உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ரஷ்யா, அதிலிருந்து தப்ப டிஜிட்டல் கரன்சி தொழில் நுட்பத்தை முன்கூட்டியே பயன்படுத்தி முதலீட்டாளர்களிடம் வர்த்தகம் செய்ய ஏற்கெனவே வியூகம் வகுத்துள்ளது. டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி அரசின் பிடியில் சிக்காமல் நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் சிக்கலின்றி வர்த்தகம் செய்யலாம் என உலக நாடுகளுக்கு பாடம் எடுத்துள்ளது ரஷ்யா. செக் பாயின்ட் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகள் வாயிலாக வும், பணத்தைப் பெறும் நாட்டின் அரசின் (மத்திய வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு) அனுமதி உடனும் தான் பரிமாற்றம் செய்ய முடியும். பொருளாதாரத் தடை விதித்தால் செக் பாயின்ட் சிக்கல்களை தனது நாட்டின் டிஜிட்டல் கரன்சி மூலம் ரஷ்யா எளிதாகச் சரி செய்துகொள்ள முடியும். இந்த விவகாரத்தை கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளம் கண்காணித்தாலும் பெரியளவில் கட்டுப்படுத்த முடியாது. காரணம் ரஷ்யாவிடம் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை பிளாக்செயின் தளத்தில் மறைக்கப் பல தொழில்நுட்ப சேவைகளை வைத்துள்ள காரணத்தால் ரஷ்ய அரசு, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் செய்யும் பரிமாற்றத்தை உடனடியாக அழிக்க முடியும். உடனடியாக அழிப்பதால் பொருளாதாரத் தடை விதித்துள்ள நாடுகள் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் எதனையும் கண்காணிக்க முடியாது.
டிஜிட்டல் ரூபிள்
புதிய முறையான டிஜிட்டல் ரூபிளை வைத்து வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை டாலருக்கு மாற்றாமல் தனியாக மாற்றம் செய்ய முடியும். இந்த திட்டத்தை 2014இல் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைக்கு பின்னர் ரஷ்யா தொடங்கிவிட்டது. டிஜிட்டல் ரூபிள் பொருளாதாரத் தடைகளைச் சிறப்பாக எதிர்த்துச் சுதந்திரமாக இயங்க முடியும் என ரஷ்யாவின் மத்திய வங்கி அக்டோபர் 2020-ஆம் ஆண்டே அறிக்கை வெளியிட்டது. உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பொருளாதாரத் தடை மூலம் பதிலடி கொடுக்க அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், ரஷ்யா தொலைநோக்கு பார்வையுடன் ரஷ்யா பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.