தமிழக அரசு சமீபத்தில் பெண்களுக்கான கொள்கை வரைவை வெளியிட்டு அதன் மீது ஜனவரி 31 வரை கருத்துக்களைத் தெரிவிக்க லாம் என அறிவித்திருந்தது. ஆங்கிலத்தில் வெளியிடப் பட்ட இவ்வரைவுக் கொள்கை அறிக்கையின் தமிழாக்கம் மிக தாமதமாகத்தான் வெளியிடப்பட்டது. அதனால், வரைவு அறிக்கை மீது கருத்துக்கள் சொல்வ தற்கான காலத்தை மேலும் ஒரு மாத கால அளவு நீட்டிக்க வேண்டும். நீண்ட காலமாக தமிழகத்தில் பெண்கள் குறித்த ஒரு கொள்கை என்பது உருவாக்கப்பட வேண்டுமென பெண்கள் இயக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலை யில் இக்கொள்கை தமிழக அரசால் உருவாக்கப் பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற உடனே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை நேரில் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தூதுக்குழு, அனைத்து பெண்கள் அமைப்புகள் அல்லது நிபுணர்களை இணைத்து கலந்துரையாடலை நடத்திய பிறகு பெண்க ளுக்கான கொள்கையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் பெண்கள் அமைப்புகள் மற்றும் நிபுணர் களைக் கொண்டு நடத்திய கலந்துரையாடலில் எழுந்த கருத்துக்களின் அடிப்படையில் பெண்கள் கொள் கையை வெளியிட்டார்.
பொதுவாக ஒரு கொள்கையை உருவாக்கும் போது அரசியல் சூழல்களைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை கடுமையாக அரித்துக் கொண்டிருக்கி றது. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதிப் பகிர்வை வெட்டிச் சுருக்கிக் கொண்டிருக்கிறது. அரசி யல், பொருளாதார, சித்தாந்த, பண்பாட்டுத் தளங்களில் பெண்களுக்கான உரிமைகளை நசுக்கிக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் இவற்றை கணக்கில் கொள்ளாமல் ஒரு மாநில அரசு கொள்கையை உரு வாக்கவோ அமல்படுத்தவோ முடியாது. எனவே இத னைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இக்கொள்கை அமைய வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறோம். இந்த வரைவுக் கொள்கை அனைத்துத் தரப்பு பெண்களுக்குமானதாக இருந்தாலும் கூட பொருளா தாரச் சுரண்டலுக்கும் சமூக ரீதியான ஒடுக்குமுறைக ளுக்கும் உள்ளாக்கப்படுகிற பெண்களின் பகுதியே அதன் அடித்தளமாக இருக்க வேண்டும்.
வரவேற்கத்தக்கவை
இவ்வரைவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களில் பெண்களின் உழைப்பு அளவீடு செய்தல், அதற்கான ஆய்வு, நில உரிமை, வாரி சுரிமை உள்ளிட்ட சட்டங்களை பெண்ணுரிமை, பெண் சமத்துவத்திற்கு சாதகமாக மாற்றுவதற்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ளப்படும் என்கிற கருத்து, நலத் திட்டங்கள் அல்லது பல்வேறு உரிமைகள், சலுகைக ளில் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு முன்னுரிமை, பிரசவத்திற்கான விடுப்பு, மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. அதேபோல் தனித்து வாழும் பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய அமைப்பை குடும்பமாக கருதாமல் அவர்களுக்கான ரேசன் அட்டை ரத்து செய்யப்படு வது வாடிக்கையாக இருக்கக்கூடிய சூழலில், ஒருவராக இருந்தாலும் கூட அந்தப் பெண்ணைக் குடும்பமாகக் கருதி ரேசன் அட்டை வழங்கப்படும் என்பதும் வர வேற்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல், சிறு, குறு வியாபாரம் செய்யக் கூடிய பெண்கள் தங்களுடைய வியாபாரப் பொ ருட்களை எடுத்துச் செல்ல தனியான போக்குவரத்து வசதி குறித்து பரிசீலிக்கப்படும் என்பது கொள்கை யில் ஓர் அம்சமாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட முழுமையான நிதி உதவி செய்யப்படும் என்பது உண்மையிலேயே சிறப்பான விசயமாகும். ஊடகத்துறையை பொறுத்தவரை பெண்களுக் கான சட்டங்களுக்கு முரணான காட்சி அமைப்புகள் வரும் பட்சத்தில் ‘புகைப்பிடித்தல் சட்டப்படி தவறு’ என போடக்கூடிய அதே பாணியில் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்கள் சட்டங்களுக்கு எதிரான காட்சிகள் வரும்போது ’இது சட்டப்படி தவறு’ என்று Short Story warning போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை
