articles

img

இத்தாலியன் பூவும், இதமான குளிரும் உதகமண்டலத்தின் அழகு

கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது உதகமண்டலம் என்கிற ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற் றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் உதகமண்டலம் அமைந்துள்ளது. குளிர் கால நிலை நிலவு வதால், உலகத்தின் கவனத்தை ஈர்த்த பகுதி யாக உதக மண்டலம் திகழ்க்கிறது. பிரிட்டி ஷார் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் என அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி ஊட்டி என்றானது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் ஏரி  பூங்கா. மேலும் 1978 ஆம் ஆண்டு கண்ணாடி யால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உரு வாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயி லும், உதகை படகு இல்லமும் சுற்றுலா பய ணிகளை ஈர்க்கும் பகுதியாக உள்ளது என்றால் மிகையல்ல.   2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக  எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக் கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்ட லம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த் தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மலை வாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப் படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடியினர் இருளர், குரும்பர், பனியர், தொதவர் எனப்படும் தோடர், கோத்தர், நாயக்கர் போன்ற பழங்குடியினர் உள்ள னர். 

அரசு தாவரவியல் பூங்கா

1897 ஆம் ஆண்டு உதகை தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. 22 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா, 100க்கும்மேற்பட்டகுடும்பங்களைசேர்ந்த 200க்கும்  மேற்பட்ட தாவர இனங்களும், 150க்கும் மேற்பட்டவகைகளில் வெளிநாட்டு மரங்களும், ஆயிரக்கணக்கில் அலங்கார செடிகளும் காணப்படுகின்றன.  மேலும், கண்களை கவரும் வகையில் பச்சை பசேல் என்ற புல்வெளியும் உள்ளது. இந்த புல்வெளியின் அருகாமையில் பல  ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இத்தாலியன் பூங்கா, புல்வெளி, குளங்கள்,  இந்திய வரைபடம், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், விதைக் கூடம் மற்றும் விற்பனை நிலையமும் உள்ளது. உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து  சுமார் 2 கி.மீ தொலைவில் அரசு தாவர வியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கோடை சீசனின் போது, மலர் கண்காட்சி 5 நாட்களுக்கு நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை பார்ப்பதற்கு உள்நாட்டில் மட்டுமல்லாது உலக நாடு களில் இருந்தும், லட்சக்கணக்கானோர் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

படகு இல்லம்

உதகை மத்திய பேருந்து நிலையத்திலி ருந்து சுமார் 2.கி.மீ தொலைவில் உதகை படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்று லாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலாதுறைக்கு கீழ் இயங்கும் இந்த படகு இல்லம் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இந்த படகு இல்லத்தில் படகு சவாரி மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு தலங்கள், மினி ரயில், குதிரை சவாரி என பல சிறப்பம்சங்களுடன், படகு இல்லத்தின் மறுகரையில் தேனிலவு படகு இல்லமும் உள்ளது. மொத்தம் 133 படகுகளில் 33 இயந்திர படகுகளில், 9 துடுப்பு படகுகளும், 91 இதர படகுகளும் உள்ளது. மிதி படகில் 40 மிதி படகு இருவர் இருக்கையையும், 51 மிதி படகு நால்வர் இருக்கையையும் கொண்ட தாகும். இதில் உயிர்காக்கும் படகு, எந்த நேரமும் சுற்றுலாப் பயணிகளை காப்பதற்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும். 

கொள்ளை அழகு கொடநாடு

அரசியல் விவாத பொருளாக தற்போது கொடநாடு மாறியிருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில், கொடநாடு முக்கிய இடம்  வகிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெய லலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு கொட நாடு பங்களா பேசுபொருளாக இருந்தா லும், இங்குள்ள காட்சி முனையம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள கொடநாடு காட்சிமுனையில் இருந்து, மேடநாடு, ரங்க சாமிபில்லர், தெங்குமரஹாடா, மாயாறு,  பவானிசாகர் அணை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திப்புசுல்தான் கோட்டை உள் ளிட்டவற்றை அதிநவீன தொலைநோக்கி யில் பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் இடமாக கொடநாடு உள்ளது.  கடல் மட்டத்தில் இருந்து1785  மீட்டர் உய ரத்தில் உள்ள இந்த பகுதியில் அதிக அள வில் இருளர் சமூகத்தினர் வாழ்ந்து வரு கின்றனர். நிலப்பரப்பில் இருந்து 250 மீட்டர்  உயரத்திற்கு மிக பிரமாண்டமாக காணப் படும் ரங்கசாமி சிகரம் இப்பகுதியில் உள் ளது. அடிக்கடி தோன்றும் மேகமூட்டங்க ளால் பொதுவாக இந்த மலையினை  தெளி வாக காண்பது அறிது.

கோத்தகிரி நேரு பூங்கா 

கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம், மூன்ற டுக்குகளில் அமைந்துள்ள ரோஜாசெடிகள், பூங்கா நடைபாதையின் இருபுறங்களிலும் உள்ள பாத்திகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பு  மிகச் சிறிய பூங்க என்பதால் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.