ச்சைக்குரிய வனப்பாதுகாப்பு திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் இன்றி நிறைவேற்றியது. இந்த வனப் பாதுகாப்புச் சட்டத்திற்கான மசோதா நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, வனவளங்கள் சுரண்டப்படுவதை தடுப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை பலவீனப்படுத்துகிறது என்று பல்வேறு மாநில அரசுகளும் சூழலியல்வாதிகளும், குடிமைச் சமூகக் குழுக்களும் குரல் எழுப்பினர். ஆனால், ஒன்றிய அரசு இவர்களின் எச்சரிக்கைகளை பொருட் படுத்தாமல் மசோதாவை நிறைவேற்றிக் கொண்டது. இந்நிலையில் மிசோரம் மாநில சட்டமன்றம் வனப்பாதுகாப்பு சட்டம் 2023க்கு எதிராக ஆகஸ்ட் 22 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. மிசோரம் மக்க ளின் உரிமைகள், நலன்களை காப்பதற்காக இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள் ளது. மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து உட்பட வட கிழக்கு இந்தியாவின் பற்றியெறியும் பிரச்சனையாக இந்தச் சட்டம் மாறியுள்ளது
.இரண்டு முக்கியப் பிரச்சனைகள்
புதிய சட்டத்தின் இரண்டு ஏற்பாடுகள்/சரத்துகள் குறித்து வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் அஞ்சு கின்றன. முதலாவதாக, 1980 அக்டோபர் 25க்கு முன்பாக காடுகளாக பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வன பாதுகாப்பு சட்டம் பொருந்தும் என்பதாகும். இதன் விளைவாக வனப்பகுதிகளாக இருந்தாலும் கூட அதிகாரப்பூர்வமாக அரசு ஆவணங்களில் வகைப் படுத்தப்படாதவைகள் “வனப்பகுதிகள் என்ற வரை யறைக்குள் வராது” என்பதாகும். எனவே இது போன்ற பகுதிகளை வணிகரீதியான சுரண்டலில் இருந்தும், வேறு ஏதேனும் நோக்கத்துக்கு வனப்பகுதிகள் திருப்பிவிடப்படுவதிலிருந்தும் வனப் பகுதிகளை பாதுகாக்க முடியாது. ஆனால் 1986இல் உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வக் காடுகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மட்டு மல்லாது, காடு என்ற பொருள் கொள்ளத்தக்க நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டி யவை தான் என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் காடுகள் பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்தியது. அது தற்போது தாக்குதலுக்குள்ளாகிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் இரண்டாவது அச்சம், சர்வதேச எல்லையில் உள்ள 100 கி.மீ. நிலப் பகுதிகளை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றியதாகும். தேச பாதுகாப்பு என்ற பெயரில் வியூகம் சார் திட்டங்களின் கீழ் வன நிலங்களில் சாலைப் பணிகள், ரயில்வே திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள ஒன்றிய அரசு இனிமேல் மாநில அரசுகளின் வனத்துறையிடமிருந்து தடை யின்மைச் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பற்றியதாகும்.
முற்றிலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும்
மிசோரம் சட்டமன்றத்தில் மிசோரம் வனத்துறை அமைச்சர் பேசிய போது, புதிய சட்டத்தின் இரண்டா வது சரத்தில் உள்ள அம்சங்கள் மிசோரமின் காடுகள் போர்வையை முழுமையாக துடைத்தெறிந்து விடும் என்று கூறினார். மிசோரமானது வங்கதேசம், மியான் மர் ஆகிய இரு நாடுகளுடனும் சர்வதேச எல்லையை பகிர்ந்துகொள்ளும் மாநிலமாகும். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டங்களில் குறைந்தது நான்கு வட கிழக்கு மாநிலங்கள் (நாகா லாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் சிக்கிம்) 100 கி.மீ. விதிவிலக்கை கடுமையாக எதிர்த்தன. இத்தனைக்கும் இவை எல்லாம் பாஜக அல்லது பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும். 100 கிலோமீட்டர் விதிவிலக்கை பொறுத்தவரையில் நாகாலாந்து மாநில வனப்பகுதிகள் முழுவதுமே ஒன்றிய அரசின் கைகளுக்கு சென்று விடும். வடகிழக்கு மாநிலங்களின் பூகோள ரீதியான அமை விடம் மிகவும் வித்தியாசமானவை. அசாம் தவிர மற்ற வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே சர்வதேச எல்லையில் இருக்கின்றன. எனவே ஏறக்குறைய வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே 100 கி.மீ.விதிவிலக்குக்குள் வந்து விடும் ஆபத்து இருக்கிறது என்று நாகாலாந்து மாநில அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் அறிக்கையளித்துள்ளது.