வன்முறையை எதிர்கொண்ட பெண்களுக்கான சாட்சியங்களை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். பெண்கள் குறித்த பிற்போக் கான கருத்துக்கள் விரவிக் கிடக்கக்கூடிய இச்சமூகச் சூழலில் அமலாக்கத் துறைகளில் பண்பாட்டுத் துறை யையும் கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கொள்கையில் வரக்கூடிய சில வார்த்தைகள் மாற்றப்பட வேண்டும். வறுமை உள்ளிட்ட பல பொருளாதாரக் காரணங்களுக்காக பெண்கள் பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்டுள்ளதால் அவர்க ளை பாலியல் தொழிலாளர்கள் என்று குறிப்பிடக் கூடாது. ‘திருநர்’ என்கிற வார்த்தையையும், ‘பாதிக்கப் பட்டவர்’ என்ற வார்த்தைக்கு மாற்றாக குற்றத்தை எதிர் கொண்டவர்கள் அல்லது அதைத் தாண்டி நிற்பவர்கள் என்கிற பொருள்படக்கூடிய வார்த்தைகளை கையாள வேண்டும். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி பிறப்பு விகிதாச்சாரம் 2015-16இல் 1000 ஆண் குழந்தைக ளுக்கு 954 பெண் குழந்தைகள் என்று இருந்தது. இப்போது (2020-21) 5 ஆண்டுகளில் பெண் குழந்தை கள் விகிதாச்சாரம் 878 என சரிந்திருக்கிறது என்பது மிகவும் அபாயமானது.
தமிழக சுகாதாரத்துறை, இந்த கணக்கீடு செய்வ தில் பல பிழைகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டினா லும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தேசிய சராசரியை விட பெண்களின் பிறப்பு பாலின விகிதாச்சாரம் குறை வாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் இதை உயர்த்துவதற்கான திசைவழி இந்த கொள்கை யில் இடம் பெற வேண்டும். அடுத்ததாக பட்டியலின, பழங்குடியினப் பெண்க ளின் முன்னேற்றம் வலுப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமமான குடிமக்கள் என்கிற முறையில் குடி மக்களுக்கு உரிய சகலவிதமான உரிமைகளும் அவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகை, பயிற்சிகள், தொழில்பயிற்சி, இனச்சான்றிதழ், குடி மனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்ப தற்கான உத்தரவாதம், அதனை நடைமுறைப்படுத்து வற்கான திட்டம் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்திற்கான மேலாண்மைக் குழுவில் பெண்களுடைய எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்பதை வன உரிமை பாது காப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதுடன் இணைந்த தாக கொள்கை இருக்க வேண்டும்.
பெண்கள் பெயரில் பட்டா
பெண்கள் விவசாயத்தின் பிரதானத் தொழிலா ளர்களாக இருந்தாலும் அவர்கள் விவசாயிகள் எனக் கருதப்படுவதில்லை. பெண்களுக்கான பட்டாக்கள் ஓரளவு இருந்தாலும் கூட, நில விநியோகம் தற்போது நடப்பது கிடையாது. அதனால் தமிழக அரசு நிலமற்ற ஏழைகளுக்கு, குடும்பங்களுக்கு, நில விநியோகம் செய்வது என்கிற முடிவையும் எடுத்து அதனுடைய ஒரு பகுதியாக பெண்கள் பெயரில் பட்டா என்பதை யும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் நீர்நிலை புறம் போக்குகளில் குடியிருக்கக் கூடிய மக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவினால் அவர்களுக்கு மாற்று இடம் தராமல், அகற்றப்படும் போது கூடுதலாக பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். அதனால் மாற்று இடம் என்பது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையின் முக்கியமான அம்சமாக இவர்களு டைய குடியிருப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. அடுத்தபடியாக பணியிடங்களில் பாலியல் துன் புறுத்தல் தடுப்பு கமிட்டிகள் அமைப்பது என வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய இடங்களில் ‘உள்புகார் கமிட்டியும்’ (Internal Complaints Committee) மாவட்டங்களில் (Local Complaints Committee) LCC என்பது அமைக்கப்பட வேண்டும்.