மேலும் இந்த 100 கிலோ மீட்டர் எல்லை முழுமை யாக இந்திய- பர்மிய உயிர்ப் பன்மயம் மிக்க ‘ஹாட்ஸ்பாட்’டுக்குள் வருகிறது. உலகிலேயே மிக அதிகமாக பல்லுயிர்களின் மரபணுத் தொகுப்புகள் உள்ள வளம்மிக்க பகுதியாகும். மிசோரமும் இதே கவலையை தெரிவித்துள்ளது. 100 கி.மீ. விதி விலக்கால் மிசோரத்தின் காடுகள் மற்றும் அனைத்து வகையான காட்டுயிர்கள் யாவும் அழிவுக்கு உள்ளா கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சட்ட வழி வகைகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்று மிசோரம் கூறியுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களின் தனித்துவமான நில உரிமை
நாகாலாந்தில் 90% க்கும் அதிகமான காடுகள் கிராம மக்களுக்கும், சமுதாயங்களுக்கும் சொந்தமாக உள்ளன என்கிறார் ஹெய்ரங் லுங்காலங். இவர் சமுதாயங்களால் நிர்வகிக்கப்படும் வனப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டாளர். நாகாலாந்து மாநிலம் ,டிசென்மியு மாவட்டம், செடென்யூ எனும் பகுதியில் உள்ள நான்கு பழங்குடி யினர் கிராமக் கவுன்சில்கள் ஒன்றிய அரசின் புதிய வன சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. நாகாலாந்து மாநிலம் முழுவதிலும் உள்ள பழங்குடியினர் கவுன்சில்கள் வன பாது காப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டுகோள் விடுத்துள் ளது. நாகாலாந்து பூர்வீகக் குடிகளின் நில உரிமை பாரம்பரியமாக தொடர்வதாகும். பிரிவு 371-ஏ வழங்கியுள்ள இந்த உரிமையை வனப் பாதுகாப்புச் சட்டம் மறுக்கிறது. பிரிவு 371 ன் படி காடுகள் பாது காப்பும் கிராமக் கவுன்சில்களின் பொறுப்பில் தான் உள்ளது. “முன்பு இருந்தது போல அல்லாமல் புதிய வனச் சட்டத்தின் படி ,கிராமக் கவுன்சில்கள் மற்றும் மலை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் முன் அனுமதி இன்றியே ஒன்றிய அரசு வனப்பகுதிகளை எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது”, என்று உயிர்ப் பன்மயம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு வாரியத் தலைவர் குவான்சிலோ கூறுகிறார்.
பழங்குடியினரின் பாரம்பரியமான நில உரிமைக்கு சாவு மணி
சூழலியல் செயல்பாட்டாளர் பியா சேத்தி என்பவர் இந்தியக் காடுகளில் வடகிழக்கு மாநிலங்கள் தான் உயிர்ப் பன்மய வளம் அதிகமாகக் கொண்டதாக உள்ளது. புதிய வனச் சட்டம் இதுவரை இருந்த வனப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீர்த்துப் போகச் செய்வ தால் வனப்பகுதிகள் வணிகரீதியான தோட்டப் பயிர்களுக்கு திருப்பி விடப்படும் அபாயம் உள்ளது என்கிறார். அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்த சிறப்பு உரி மைப் பிரிவுகள் 371 காரணமாக, இந்தக் காடுகளின் ஏராளமான பகுதிகள் ,ஒன்று தனி நபர்களாலோ அல்லது கிராமக் கவுன்சில் குழுக்கள் அல்லது சமு தாயங்கள் மூலமாகவோ நிர்வகிக்கப்படுகின்றன. 50% க்கும் அதிகமான மழைக் காடுகள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. இவை யாவும் வகைப் படுத்தப்படாத காடுகள் ஆகும். அதாவது புதிய வனச் சட்டம் கூறுவதன் படி, வகைப்படுத்தப்படாத காடுகளா கும். இவை வகைப்படுத்தப்படாத காடுகள் என்று ஆவணங்களின்படி அறிவிக்கை செய்யப்படவும் இல்லை. எடுத்துக்காட்டாக ,நாகாலாந்தில் 97.2%, மேகால யாவில் 88%, மணிப்பூரில் 76%, அருணாச்சலப் பிரதே சத்தில் 53%, திரிபுராவில் 43%, மிசோரத்தில் 15%, அசாமில் 33% நிலப்பகுதிகள் மழைக்காடுகள் ஆகும். இவை யாவும் வகைப்படுத்தப்படாத காடுகள் ஆகும். ஒன்றிய அரசின் சட்டத்தின்படி இந்த வனப்பகுதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கைகளுக்கு சென்று விடும். மேற்கண்ட நிலப் பகுதிகள் அனைத்தும் தனிப் பட்ட நபர்கள் குழுக்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஒருவேளை அரசு ஆவணங்களில் கூட இவைகள் இல்லாமலும் இருக்கலாம். புதிய திருத்தச் சட்டம் மக்களின் பாரம்பரிய பிறப்பு ரிமையுமான நில உரிமையையும், மண்டல உயிர் பன்மயத்தையும், சூழலியல் பாதுகாப்பையும் நாசப் படுத்தும். சர்வதேச எல்லையில் 100 கி. மீ. பரப்பை ஒன்றிய அரசுக்கு மிக எளிதாக கைமாற்றுவது பூர்வீகக் குடிகள் இதுவரை பாதுகாத்து வந்த இந்த வனமண்ட லங்களின் உயிர்ப் பன்மயத்தை அடியோடு அழித்தொழித்து விடும் என்கிறார் லுங்காலங்.
ஸ்க்ரால்.இன் இணைய இதழில் இருந்து
தமிழில் தொகுப்பு : ம.கதிரேசன்