கழிப்பறை வசதிகள்
அதேபோல் பெண்களுக்கான சுகாதாரம் குறித்து பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுக் கழிப்பறைகள் இருந்தாலும் கூட தண்ணீரோடு கூடிய கழிப்பறைகள் என்பது குறைவு. கழிப்பறை வீட்டோடு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் அல்லது அதிகாலையிலே இயற்கை உபாதையை கழிப்ப தற்காக பக்கத்தில் இருக்கக்கூடிய முள் புதருக்கு/காடுகளுக்கு பெண்கள் செல்லும்போது பாலியல் தொந்தரவுகளும், பாலியல் வல்லுறவுகளும் நடக் கின்றன. இவை அனைத்தையும் இணைத்ததாக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். முதியோருக்கான பாதுகாப்பு வசதிகளை உறுதிப் படுத்துவது என்கிற இடத்தில் அரசு - தனியார் பங்கேற் போடு (Public Private Partnership) என்கிற கருத்தி யலை உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் இருக்கின் றன. கடந்தகால அனுபவத்தில் தனியாரும் அரசும் இணைந்து தான் இந்த திட்டங்களை செயல்படுத்தின. அது சாதாரண மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை. தனியாருடன் செயல்படுத்தும் திட்டங் களினால் கட்டணப் பிரச்சனை ஏற்படும். அது முதியோ ருக்குச் சாதகமாக இருக்காது.
பாலின நிகர்நிலை பயிற்சி என்பது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காவல் துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் இருப்பவர்களுக்கும் பாலின நிகர் நிலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அத்துடன் பதவி உயர்வு விவகாரங்களில் பாலின (நிகர்நிலை) தணிக்கை (Gender Audit) என்ற அம்சம் இணைக்கப்பட வேண் டும். பெண்கள் மீதான வன்முறை வழக்குகளைக் கையாளாத காவல்துறை அதிகாரிகள் மீது வர்மா கமிசன் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இணையதளங்களில் பெண்கள் மீதான தாக்கு தல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான விஷ யங்களில் போதுமான முக்கியத்துவம் வரைவுக் கொள்கையில் இல்லை. எல்லா பாடத் திட்டங்களிலும் பாலின நிகர்நிலை கண்ணோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கேரளத்தில் உள்ளதுபோல் பெண்களுக்கான தற்காலிக தங்கும் விடுதிகளை அமைப்பதில் நக ராட்சி, மாநகராட்சிகளைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.
அரசுத் துறையில் காலிப் பணியிடங்கள் கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கு மேல் தமிழகத்தில் இருக்கும்போது, இவற்றையெல்லாம் நிரப்புவது என்கிற அரசின் கொள்கையோடு தான் பெண்களுடைய வேலை வாய்ப்பு இணைந்து வருகிறது. நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகாலமாக முன் வைக்கிறது. முதலீட்டோடு வேலைவாய்ப்பு என்பதும் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு வேலைவாய்ப்பு இணைக்கப்பட்டால் தான் முதலீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் தொழில் தொடங்குவதற்கான உதவிகளை அரசு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதோடு சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்துத் துறைகளிலும் அமலாக்கம் செய்ய வேண்டும்.
தனி வங்கிக்குப் பதிலாக...
ஏற்கனவே ஏராளமான வங்கிகள் இருக்கும்போது தனியாக ஒரு வங்கி துவக்குவதில் பலன் கிடையாது. ஏற்கெனவே இருக்கக்கூடிய வங்கிகளில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்கான உத்தரவா தத்தை கொள்கை உறுதி செய்ய வேண்டும். நுண்நிதி நிறுவனங்களால் பல குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிற சூழலில் நுண் நிதி நிறுவனங்களுடைய கடன் மீதான வட்டி குறைக்கப்பட வேண்டும். தவறி ழைக்கும் நுண்நிதி நிறுவனங்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும், காவல்துறை கண்காணிக்கும் என்ற நிலைமையை கொண்டு வர வேண்டும். குறைந்த வட்டியில் வங்கிகள் மூலமாக குறிப்பாக கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெண்களுக்கு கடன் கிடைப்ப தற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இது சம்பந்தமான போதுமான அம்சங்கள் இந்தக் கொள்கையில் இல்லை. குடிநோய் சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கும் விஷயமும் இந்தக் கொள்கையில் இடம் பெற வேண்டும். இந்தக் கொள்கை இது குறித்து மௌனம் சாதிப்பது உண்மையிலேயே வருந்தத் தக்கதாக இருக்கிறது. Scheme workers என்கிற முறையில் வீடுசார் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு (Home ¡õased Workers) ஊதியம், பணி பாதுகாப்பு, கண்ணியமான வேலை உள்ளிட்டவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சிகளில் பெண்கள் சுயமாகச் செயல்பட...
அரசியல் களம் குற்றமயமாக்கப்படுவதைத் தடுப்ப தற்கான சில சிறப்பான அம்சங்கள் இந்தக் கொள்கை யில் இடம் பெற வேண்டும். உள்ளாட்சியில் பெண்க ளுக்கு 50 சதவீதம் இருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு அந்தப் பெண்கள் சுயமாகச் செயல்படுவ தற்கான அந்த வாய்ப்பு வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அடுத்து இந்தக் கொள்கையில் அதிகம் இடம் பெறாத சாதிய, மதவாதச் சூழல் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் இருக்கிறது. தமிழகத்திலேயே அது மிகப் பெரிய அளவிற்கு இருக்கிறது. பட்டியலின, பழங்குடி யின மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டக் கூடிய விசயங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய ஆணவக் கொலைக்கெதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். சிறுபான்மை பெண்களுடைய பாதுகாப்பு, கல்வி, சுய தொழிலுக்கான ஏற்பாடு, வேலைவாய்ப்பு ஆகி யவை வரைவுக் கொள்கையில் ஒரு முக்கியமான அம்சங்களாக இடம் பெற வேண்டும். பெண்கள் மீது வசைச் சொற்களைப் பயன்படுத்தும் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மேல் ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். திட்டமிட்ட முறையில் பரவலாக பெண் சமத்துவக் கருத்துக்களை தொடர்ச்சி யாகப் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு ஏற்பாடு கொள்கை யில் இடம்பெற வேண்டும்.
இந்தக் கொள்கை முறையாக அமலாக்கப்படுகி றதா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு உயர் மட்டக்குழு போடப்பட்டிருக்கிறது. இந்த உயர்மட்டக் குழுவில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளே கிடையாது. உலக வங்கியின் பிரதிநிதிகள் இடம் பெற்றி ருக்கின்றனர். மாநிலத்தில் பெண்களுடைய முன்னேற் றத்திற்காக கொண்டுவரப்பட்ட கொள்கை அமலாக் கத்தை உலக வங்கி கண்காணிக்க வேண்டிய அவசிய மில்லை. எனவே அந்தப் பிரதிநிதி அகற்றப்பட்டு பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும். அதேமாதிரி இந்தக் கொள்கை குறித்த அமலாக் கத்தை மதிப்பிட கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இந்த கமிட்டியில் பெண்கள் அமைப்பு, பெண்கள் பிரச்சனை யில் முன்னோடியாக இருக்கக் கூடிய தனிநபர்கள், நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்தக் கொள்கை அமலாக்கம் செய்யப்படுவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த வரைவுக் கொள்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் கருத்துக்களை அனுப்பி இருக்கிறது. மாநில அளவில் பெண்களுடைய முன்னேற்றத்தை முன்னெடுக்கக் கூடிய இவ்வளவு முக்கியமான விஷ யத்தில் அரசியல் கட்சிகள் பாராமுகமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்துவ தற்கான அரசியல் என்ன உறுதியோடு தமிழக அரசும் சமூக நலன் மற்றும் மக்களின் உரிமைக்கான துறையும் தொடர்ந்து இதை முன்னெடுக்க வேண்டும்.
தொகுப்பு: சந்தியா ராகினி